சனி, 30 ஜூன், 2018

பாட்டும் பதமும் 59 துனிந்த பின் மனமே துயரங்கொள்ளாதே

"துனிந்த பின் மனமே துயரங்கொள்ளாதே சோகம் பொல்லாதே " பேசாலைதாஸ்

                                                         தேவதாஸை காதலிப்பவர்கள், நான் என்னைச் சொல்லவில்லை, தேவதாஸ் திரைப்படத்தையும், தேவதாஸ் நாவலையும் இன்றும் கூட சிலர் ஆவலாக தேடிப்பார்த்து, வாசித்து மகிழ்கின்றார்கள். அப்படி என்னதான் இருக்கின்றது அதில்? இருக்கின்றது என் இரசிகர்களே, தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல் களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் திரைப்படம் பல மொழிகளில், பல நடிகர்களால் நடிக்கப்பட்டுள்ளது.

                                            நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாசு. பிமல்ராயின் தேவதாஸ், திலிப்குமார் நடித்த தேவதாஸ், சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ், அனுராக் காஸ்யபின் தேவ் டி, மலையாள தேவதாஸ், கிருஷ்ணா நடித்த தெலுங்கு தேவதாஸ் என மாறிமாறி  படங்கள்! ஒரே கதை ஒரே கதாபாத்திரங்கள்.  பழைய தேவதாஸ் திரைப்படத்தைத் தேடி பார்க்கின்றவர்கள் இன்றுமிருக்கிறார்கள். ஆனால் தேவதாஸ் நாவலை அப்படி தேடிப்படிப்பவர்கள் குறைவே நானும் இன்னும் கூட வாசிக்கவில்லை . இவ்வளவிற்கும் இந்த நாவல் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 1917 ஆண்டு இந்த நாவல் வெளிவந்துள்ளது. ஆனால் திரைப்படமாக 1953 தான் வெளிவந் தது. முதல் காதல் திரைப்படம் என்று இதனை சொல்லலாம், பால்ய விவாக த்தை எதிர்த்தும், காதல் திருமணத்தையும் வலியுறுத்தி வெளிவந்த முதல் சமூகப்புரட்சிப்படம் தேவதாஸ்:

                                                                   நான் 1958 இல் பிறந்தேன், அந்த ஆண்டில் இனக்கலவரம் இலங்கையில் மீன்டும் வெடித்தது. எனது தகப்பன் சோக்ரா என்று அழைக்க படும் லோறன்ஸ் பீரிஸ்,  எனக்கு தேவதாஸ் என்று பெயர் இட்டார். அந்த காலத்தில், பேசாலை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்  கிறிஸ்தவ பெயர்களைத் தான் வைப்பார்கள். ஆனால் எனது தகப்பன் மாற்றி யோசிப்பவராச்சே! சோக்ரா காதலை ஆத்மபூர் வமாக நேசித்தவர். பெரும் சம்மாட்டியாரின், அக்ராசனரின் மகளை, சாதாரண சோக்ரா காதலிப்பது என்றால் முடிந்த காரியமா? வென்று காட்டினார் சோக்ரா! அவரின் வழி வந்த பிள்ளைகள் எல்லோருமே காதலில் வெற்றி கண்டு, கல்யாணம் செய்தவர்கள், சந்தோசமாக வாழ்கின்றனர் என்னை தவிர! நான் பெயருக்கு ஏற்றபடி வாழவேண் டுமே! மறுபடியும் தேவதாஸ்! பேசாலைதாஸ்.

                                                   என்னைப்பற்றிய சுய புராணம் இப்போது எதற்கு? பாட்டுக்கு வருவோம். தேவதாஸ் திரைப்படத்தில் வரும் அத்தனை பாட லும் அருமை. ஓ தேவதாஸ் என்ற பாடலும் அருமை ஆனால் நான் இன்று உங்களோடு கூட இரசிப்பது. துணிந்தபின் மனமே! என்ற பாடலைத் தான்! இந்த பாடல் கல்யாணி இராகத்தில் அமைந்துள்ளது. தமிழ் செவ்வியல் இசையில் மிக விஸ்தாரமாகப் பாடக்கூடிய ராகமாகவும் , கற்பனைக்கும் இடம் கொடுக்கக் கூடிய ராகமாகவும்  இருப்பதால் சினிமாவில் அதிக அளவில் பயன்பட்ட ராகமாகவும் இது விளங்குகிறது. தொட்ட இடம் எல்லாம் இனிப்பது என்பது இந்த ராகத்தின் சிறப்பாகும். எப்படிப் பாடினாலும் மனதை கொள்ளை கொள்ளும் ராகம் என்பதால் சினிமா இசையமைப்பாளர்கள் தன்னிகற்றற்ற வகையில் செவ்வியல் இழைகளைப் பயன்படுத்தி அழகான மெல்லிசை நெசவுகளைத் தந்திரு க்கின்றார்கள். இதுபோதும் அதிக இசை விளக்கம் தேவையில்லை என கருதுகின்றேன். இனிப்பாடலை கேளுங்கள்


வெள்ளி, 29 ஜூன், 2018

58 பாட்டும் பதமும் அதிசய ராகம் ஆனந்தராகம்

அதிசய ராகம் ஆனந்தராகம் அழகிய ராகம் அபூர்வராகம்!  பேசாலைதாஸ்

                                                                எனக்கு தெரிந்த ராகங்கள் பற்றி சினிமா பாடல்களில் அவ்வப்போது சிலாகித்து வருகின்றேன். ராகங்கள் பற்றி சொல்லிக்கொண்டு போகும் போது, இந்த பாடலை விட்டுவிடமுடியுமா? 1975 வெளிவந்த இயக்குணர் சிகரம் பாலச்சந்தரின் அபூர்வராகம் படத் தில் அமைந்த பாடல், பாடலை கவியரசு எழுத ஜேசுதாஸ் இந்தப்பாடலை தனது ஆண்மையும் , இனிமையும் , கம்பீரமும் , நிதானமும் ,ஆழமும் மிக்க குரலால் பாடி சிறப்பித்திருக்கின்றார்.

                                                                               படத்தின் தலைப்புக்கேற்ப அமைந்த இந்தப்பாடல் சுவையுணர்வின் தனித்தன்மையுடன் அரிதான ராகமாகக் கருதப்படும் மகதி ராகத்தில் முன் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.  பாடல் அமைந்த ராகங்கள் மகதி , பைரவி.மகதி ராகம் கேட்பதற்கு வலஜி என் கிற ராகம் போலவும் இருக்கும். அருமையான இசையமுதம்! புதிதாய் மலர்ந்திருக்கும் ஒரு அழகிய மலரின் இளமை வனப்பும் , மென்மையும் ,எளிமையும் கொண்ட இசைப்படைப்பு. ராகத்தின் ஆழமும் ,கூர்மையும் ,இனிமை யும் ஒன்று சேரக் காட்டும் உயிர்த்துடிப்பு மிகுந்த இந்தப்பாடல் இளைஞன் ஒருவனின் காதல் உணர்ச்சிப்பெருக்கை நிதானத்துடன் ,அமைதியுடனும் வெளிப்படுத்துகிறது. 

                                                                                    பாடலின் பின்பகுதியில் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தும் விதமாக பிரகடனம் செய்ய வேண் டிய தேவை ஏற்படுவதால் பைரவி ராகத்தில் அமைகிறது. அரிதான ராக த்திலேயே இனிமையும் ,எளிமையுமிக்க பாடல்களை அள்ளி வீசி மெல்லி சையில் புதுப்பாதை வகுத்து தன்னை மாபெரும் இசைமேதை என எத் தனயோ பாடல்களில் நிரூபித்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.  

                                                                                    கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் என்பன ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர் கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை விட்டகலாததா கும். இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர் 
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர் 
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர் 
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே! 

இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான் உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப் போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு. சரி என் அன்பின் இசை இரசிகர்களே உங்களுக்காக பாடலை இங்கே தருகின்றேன் 

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
மோகம் மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் – அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி   அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

புதன், 27 ஜூன், 2018

பாட்டும் பதமும் 57 முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்!

முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்! சந்தித்தவேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை!  பேசாலைதாஸ்,

                                                         அழகான பெண்களை, வசீகரமான கண்களை கண்ட மாத்திரத்தில், நான் அழுகு வண்ணம் கண்டு, உணர்ச்சிகள் பேத லிக்கும்போதெல்லாம் என் சிந்தையில் தானாகவே வந்து மோதும் பாடல் இது! 

                                                                            ஒரு முறைபாடிவிட்டாலே மன‌துக்குள் பொங்கிப்பிரவாகிக்கும் உணர்ச்சி அலைகள். கவிஞர் உண்மையில் அனுபவித்து எழுத, அதை அப்படியே அனுபவித்து பாடியிருப்பார் செளந்தரராஜன். பாடல் இடம் பெற்ற படம் நெஞ்சிருக்கும் வரை, உண்மைதான், நெஞ்சியிருக்கும்வரை இந்த பாடல் நினைவில் இருக்கும்! 

                                                          பிருந்தாவன சாரங்கா இசையில் அமைந்தது இந்த பாடல்! இன்பத் திளைப்பும் , இனம்புரியாத பரவசமும் ,அழகுணர்ச் சியும் தரும் ராகங்களில் பிருந்தாவனசாரங்கா ராகத்திற்கு தனிச்சுவை உண்டு. இசைகேட்டல் எனும் பரவச உணர்வில் மனதுக்கும் ,ஆன்மாவுக் கும் தனியின்பம் தரும் ராகம் இது. மற்றைய ராகங்களைப் போலவே இந்த ராகமும் பழைய காலம் தொட்டு இன்று வரை நம்மைத் தொடர்ந்து வருகிறது. 

                                              தூரத்தில் மின்னி ,மின்னி ஒளிரும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல அருகில் வருவது போல மென்மையானஒலித்திவளைக ளால் பாடலுக்கு அடி எடுத்துக் கொடுக்கும் இசை! குளிர் வீசும் இளம் தென்றல் போல் ஆரம்பிக்கும் பாடல். பிருந்தாவனசாரங்கா ராகச் செறி வில் இப்படியும் ஒரு அழகான பாடலா என்று எண்ணி ,எண்ணி வியக்க வைக்கும் மெல்லிசைமன்னரின் இனிய பாடல். 

                                            முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம், சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை, படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன? கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட எழுந்த இன்பம் என்ன,  என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன! ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?  

                                                                           ஆஹா என்னே அற்புதமான வரிகள்!  பார்வை அது பாலில் ஊறிய ஜாதி பூவாம்! விருந்து கேட்பதே கூடாது, அதையும் விரைந்து கேட்கலாமா? சொல்லுங்கள்,  என்ன விருந்து என்று மடும் தயவு செய்து என்னை கேட்காதீர்கள். நீங்களே பாடலை கேட்டு ஊகித்துக்கொள்ளுங்கள்!  அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 56 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா....

 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா.... பேசாலைதாஸ்

நான் இரசிக்கும் பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. மஞ்சள் மகிமை திரைப் படத்தில் இடம் பெற்ற இப்பாடலை உடுமலை நாரணகவி எழுத, கண்டசாலாவும் சுசீலாவும் பாடி இருப்பார்கள். கவிதை எழுதவேண்டும், அல்லது அதை இரசிக்கவேண்டும் என் ஏங்குபவர்கள் இந்த பாடலை ஒரு முறை சந்திக்கலாம். மத்யமாவதி ராக த்தில் அமைந்தது. இந்த பாடல். மத்யாமாவதி இராகத்தை பற்றி எனக்கு தெரிந்தை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன். கர்னாடக இசையில் மட்டுமல்ல இசைநாடகங்களிலும் ,நாட்டியங்களிலும் அதிகம் பயன்படும் ராகங்களில் இதுவும் ஒன்று.வட இந்திய இசையான ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் இதனை மதுமத் சாரங் அல்லது மத்யமாவதி சாரங் என அழைக்கின்றனர் .ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் மிக விரிவாக ஆலா பனை செய்யப்படும் ராகங்களில் மத்யமாவதியும் ஒன்று. பிருந்தாவன சாரங்கா , பிருந்தாவனி போன்ற ராகங்கள் மத்யமாவதிக்கு மிக நெருக் கமானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக பிருந்தாவனசாரங்கா மிக நெருக்கமான ராகமாக இருப்பதால் சில குழப்பங்களும் உண்டு என்பர்.

                                  உழவர்களின் வாழ்வைப் பிரதிபலித்த , அதில் முகிழ்த்த பள்ளு இலக்கியத்தின் முதல் இலக்கியமான முக்கூடற்பள்ளு பாடல்கள் பாடப்பட்ட ராகங்களில் மத்யமாவதி ராகமும் முதன்மையானது. உழை க்கும் மக்கள் தங்கள் உழைப்பின் களைதீரவும் , தமது துன்பம் துயரத் தைப் போக்கவுமே பாடினர்.அந்தப்பாடல்களின் சந்தக்குழிப்புகளிலி ருந்து மெருகேற்றப்பட்டு ராகங்களாகின என்பது இசை வரலாறாகும். இசையின் கதை என்பது ஓசை , ஒலியின் கதை ஆகும். இன்பமும் ஈர்ப் பும் இயைந்து தரும் இசையின் உட்கிடையாக இறுகப்பற்றியிருக்கும் ராகங்களில் அறிந்தும் அறியாமலும் மக்கள் காலங்காலமாக லயித்திரு க்கின்றார்கள். ராகங்களில் வேர்பிடித்து , மக்கள் இதயபீடங்களில் அமர்ந்த ராகங்களில் , ஈர்ப்புத் தன்மைமிக்க பாடல்களை மரபு சார்ந்தும் திரைப்படகாட்சி களுக்கு இசைந்த மெல்லிசை கானங்களாகவும் , தாம் அனுபவித்த விதங்களிலெல்லாம் சுதந்திரமாகவும் தந்து மக்களைக் கவர்ந்த திரையிசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பயன்படுத்தி வெற்றி கண்ட அற்புதமான ராகங்களில் ஒன்று அருமை மத்யமாவதி !

                                                ஊற்றிலிருந்து சுரக்கும் நீர் போல நினைவுகளை சுரக்க வைக்கும் தேன்வண்டல் பாடல்கள் தான் எத்தனை , எத்தனை ! மெல்லிசையில் ராகரசங்களால் நெஞ்சில் நிழல் பரப்பிய பாடல்கள் எத்தனை எத்தனை ! மெல்லிசை என்ற இனிமை விளக்கேற்றி திரையை ஒளிவீசச் செய்த மேதைகளின் ரசவாதம் நம்மை வியக்க வைக்கிறது. மலரிலும் மெல்லிய , தேனினும் இனிய உணர்ச்சி ததும்பும் இந்த ராகத் தை ,அதில் உட்புதைந்த இனபத்தை துழாவி துழாவி எடுத்து அதில் இன்பங்களை இழைத்து இழைத்து அதன் பெருமையை தூக்கி நிறுத் தியவர்கள் திரையிசைமைப்பாளர்களே என்பது மிகையான கூற்றல்ல!என்னடா பேசாலைதாஸ் அறுக்கின்றார் என நினைக்கின்றீர்களா? சரி சரி இனிப்பாடலைக்கேட்டு இரசியுங்கள்,,,

செவ்வாய், 26 ஜூன், 2018

பாட்டும் பதமும் 55 சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்


"சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர், சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே ஆரிரோ… அன்பே ஆராரோ!"

நான் அவ்வப்போது என்னை மறந்து பாடும் ஒரு தாலாட்டுப்பாடல் இது! பதிபக்தி திரைப்படத்தில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல். பட்டுக்கோட்டையின் பாடல்களில் மண்வாசணைக்கேற்றவாறு பாடல் த்றன் அமைந்திருக்கும். அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும் தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது, பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மிக இயல்பாய் காணலாம்.

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன. பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட பாடல்கள் போலவே திகழ்கின்றன. பதிபக்தி படத்தில் , சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே ஆரிரோ… அன்பே ஆராரோ! என்ற தாலாட்டுப்பாடலை கேட்கும் போது, தாலாட்டில் தாயின் பாசத்தைவிட, தமிழின் வாசம்  தூக்கி வீசுகின்றது! 

                                                             குப்பைதனில் வாழும் குண்டுமணிச் சரமே!   குங்குமச் சிமிழே..என்ற வரிகளிலே தமிழின் செழுமையும்.   மாடிமனை வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம்.  வளரும் பிறையே நீ போதும்.... .என்ற வரிகளில் மானிட நேசத்தையும் ஏழை நம் வாழ்வை எண்ணி நொந்தயோ, எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ என்ற‌ வரிகளில் ஏழை பாங்கையும்.. நாளை உலகம் நல்லோரின் கைகளில் என்ற வரிகளில் நம்பிக்கை தருவதாக பாட்டுக்கொரு அரசன் பட்டுக்கோட்டையாரின் பாடல் அமைகின்றது. இனி பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்

திங்கள், 25 ஜூன், 2018

மீனவர்களின் அம்பா பாட்டு தொடர் 03

இந்த வகையான அம்பா பாடல், படகு வலிக்கும் போது மீனவர்களினால் களைப்பு தெரியாமல் இருப்பதற்கும், விரைவாக படகை செலுத்துவதற்கும் பாடப்படுகின்றது. மாயவலை (அம்பா) ஏலம்மா ஏலேலோ ஏலோ ஐயா ஏலேலோ ஏலேலம்மா ஏலேலோ ஏலேலையா ஏலேல் ஓ மேலவல கீழவல மாயவல மடவல அத்தரிப் பாச்சான் ஆளுக்கொண்ட மடக்கு சுறுக்கன் சூசை காடேறி தீயில் சுட்ட தேக்குமரம் மேலவல கீழவல மாயவல மடவல அத்தரிப் பாச்சான் ஆளுக்கொண்ட மடக்கு செருக்கன் தீயோ மலையேறி தோளில் சுமந்த கொம்பேரா கரவல ஓலவல மாயவல மடக்கு மடவல கிழவல கீழ என்ன கிடக்கு கணக்கன் கயித்தான் கணக்காக கயிறு பிடிச்ச கடலோடி வழிவல சூடவல வழியில கிடக்கு வழியில போறவள முலையென்ன விடுப்பு. இந்தபாடலை பதிவு செய்த மெலிஞ்சிமுனை தமயந்திக்கு நன்றிகள் உரித்தாகுக! அன்புடன் பேசாலைதாஸ்

செவ்வாய், 19 ஜூன், 2018

பாட்டும் பதமும் 54 திருடாதே... பாப்பா திருடாதே

பாட்டும் பதமும் 54     திருடாதே... பாப்பா திருடாதே
பட்டுக்கோட்டையின் இன்னுமொரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது,  எளிமையாக பாமரமக்கள் புரிந்து கொள்ளும் மாபெரும் உண்மையை தத்துவத்தை எளிதாக பாடலில் புகுத்தியவர் பாட்டுக்கொரு அரசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திருடாதே பாப்பா என்ற பாடல் பாரதியின் பாப்பா பாட்டுக்கு நிகரனாது. 1961 இல் வெளிவந்த எம் ஜீ ஆர் நடித்த திருடாதே படத்தில் இடம் பெற்ற பாடல், இசை சுப்பையா நாயுடு பாடியவர்: T.M. சௌந்தரராஜன். ஒரு கதையோடு பாட்டின் பத்ததினை விளக்குகின்றேன்

                                             அன்பர்களே ஒருவன் தவறுசெய்தால், அவன் தன் தவறை உணர்ந்து திருந்தி வாழ, அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். அதிகமாக நோர்வே நாட்டில் ஒருவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அது தண்டிப்பதற்காக அல்ல, அவனை நல்ல மனிதானாக்க சீரையில் அவனுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும். நம்து நாட்டில் சித்திரக்கூடமாக, கொலைக்களமாக சிறைச்சாலைகள் மாறிவருகின்றது, திருடனாகப்பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாது
ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர் கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து, ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் கள வுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.
குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர். குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார். கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறி னர். குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன் னார், ''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.
                                                 குரு மீண்டும் அவர்களிடம் பேசினார், ''உங்கள் அனைவருக்கும் உலகில் நல் லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச் சினையும் இல்லை. ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை. இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது எது, கெட்டது எது என்று நான் தான் சொல்லித்தர வேண் டும். எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என் பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.'' என்றார். சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர். அன்புடன் பேசாலைதாஸ்

திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே...

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ

திருடாதே... பாப்பா திருடாதே...

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே... பாப்பா திருடாதே...

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இனி எடுக்குற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...ஆ......ஆ......
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…ஆ....ஆ......
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா..ஆ.......ஆ.......
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது

திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே
... பாப்பா திருடாதே


சனி, 16 ஜூன், 2018

மீனவர்களின் அம்பா பாட்டு தொடர் 02 பேசாலைதாஸ்


கிராமிய பாடல்களில் நெருடல், வருடல், தர்க்கம், குதர்க்கம், கிண்டல், நையாண்டி, குத்தல் இப்படியான பவிதமான இரசனைகள் இழையோடும். மீனவர்களின் அம்பா பாட்டில், இது சொல்லத்தேவையில்லை, மிக அதிகமாக தென்படும். கஸ்டப்பட்டு உழைக்கும் மீனவன் தனது ஆத்திரத்தை, மன உளைச்சலை சம்மாட்டியார் மீதும், அவரது கையாளாக செயல்படும் மண்டாடியார் மீதும் அம்பா பாடலில் கம்பீரமாக எதிரொலிக்கும், குறிப்பாக சம்மாட்டியரின் மனைவிமார்,  வைப்பட்டிகள், மண்டாடியாரின் மனைவிமார்கள். இந்த பாடலில் சிக்குப்படுவார்கள். உதாரணத்துக்கு " சம்மாட்டி சம்சாரம், ஏலோ ஏலோ, பார்த்துட்டு போறாளே! ஏலோ ஏலோ, அட பாவிமகள் சம்சாரம் ஏலோ ஏலோ, படுக்கையிலே பத்துப்பணம் எலோ ஏலோ, கூட்டிக்கொடுக்கச் சொல்லுவாளோ ஏலோ ஏலோ, இப்படியாக அம்பா பாடல் விரிந்து செல்லும், எழுதப்படாத தமிழ் இலக்கிய பொக்கிசங்கள் இது! இங்கே மெலிஞ்சி முனையின் கவிஞன் தமயந்தி பதிவு செய்த ஒரு பாடலின் பின்புலத்தை அப்படியே பிரதிபண்ணி உங்களுக்கு தருகின்றேன்-
சம்மாட்டியின் தோணியில் கூலிக்குச் செல்லும் மீனவன்.
அவனுக்கு தினக்கூலியாக பத்துப் பணம் கொடுப்பதுதான் நீதி.
ஆனால், சம்மாட்டியோ தினக்கூலியாக ஒருபணம் மட்டும் கொடுத்து தினமும் தொழிலாளியின் உழப்பைச் சுரண்டுகிறான்.
அதிகாரம் படைத்த சம்மாட்டியை எதிர்த்துக் குரல் உயர்த்த முடியாது.
குடியிருக்கும் ஒத்தைக் குடிசையும் சாம்பலாகி விடும்.
காத்திருந்த மீனவன் ஒருநாள் மீன்பாடு அமோகமாக நடக்கும் சமயத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறான்.
அதிகாலைக்கு முன்னதாக சம்மாட்டியின் ஏவலாள் வந்து மீனவனைத் துயிலெழுப்புகிறான்.
ஆதிநற் தமிழில் திட்டி அவனை திருப்பி அனுப்புகிறான் மீனவன்.
(அந்தப் பாடலை இதில் தவிர்க்கிறேன்) பின்பு,
சம்மாட்டியே நேரில் வந்து மீனவனின் குடிசை முன்றலில் நின்று அவனைத் துயிலெழுப்புகிறார்.
அந்த உரையாடல்தான் இப் பாடல்.
1ம் முறை துயிலெழுப்பும்போது; "விடிவெள்ளி எழட்டும்" என்று சொல்கிறான்.
2ம்முறை கூரையில் சேவல் கூவட்டும் என்கிறான்.
3ம் முறை; "இரவிரவாக எனது உழைப்பில் களைத்த உடம்பைப் பிடித்துவிட்டு சற்று முன்னர்தான் எனது நெஞ்சிலேயே கண்ணயர்ந்தாள் மனைவி சரசு. அவள் எழும்பட்டும்" என்கிறான்.
4ம் முறை; இரவு அணைத்த சங்கில் திரியிட்ட விளக்கு குந்தில் எங்கோ இருக்கிறது தேடியெடுத்து கொழுத்திவிட்டு வருகிறேன்" என்கிறான்.
5ம் முறை; "கோவணம் கட்டுகிற அரைஞாண் கொடியைத் தேடுகிறேன்" என்கிறான்.
6ம் முறை; "சுக்குத்தண்ணி வைப்பதற்காக அடுப்பு மூட்டுகிறேன்" என்கிறான்.
7ம் முறை; "அடுப்பில் வைத்த சுக்குத்தண்ணி கொதிக்கவேண்டும்" என்கிறான்.
8ம் முறை; "வெற்றிலை போட கொட்டைப் பாக்கு எங்கோ உருண்டு மறைந்து விட்டது, அதைத் தேடுகிறேன்" என்கிறான்.
9ம் முறை; "தோணிக்கு பாய் வலிக்கும் கம்பான் கயிற்றைத் தேடுகிறேன்" என்கிறான்.
சம்மாட்டி ஒவ்வொரு தடவையும் அவனைத் துயிலெழுப்புப்போதும், மீனவனின் தினக்கூலியை ஒவ்வொரு பணமாக உயர்த்துகிறார்.
10ம் முறை துயிலெழுப்பும்போது சம்மாடி பத்துப் பணம் தருகிறேன் என்பதைச் சொல்கிறார்.
அதன் பின்புதான் மீனவன் புறப்படுகிறான்.
பத்துப் பணம் கூலி
(அம்பா)
--------------------
ஒத்தப் பணந் தாறேன்
ஓடிவாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
வெள்ளி முளைக்க வேணும்
ரெண்டுபணம் தாறேன்
ஏகி வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
கோழிகூவ வேணும்
மூணு பணம் தாறேன்
முந்தி வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
சரசு எழும்ப வேணும்
நாலு பணம் தாறேன்
முடுக வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
சங்கு விளக்கக் காணோம்
அஞ்சு பணம் தாறேன்
துள்ளி வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
இடுப்புக் கொடியக் காணோம்
ஆறுபணம் தாறேன்
சுறுக வாடா ஏலையா
கொஞ்சம்பொறு
வாறேன் சுள்ளி மூளவேணும்
ஏழு பணம் தாறேன்
ஏறிவாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
சுக்கு வேகவேணும்
எட்டுப்பணம் தாறேன்
எட்டிவாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
கொட்டப் பாக்கக் காணோம்
ஒன்பதுபணம் தாறேன்
விசுக்கா வாடா ஏலையா
கொஞ்சம்பொறு வாறேன்
கம்பான் கயித்தக் காணோம்
பத்துப்பணம் தாறேன்
பாவிப்பயலே வாடா
இந்தா வாறன் திறேவே
அட்டியில்லைத் துறைக்கே
புகைப்பட கலைஞனும், கவிஞனுமான மெலிஞ்சிமுனை தமயந்திக்கு மீண்டுமொரு நன்றி நவிலல், மீனவர் சார்பாக. 
பேசாலைதாஸ்


வியாழன், 14 ஜூன், 2018

மீனவர்களின் அம்பா பாட்டு பேசாலைதாஸ்

மீனவர்களின் அம்பா பாட்டு  பேசாலைதாஸ்

உழைக்கும் தொழிலாளிகள் அத்தனைபேருக்கும் அவரவர் தொழில் சார்ந்த பாடல் உண்டு. வேலைக்களைப்பு தெரியாமல் உற்சாகமாய் வேலை செய்ய அவர்கள் பாட்டுப்பாடுவார்கள். மீனவர் வாழ்விலும் பாட்டுக்கள் உண்டு. நெய்தல் நிலம் சார்ந்த, இலக்கியமாக அவை சங்ககாலம் தொட்டு தமிழர் கலைபண்பாடுடன் இந்த பாடல் இடம் பெறுகின்றது. சில பாடல்கள் சினிமாப்பாடல்களாவும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்பாடல் பற்றி பின்பு அலசுவோம். இப்போது கிராமிய மண்மணம் கமழும் இந்த மீனவர் பாடல்கள், 
கிராமங்கள் தோறும் வேறுபட்டு நிற்கும், அதில் அந்த மண்மன் சார்ந்த சில பிரதிபலிப்புகள் தென்படும். கரவலை செய்பவர்கள் வள்ளத்தில் வலை ஏற்றும் போது, வள்ளத்தை கடலில் தள்ளும் போது, தண்டு வலிக்கும்போது, வலை இழுக்கும் போது, வலை குறுகிவருகின்றபோது மிக மிக உற்சாகமாய், பின்பு வள்ளத்தை கடலில் இருந்து தரைக்கு இழுக்கும் போது, இப்படியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பா பாடல்களில், ஸ்ருதி, தாளக்கட்டு என்பன‌ வேறு படும். சந்தர்ப்பம் வரும்போது அவைபற்றி விரிவாக ஆராய்வோம். இப்பொழுது ஈழத்தின் வடக்கு பகுதி மீனவர்களின் அம்பா பாடல் ஒன்றை இங்கு தருகின்றேன். இந்த அம்பா பாடலை பதிவு செய்த மெலிஞ்சி முனை தமயந்திக்கு ஒரு நன்றி. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ஐலசா ஏலையா ஐலசா 
ஐலசா ஏலையா ஐலசா 

தெங் கரையின் மாவனத்தில் 
தேக்குமரம் தேடி வெட்டி 
தெப்பக்குஞ்சன் செய்த வள்ளம் 
தெண்டித் தள்ளு அம்மிக்கல்லு - 
ஐலசா ஏலையா ஐலசா 

காத்தடிக்கும் கடலடிக்கும் 
ஆத்துக் கன்னி முலையடிக்கும் 
சோத்துப் பானை பேயடிக்கும் 
நீத்துப் போன சீவியந்தான் - 
ஐலசா ஏலையா ஐலசா 

சோனகத்தான் நெய்த வலை 
சொல்லிப் படும் அள்ளிப்போடு 
வேலனோலை தோட்டுப் பறி 
கொள்ளாப் பிலால் சுத்திப் படும் - 
ஐலசா ஏலையா ஐலசா 

வெள்ளாளம் பேய் ஆறுபணம் 
புடுங்கித் திண்ட வேப்பங்கொங்கை 
பொழுதில் வந்து பெருமீன் கேட்கும் 
போகச் சொல்லித் தூக்கிப்போடு - 
ஐலசா ஏலையா ஐலசா 

முதலிபெண்டில் வேலிப்பொட்டில் 
வீக்கம் தூக்கம் கேட்டு நிப்பாள் 
அந்தணப் பேய் ஆளனுப்பி 
ஐயனாரின் பேரைச் சொல்லும் - 
ஐலசா ஏலையா ஐலசா 

ஆஞ்சானைதான் சுண்டக் கட்டு 
வாறான் கொஞ்சம் உன்னிப் பிடி 
அணையாந்தீவை அணியம் வச்சு 
ஈஞ்சாம் முனை ஏறக் கட்டு - 
ஐலசா ஏலையா ஐலசா 

(சில நூறாண்டுகள் பழமையான இந்த அம்பாப் பாடலின் கடைசி அடி பாதி மறந்தும், குழப்பமாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட இப்படித்தான் அந்த வரிகள். 
தவறாயிருப்பின் தெரிந்தவர்கள் இந்த வரியை சரியாகச் சொன்னால் ஆவணப்படுத்த உதவியாக இருக்கும். 

"ஆஞ்சானைதான் சுண்டக் கட்டு 
வாறான் கொஞ்சம் உன்னிப் பிடி 
அணையாந்தீவை அணியம் வச்சு 
ஈஞ்சாம் முனை ஏறக் கட்டு" 

இது அனலைதீவையும், ஈச்சாமுனையையும் குறித்த வரிகளாகும்.)



      பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்                                                       

புதன், 13 ஜூன், 2018

பாட்டும் பதமும் 53 துள்ளாத மனமும் துள்ளும்


"துள்ளாத மனமும் துள்ளும் , சொல்லாத கதைகள் சொல்லும் " பேசாலைதாஸ்  

நான் இரசித்து சுவைக்கும் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. 1957 ஆண்டு வெளிவந்த கல்யாணப்பரிசு படத்தில் இடம் பெறது இந்த பாடல். பாடல் ஆசிரி யர் புமைக்கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இசை எ.எம்.ராஜா, பாடியவர் ஜிக்கி. பாடல் ஆசிரியரைப் பற்றி சற்று இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும்.  பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாட்டு என்பதை பாங்கோடு தந்த பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப் பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின் உணர் ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜன ங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன. துள்ளாத மனமும் துள்ளும் என்ற பாடலில் உள்ள வரிகளைப்பாருங்கள்! 


                                                    துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும், இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும் – இசை இன்பத் தேனையும் வெல்லும். தேன் இனிமையிலும், இசை மதுரமானது, அது தேனையும் வெல்லும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவ தும் கீதம்,என்று சொல்லும் கல்யாண சுந்தரத்தை போற்ற மால் இருக்க முடியுமா? துன்பம் வந்தால், இசை என்ற படகில் ஏறிவிட்டாலே போதும், கவலைகளை மறக்க, இசை தோணி போல தாலாட்டும்! அதுமட்டுமா? எங்கும் சிதறும் எண்ண ங்களையும் இழுத்து வருவது கீதம் .இணைத்து மகிழ்வதும் கீதும் துயர் இருளை மறைப்பதும் கீதம். இசையின் சிறப்பை, கீதத்தின் மகிமையை இதைவிட சிறப்பாக என்னால் சொல் லமுடியாது. இனி நீங்களே பாடலைகேட்டு முடிவு செய்யுங்கள்


புதன், 6 ஜூன், 2018

பாட்டும் பதமும் 52 இறைவன் என்றொரு கவிஞன்


"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன்" பேசாலைதாஸ்

கவிஞர் கண்ணதாஸன் எழுதிய இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஏன்? 1970 இல் வெளிவந்த படம், இசை அமைப்பாளர் விஸ்வனாதன் அல்ல T.R.பாப்பா! கடவுளைப்பற்றி கண்ணதாசன் நிறைய தத்துவப்பாடல் எழுதியுள்ளார். சந்தர்ப்பம் வரும் போது அதனைப்பற்றி நாம் சிலாகித்துக்கொள்வோம். கவிதை கவிஞன் கடவுள் கண்ணதாசான் இப்படியே க வரிசையில் சிந்தனை செய்தால், கொஞ்சம் நிமிர்ந்து இருந்து இரசிக்கச் செய்யும் அவரது பாடல்கள். இந்த பாடல் எனக்கு ரெம்ப‌வும் பிடிக்கும். கவிஞனை கடவுளிந்தரத்துக்கு உயர்த்துகின்றது இந்தபாடல்! "கற்பனை என்பது கடவுளின் படைப்பு , கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு " இந்த வரிதான் என் புருவங்களை உயர்த்தி சிந்திக்கவைத்தது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை படைக்கவேண்டும், எழுதவேண்டும்  என்ற எண்ணத்துடிப்பை தந்தே எனக்கு இந்தபாடல்தான்!
     இந்தபாட்லில் கவிஞர் வாழ்வின் தத்துவங்களை, பிரபஞ்ச தத்துவத்தை மிக எளிதாக விளக்குகின்றார். வாழ்க்கை என்பது வட்டம், இயறகை என்பதும் ஒரு வட்டமே! இதை மிக மிக எளிதாக "ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று"  இலகுவாக எழுதியுள்ளார். கண்களில் தொடங்குவது காதல் அதானல் வருவது மனித உயிர்கள். கண்களில் முடித்தான் என்று மரணத்தை குறித்து எழுதுகின்றான். மனிதன் ஆரம்பமாவ்து பெண்ணூக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே! கண், பெண், மண் இந்த மூன்று வரி தத்துவத்தை என் கவி ஆசான் கண்ணதாசனைவிட வேறு யாரால் சொல்லமுடியும்?
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியைப் போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்திலிருந்தே கவிதையை முடித்தான்.
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கருவிலிருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
இனிப்பாடலை கேளுங்கள் 
அன்புடன் பேசாலைதாஸ்


செவ்வாய், 5 ஜூன், 2018

பாட்டும் பதமும் 51 கண்னொரு பக்கம், நெஞ்சொரு பக்கம் பெண்னோடு போராடுது


"கண்னொரு பக்கம், நெஞ்சொரு பக்கம் பெண்னோடு போராடுது, கள்ளொரு பக்கம், தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது"  பேசாலைதாஸ்

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம், நிறை குடம், இசை விஸ்வநாதன் அல்ல, வி.குமார் என்னும் இளம் இசைக்கலைஞர். கண்ணதாசனின் காதல் போதை தரும் பாடல்களில் இதுவும் ஒன்று, பெண்ணை அனுபவித்த ஒரு அனுபவ தரிசனம் இந்த பாடலைகேட்கும் போது நமக்கு உண்டாகும். அழகான அதுவும் வசீகரமான பெண்ணழகை கண்டாள், துள்ளாதமனமும் துள்ளிப்போராடும், போராடும் போது கண்கள் நெஞ்சம் என்ன பாடுபடும்? கள்ளுண்ட போதை வந்தால் மயக்கம் வரும், தேன் உண்டால் தெவிட்டல் தரும் இன்பம் வரும் இது எல்லாம் பெண்ணை தொட்டாலே வ்ரும் என்பதை கவிஞர் கண்ணதாசன் தன் பாடலில் தருகின்றார். ஆசை வேகம் போகப்போக, கேள்வி கேட்காது என்று கவிஞருக்கு எப்படி தெரியும்? உண்மைதான்! ஆசை வேகம் கூடக்கூட அங்கே மெளனம் சம்மதமாகி,  பெண்மை தன்னையே கேள்வி ஏதும் கேட்காமல் சரணாகதி அடையும். சின்ன தோட்டம், சில் என்ற காற்றில்,.சிறையும் போடாது என்று கவிஞர் இங்கு சொல்லவதை நான் மறுதலிக்கின்றேன். காவியத்தலைவன் ஏற்கனவே சிறைப்பட்டு கிடக்கும் போது, மேலதிக சிறைகள் எதற்கு கவிஞரே? அன்பர்களே நீங்களும் இந்த பாடலைக்கேட்டு, உங்கள் மனைவி யரை, காதலியை நேசியுங்கள் இரசியுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்

ஞாயிறு, 3 ஜூன், 2018

பாட்டும் பதமும் 50 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல


''தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல''  பேசாலைதாஸ்

இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் அவதாரம். பாடியவர் கள் இளையராஜா ஜானகி பாடலை எழுதியவர் வாலி,
என்னடா இவன், கண்ணதாஸன் பாடல் பற்றி கண்ணாபிண் ணா என்று எழுதியவன் திடிரென்று வாலியின் பாலலுக்கு பாய்ந்துவிட்டான் என்று நினைக்கின்றீர்களோ? இந்த பாடலை நான் இரசிப்பதற்கு முக்கியமான காரனம் ஒன்று உண்டு. இசை சுமார், பாடல் வரிகள் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை,, அப்படியானல் இந்த பாடலில் வேறு என்ன தான் இருக்கின் றது? 

                                             ஆம் இந்தபாடல் வெறும் அரைமணித்தி   யாலத்தில் இசை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அது தான் இந்த பாடலின் மிக சிறப்பான அம்சம். ஒரு பாடல் உருவாகுவதற்கு பல படி முறை உண்டு. இயக்குணர் எந்த காட்சியில்  பாடல் இடம்பெறவேண்டும் என தீர்மானிப்பார். அதன் சூழ்நிலை situation பற்றி இயக்குணர் பாடல் ஆசிரியரு க்கு முழுக்கதையும் சொல்லி விளங்கபடுத்துவார். பாடல் எழுதப்படும், பின்னர் இசை அதற்கு அமைக்கப்படும், சில வேலை இசைக்கு தக்கவாறு பாடல் எழுதும் சூழ்நிலையும் உண்டு. பின்னர் படப்பிடிப்பாளர் காட்சி ஆக்கப்படும் இடத்தை தெரிவு செய்து பாடல் காட்சி படமாக்கப்படும்.. ஆனால் இந்த பாடலின் இசை உருவாக்க இளையராஜாவுக்கு வெறும் அரை மணித்தியாலமே தெவைப்பட்டது. மனதில் வந்து போகும் பாடலாக இப்பொழுது இருக்கின்றது. பாடலை நீங்களும் கேளுங்கள். அன்ப்åஉடன் பேசாலைதாஸ்


ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...