புதன், 6 ஜூன், 2018

பாட்டும் பதமும் 52 இறைவன் என்றொரு கவிஞன்


"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன்" பேசாலைதாஸ்

கவிஞர் கண்ணதாஸன் எழுதிய இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஏன்? 1970 இல் வெளிவந்த படம், இசை அமைப்பாளர் விஸ்வனாதன் அல்ல T.R.பாப்பா! கடவுளைப்பற்றி கண்ணதாசன் நிறைய தத்துவப்பாடல் எழுதியுள்ளார். சந்தர்ப்பம் வரும் போது அதனைப்பற்றி நாம் சிலாகித்துக்கொள்வோம். கவிதை கவிஞன் கடவுள் கண்ணதாசான் இப்படியே க வரிசையில் சிந்தனை செய்தால், கொஞ்சம் நிமிர்ந்து இருந்து இரசிக்கச் செய்யும் அவரது பாடல்கள். இந்த பாடல் எனக்கு ரெம்ப‌வும் பிடிக்கும். கவிஞனை கடவுளிந்தரத்துக்கு உயர்த்துகின்றது இந்தபாடல்! "கற்பனை என்பது கடவுளின் படைப்பு , கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு " இந்த வரிதான் என் புருவங்களை உயர்த்தி சிந்திக்கவைத்தது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை படைக்கவேண்டும், எழுதவேண்டும்  என்ற எண்ணத்துடிப்பை தந்தே எனக்கு இந்தபாடல்தான்!
     இந்தபாட்லில் கவிஞர் வாழ்வின் தத்துவங்களை, பிரபஞ்ச தத்துவத்தை மிக எளிதாக விளக்குகின்றார். வாழ்க்கை என்பது வட்டம், இயறகை என்பதும் ஒரு வட்டமே! இதை மிக மிக எளிதாக "ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று"  இலகுவாக எழுதியுள்ளார். கண்களில் தொடங்குவது காதல் அதானல் வருவது மனித உயிர்கள். கண்களில் முடித்தான் என்று மரணத்தை குறித்து எழுதுகின்றான். மனிதன் ஆரம்பமாவ்து பெண்ணூக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே! கண், பெண், மண் இந்த மூன்று வரி தத்துவத்தை என் கவி ஆசான் கண்ணதாசனைவிட வேறு யாரால் சொல்லமுடியும்?
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியைப் போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்திலிருந்தே கவிதையை முடித்தான்.
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கருவிலிருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இனிப்பாடலை கேளுங்கள் 
அன்புடன் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...