செவ்வாய், 19 ஜூன், 2018

பாட்டும் பதமும் 54 திருடாதே... பாப்பா திருடாதே

பாட்டும் பதமும் 54     திருடாதே... பாப்பா திருடாதே
பட்டுக்கோட்டையின் இன்னுமொரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது,  எளிமையாக பாமரமக்கள் புரிந்து கொள்ளும் மாபெரும் உண்மையை தத்துவத்தை எளிதாக பாடலில் புகுத்தியவர் பாட்டுக்கொரு அரசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திருடாதே பாப்பா என்ற பாடல் பாரதியின் பாப்பா பாட்டுக்கு நிகரனாது. 1961 இல் வெளிவந்த எம் ஜீ ஆர் நடித்த திருடாதே படத்தில் இடம் பெற்ற பாடல், இசை சுப்பையா நாயுடு பாடியவர்: T.M. சௌந்தரராஜன். ஒரு கதையோடு பாட்டின் பத்ததினை விளக்குகின்றேன்

                                             அன்பர்களே ஒருவன் தவறுசெய்தால், அவன் தன் தவறை உணர்ந்து திருந்தி வாழ, அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். அதிகமாக நோர்வே நாட்டில் ஒருவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அது தண்டிப்பதற்காக அல்ல, அவனை நல்ல மனிதானாக்க சீரையில் அவனுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும். நம்து நாட்டில் சித்திரக்கூடமாக, கொலைக்களமாக சிறைச்சாலைகள் மாறிவருகின்றது, திருடனாகப்பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாது
ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர் கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து, ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் கள வுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.
குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர். குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார். கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறி னர். குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன் னார், ''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.
                                                 குரு மீண்டும் அவர்களிடம் பேசினார், ''உங்கள் அனைவருக்கும் உலகில் நல் லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச் சினையும் இல்லை. ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை. இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது எது, கெட்டது எது என்று நான் தான் சொல்லித்தர வேண் டும். எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என் பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.'' என்றார். சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர். அன்புடன் பேசாலைதாஸ்

திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே...

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ

திருடாதே... பாப்பா திருடாதே...

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே... பாப்பா திருடாதே...

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இனி எடுக்குற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...ஆ......ஆ......
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…ஆ....ஆ......
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா..ஆ.......ஆ.......
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது

திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே
... பாப்பா திருடாதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...