புதன், 13 ஜூன், 2018

பாட்டும் பதமும் 53 துள்ளாத மனமும் துள்ளும்


"துள்ளாத மனமும் துள்ளும் , சொல்லாத கதைகள் சொல்லும் " பேசாலைதாஸ்  

நான் இரசித்து சுவைக்கும் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. 1957 ஆண்டு வெளிவந்த கல்யாணப்பரிசு படத்தில் இடம் பெறது இந்த பாடல். பாடல் ஆசிரி யர் புமைக்கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இசை எ.எம்.ராஜா, பாடியவர் ஜிக்கி. பாடல் ஆசிரியரைப் பற்றி சற்று இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும்.  பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாட்டு என்பதை பாங்கோடு தந்த பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப் பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின் உணர் ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜன ங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன. துள்ளாத மனமும் துள்ளும் என்ற பாடலில் உள்ள வரிகளைப்பாருங்கள்! 


                                                    துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும், இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும் – இசை இன்பத் தேனையும் வெல்லும். தேன் இனிமையிலும், இசை மதுரமானது, அது தேனையும் வெல்லும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவ தும் கீதம்,என்று சொல்லும் கல்யாண சுந்தரத்தை போற்ற மால் இருக்க முடியுமா? துன்பம் வந்தால், இசை என்ற படகில் ஏறிவிட்டாலே போதும், கவலைகளை மறக்க, இசை தோணி போல தாலாட்டும்! அதுமட்டுமா? எங்கும் சிதறும் எண்ண ங்களையும் இழுத்து வருவது கீதம் .இணைத்து மகிழ்வதும் கீதும் துயர் இருளை மறைப்பதும் கீதம். இசையின் சிறப்பை, கீதத்தின் மகிமையை இதைவிட சிறப்பாக என்னால் சொல் லமுடியாது. இனி நீங்களே பாடலைகேட்டு முடிவு செய்யுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...