"கண்னொரு பக்கம், நெஞ்சொரு பக்கம் பெண்னோடு போராடுது, கள்ளொரு பக்கம், தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது" பேசாலைதாஸ்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம், நிறை குடம், இசை விஸ்வநாதன் அல்ல, வி.குமார் என்னும் இளம் இசைக்கலைஞர். கண்ணதாசனின் காதல் போதை தரும் பாடல்களில் இதுவும் ஒன்று, பெண்ணை அனுபவித்த ஒரு அனுபவ தரிசனம் இந்த பாடலைகேட்கும் போது நமக்கு உண்டாகும். அழகான அதுவும் வசீகரமான பெண்ணழகை கண்டாள், துள்ளாதமனமும் துள்ளிப்போராடும், போராடும் போது கண்கள் நெஞ்சம் என்ன பாடுபடும்? கள்ளுண்ட போதை வந்தால் மயக்கம் வரும், தேன் உண்டால் தெவிட்டல் தரும் இன்பம் வரும் இது எல்லாம் பெண்ணை தொட்டாலே வ்ரும் என்பதை கவிஞர் கண்ணதாசன் தன் பாடலில் தருகின்றார். ஆசை வேகம் போகப்போக, கேள்வி கேட்காது என்று கவிஞருக்கு எப்படி தெரியும்? உண்மைதான்! ஆசை வேகம் கூடக்கூட அங்கே மெளனம் சம்மதமாகி, பெண்மை தன்னையே கேள்வி ஏதும் கேட்காமல் சரணாகதி அடையும். சின்ன தோட்டம், சில் என்ற காற்றில்,.சிறையும் போடாது என்று கவிஞர் இங்கு சொல்லவதை நான் மறுதலிக்கின்றேன். காவியத்தலைவன் ஏற்கனவே சிறைப்பட்டு கிடக்கும் போது, மேலதிக சிறைகள் எதற்கு கவிஞரே? அன்பர்களே நீங்களும் இந்த பாடலைக்கேட்டு, உங்கள் மனைவி யரை, காதலியை நேசியுங்கள் இரசியுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக