வெள்ளி, 29 ஜூன், 2018

58 பாட்டும் பதமும் அதிசய ராகம் ஆனந்தராகம்

அதிசய ராகம் ஆனந்தராகம் அழகிய ராகம் அபூர்வராகம்!  பேசாலைதாஸ்

                                                                எனக்கு தெரிந்த ராகங்கள் பற்றி சினிமா பாடல்களில் அவ்வப்போது சிலாகித்து வருகின்றேன். ராகங்கள் பற்றி சொல்லிக்கொண்டு போகும் போது, இந்த பாடலை விட்டுவிடமுடியுமா? 1975 வெளிவந்த இயக்குணர் சிகரம் பாலச்சந்தரின் அபூர்வராகம் படத் தில் அமைந்த பாடல், பாடலை கவியரசு எழுத ஜேசுதாஸ் இந்தப்பாடலை தனது ஆண்மையும் , இனிமையும் , கம்பீரமும் , நிதானமும் ,ஆழமும் மிக்க குரலால் பாடி சிறப்பித்திருக்கின்றார்.

                                                                               படத்தின் தலைப்புக்கேற்ப அமைந்த இந்தப்பாடல் சுவையுணர்வின் தனித்தன்மையுடன் அரிதான ராகமாகக் கருதப்படும் மகதி ராகத்தில் முன் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.  பாடல் அமைந்த ராகங்கள் மகதி , பைரவி.மகதி ராகம் கேட்பதற்கு வலஜி என் கிற ராகம் போலவும் இருக்கும். அருமையான இசையமுதம்! புதிதாய் மலர்ந்திருக்கும் ஒரு அழகிய மலரின் இளமை வனப்பும் , மென்மையும் ,எளிமையும் கொண்ட இசைப்படைப்பு. ராகத்தின் ஆழமும் ,கூர்மையும் ,இனிமை யும் ஒன்று சேரக் காட்டும் உயிர்த்துடிப்பு மிகுந்த இந்தப்பாடல் இளைஞன் ஒருவனின் காதல் உணர்ச்சிப்பெருக்கை நிதானத்துடன் ,அமைதியுடனும் வெளிப்படுத்துகிறது. 

                                                                                    பாடலின் பின்பகுதியில் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தும் விதமாக பிரகடனம் செய்ய வேண் டிய தேவை ஏற்படுவதால் பைரவி ராகத்தில் அமைகிறது. அரிதான ராக த்திலேயே இனிமையும் ,எளிமையுமிக்க பாடல்களை அள்ளி வீசி மெல்லி சையில் புதுப்பாதை வகுத்து தன்னை மாபெரும் இசைமேதை என எத் தனயோ பாடல்களில் நிரூபித்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.  

                                                                                    கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் என்பன ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர் கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை விட்டகலாததா கும். இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர் 
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர் 
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர் 
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே! 

இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான் உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப் போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு. சரி என் அன்பின் இசை இரசிகர்களே உங்களுக்காக பாடலை இங்கே தருகின்றேன் 

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
மோகம் மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் – அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி   அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...