திங்கள், 25 ஜூன், 2018

மீனவர்களின் அம்பா பாட்டு தொடர் 03

இந்த வகையான அம்பா பாடல், படகு வலிக்கும் போது மீனவர்களினால் களைப்பு தெரியாமல் இருப்பதற்கும், விரைவாக படகை செலுத்துவதற்கும் பாடப்படுகின்றது. மாயவலை (அம்பா) ஏலம்மா ஏலேலோ ஏலோ ஐயா ஏலேலோ ஏலேலம்மா ஏலேலோ ஏலேலையா ஏலேல் ஓ மேலவல கீழவல மாயவல மடவல அத்தரிப் பாச்சான் ஆளுக்கொண்ட மடக்கு சுறுக்கன் சூசை காடேறி தீயில் சுட்ட தேக்குமரம் மேலவல கீழவல மாயவல மடவல அத்தரிப் பாச்சான் ஆளுக்கொண்ட மடக்கு செருக்கன் தீயோ மலையேறி தோளில் சுமந்த கொம்பேரா கரவல ஓலவல மாயவல மடக்கு மடவல கிழவல கீழ என்ன கிடக்கு கணக்கன் கயித்தான் கணக்காக கயிறு பிடிச்ச கடலோடி வழிவல சூடவல வழியில கிடக்கு வழியில போறவள முலையென்ன விடுப்பு. இந்தபாடலை பதிவு செய்த மெலிஞ்சிமுனை தமயந்திக்கு நன்றிகள் உரித்தாகுக! அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...