ஞாயிறு, 1 ஜூலை, 2018

பாட்டும் பதமும் 60 நிலவு தூங்கும் நேரம்!

நிலவு தூங்கும் நேரம்! நினைவு தூங்கிடாது, இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது!  பேசாலைதாஸ்


எனக்கு பிடித்தமான மோகன ராகத்தில் அமை ந்த அமைதியான அழகான பாடல் இது, இளவரசியும் மோகனும் பாட்டுக்கு அசத்துரா ங்க! அமைதியான இரவு, நிலாவொளியில் நுன்னிய காதலை வெகு அற்புதமாக மோகன ராகத்தில், சுரம் பிரிக்கின்றார் இளைய ராஜா! பாடல் இடம் பெற்ற திரைப்படம், குங்கு மச்சிமிழ்! இந்த படம் வெளிவந்த போது, நான் இந்தியாவில் ஒரு போராளியா, காடுகளுக்குள் போர்ப்பயிற்ச்சி எடுத்தகாலம் அது! எனக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போது இருந்ததில்லை, எல்லா தமிழ் பல்கலைக்கழக இளைஞர்கள் போல, கனவுகளையும், இலட்சியங்களையும், காதலையும், தொலைத்தவர்களில், நானும் ஒருவன்! கடைசியில் போராடப்போன இயக்கமும் கன்வு போல களைந்துபோனது, எல்லாமே கனவுகளாகி, விரக்தியுடன் வெளிநாடு போய் தொலைக்கலாம் என பம்பாய், தாராவியில் தங்கியிருந்து, விமானம் அண்ணாந்து பார்த்து, தவம் கிடந்து ஆகாய கப்பல் ஏறிய அந்த ஏக்கமான காலங்களில், இந்தபாடல் இதயத்துக்கு ஒரு ஒத்தடமாக அமைந்ததை மறக்கமுடியுமா? பாடல் காட்சிகள், நிலாக்காலத்தில் பேசாலை கடற்கரையை நினவுக்கு கொண்டுவருகின்றது. நள்ளிரவிலே ,இருளை தொலைத்த , கோடை கால துருவ நாட்டில் (நோர்வே) இருந்து கொண்டு, நிலாவையும் எனது பேசாலை கடற்கரையையும், காரிலே இருந்தபடி கற்பனை செய்வதில் ஒரு தனிச்சுகம்!

                                      நிலவு என்றாலே கவிஞர்களுக்கும், காதலர்களுக்கும் தேனடை! எனக்கும் நிலாவிலே ஒரு மயக்கம்!
நிலவுக்காக இளையராஜா அழகான பாடலை மோகன ராகத்தில் நெசவாக, மிக நேர்த்தியாக நெய்திருகின்றார். இளையராஜாவின் இசையே.அவருடைய பாடல்களைப் பாடும் எந்த பாடகரோ பாடகியோ , அல்லது நடிகரோ யாராக இ ருந்தாலும் அங்கே இளையராஜா இசை என்றே அறியப்படும்..அந்த அளவுக்கு அவரது இசை அவரை அடையாளம் காட்டி இருக்கிறது. இளையராஜாவுக்கு முந்தைய இசைமேதைகள் எல்லோரும் மரபு வழி நின்றும் , மீறியும் மோகனத்தில் நல்ல பாடல்களைத் தந்தாலும் ,அவர்களை விட மேலைத்தேய ஹார்மொனி இசையை விஸ்தாரமாக நமது மரபு இசையுடன் இணைத்த பெருமை இளையராஜாவின் இசைச் சாதனை ஆகும். இம்மாதிரியான இசைக்கலவை இசை எனபது தமிழுக்கு மிகவும் புதியது.இப்படிப்பட்ட ஹார்மொனி கலந்த இசையை இந்தியாவில் வேறெங்குமே கேட்க முடியாது.இந்தவகை இசையை பெரும்பாலும் ஒவ்வொரு பாடலிலும் கேட்டு மிகிழலாம்.

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான் …
வாழ்வோம் வா கண்ணே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..

கீதை போல காதல் மிக புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்… ஏன் தயக்கம்…
கண்ணே வா இங்கே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...