"சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர், சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே ஆரிரோ… அன்பே ஆராரோ!"
நான் அவ்வப்போது என்னை மறந்து பாடும் ஒரு தாலாட்டுப்பாடல் இது! பதிபக்தி திரைப்படத்தில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல். பட்டுக்கோட்டையின் பாடல்களில் மண்வாசணைக்கேற்றவாறு பாடல் த்றன் அமைந்திருக்கும். அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.
சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும் தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது, பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மிக இயல்பாய் காணலாம்.
மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன. பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட பாடல்கள் போலவே திகழ்கின்றன. பதிபக்தி படத்தில் , சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே ஆரிரோ… அன்பே ஆராரோ! என்ற தாலாட்டுப்பாடலை கேட்கும் போது, தாலாட்டில் தாயின் பாசத்தைவிட, தமிழின் வாசம் தூக்கி வீசுகின்றது!
குப்பைதனில் வாழும் குண்டுமணிச் சரமே! குங்குமச் சிமிழே..என்ற வரிகளிலே தமிழின் செழுமையும். மாடிமனை வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம். வளரும் பிறையே நீ போதும்.... .என்ற வரிகளில் மானிட நேசத்தையும் ஏழை நம் வாழ்வை எண்ணி நொந்தயோ, எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ என்ற வரிகளில் ஏழை பாங்கையும்.. நாளை உலகம் நல்லோரின் கைகளில் என்ற வரிகளில் நம்பிக்கை தருவதாக பாட்டுக்கொரு அரசன் பட்டுக்கோட்டையாரின் பாடல் அமைகின்றது. இனி பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக