முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்! சந்தித்தவேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை! பேசாலைதாஸ்,
அழகான பெண்களை, வசீகரமான கண்களை கண்ட மாத்திரத்தில், நான் அழுகு வண்ணம் கண்டு, உணர்ச்சிகள் பேத லிக்கும்போதெல்லாம் என் சிந்தையில் தானாகவே வந்து மோதும் பாடல் இது!
ஒரு முறைபாடிவிட்டாலே மனதுக்குள் பொங்கிப்பிரவாகிக்கும் உணர்ச்சி அலைகள். கவிஞர் உண்மையில் அனுபவித்து எழுத, அதை அப்படியே அனுபவித்து பாடியிருப்பார் செளந்தரராஜன். பாடல் இடம் பெற்ற படம் நெஞ்சிருக்கும் வரை, உண்மைதான், நெஞ்சியிருக்கும்வரை இந்த பாடல் நினைவில் இருக்கும்!
பிருந்தாவன சாரங்கா இசையில் அமைந்தது இந்த பாடல்! இன்பத் திளைப்பும் , இனம்புரியாத பரவசமும் ,அழகுணர்ச் சியும் தரும் ராகங்களில் பிருந்தாவனசாரங்கா ராகத்திற்கு தனிச்சுவை உண்டு. இசைகேட்டல் எனும் பரவச உணர்வில் மனதுக்கும் ,ஆன்மாவுக் கும் தனியின்பம் தரும் ராகம் இது. மற்றைய ராகங்களைப் போலவே இந்த ராகமும் பழைய காலம் தொட்டு இன்று வரை நம்மைத் தொடர்ந்து வருகிறது.
தூரத்தில் மின்னி ,மின்னி ஒளிரும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல அருகில் வருவது போல மென்மையானஒலித்திவளைக ளால் பாடலுக்கு அடி எடுத்துக் கொடுக்கும் இசை! குளிர் வீசும் இளம் தென்றல் போல் ஆரம்பிக்கும் பாடல். பிருந்தாவனசாரங்கா ராகச் செறி வில் இப்படியும் ஒரு அழகான பாடலா என்று எண்ணி ,எண்ணி வியக்க வைக்கும் மெல்லிசைமன்னரின் இனிய பாடல்.
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம், சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை, படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன? கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட எழுந்த இன்பம் என்ன, என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன! ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?
ஆஹா என்னே அற்புதமான வரிகள்! பார்வை அது பாலில் ஊறிய ஜாதி பூவாம்! விருந்து கேட்பதே கூடாது, அதையும் விரைந்து கேட்கலாமா? சொல்லுங்கள், என்ன விருந்து என்று மடும் தயவு செய்து என்னை கேட்காதீர்கள். நீங்களே பாடலை கேட்டு ஊகித்துக்கொள்ளுங்கள்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக