சனி, 29 டிசம்பர், 2018
பாட்டும் பதமும் 90 "ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்,,,,," பேசாலைதாஸ்
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்,,,,," பேசாலைதாஸ்
வாழ்க்கை வாழ்வதற்கே! அதுவும் இவ்வுலகத்தில் வாழ்வது ஒருமுறை மட்டுமே! யாவும் கடந்து போகும், வாழ்வின் ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது, வாழ்வில் மனமகிழ்ச்சியாக, சமாதானமாக அமைதில், வாழ்வதற்கே இறைவன் நம்மை படைத்திருக்கின்றான், மனிதர்களும் அப்படியே வாழ்வின் மகிழ்ச்சிக்காக வாழ்வின் தேடலோடு நாள் தோரும் அழைகி ன்றான், இருக்கின்ற கணத்தில் ,இருப்பதைக்கொண்டு, நமக்கு கிடை த்தை கொண்டு மகிழ்ச்சி அடையாமல், மகிழ்ச்சியை தேடிக்கொண்டி ருக்கி ன்றோம்.
நாம் வாழும் வாழ்க்கை கூட, பலகோடி மக்களுக்கு கிடைப்பதில்லை, அதை எண்ணிப்பார்த்தாலே வாழ்வில் திருப்தியும், கடவுளுக்கு நன்றியும் சொல்லத்தோன்றும், நம்மில் பலர் அப்படி நடந்துகொள்வதாய் இல்லை, மகிழ்ச்சிக்கான தேடலில், வாழ் வில் கடந்து வந்த ஆண்டுகளை திரும்பி பார்க்கையில், வேதனையும் துன்பமும், கனவுகளும், ஏக்கங்களுமே நிறைந்திருக்கும். எனவே இன்றே இப்பொழுதே கிடைத்ததைக்கொண்டு வாழ்வில் திருப்தியுடன் மகிழ்ச்சி யாக வாழுவோம் என்ற தீர்மானத்தோடு, கடந்து போகும் வருடத்துக்கு விடை கொடுத்து, புதிய ஆண்டை மகிழ்ச்சியோடு எதிர்கொள்வோம்,
ஒவ்வொரு வருடத்திலும் ஆண்டின் கடைசி நாட்களில் இந்த பாடல் என் மனதில் வந்து போகும்! தேன் தமிழ் ஓசை வானொலியில் பணிபுரிந்த அந்தகாலங்களில், இந்த நாளிலே இந்த பாடலை வானொலி நேயர்களுக்காக காற்றலையில் தவழவிடு வேன்,,, இப்போது இணையத்தில் மீண்டும் ஒரு முறை,,, என்னோடு இணைந்து பாடலை இரசியுங்கள்! அன்பின் பேசாலைதாஸ்
ஞாயிறு, 23 டிசம்பர், 2018
பாட்டும் பதமும் 89 "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்" பேசாலைதாஸ்
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்" பேசாலைதாஸ்
நான் முருக பக்தனல்ல, ஆனாலும் இந்து கலாச்சாரங்கள் பற்றிய மேல திக வகுப்புகளுக்கு நான் உயர்தர கல்வி பயி லும் போது செல்வதுண்டு, யாழ்ப்பாணதில் கனகரத்தினம் மகாவித்தியலயம் என்ற சைவ கல்லூரியில் கற்றதினால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் என்ற பாடல் பக்தி உட்சாகத்தை தரக்கூடிய பாடல், அந்த பாடலை எழுதியவர் என் கவி ஆசான் கண்ணதாசன் என்றுதான் நினைத்திருந்தேன், அந்த பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்ற விடயம் எனக்கு பின்னரே தெரியவந்தது, அதிலும் இந்த பாடல் வரிகளை இயக்குணர் அவர்கள் கண்ணதாச னிடம் காட்டி, இது போன்ற ஒரு பாடலை எழுதும் படி கேட்டாராம்,
முழுபாடலையும் கேட்ட கண்ணதாசன், “இதுவே ரொம்ப நல்லா இருக்கு. அதுல“ சென்னையிலே கந்தகோட்டம் உண்டு” என்ற வரியை மட்டும் “சிறப்புடனே கந்தகோட்டம் உண்டு “என்று மாற்றிக் கொள்ளுங்கள்“ என்று அந்தபாடலை ,அந்தபாடல் ஆசிரியர் பெயரிலேயே வெளியிட செய்தார். பூவை செங்குட்டுவன் என்றஅந்த பாடல் ஆசிரியரின் திரையுலக பிரவேசத்திற்கு கதவுகளை திறந்துவிட்டார் கண்ணதாசன், கண்ணதாசன் புதுசாக யாரும் திரை உலகத்தில் பாட்டு எழுத வந்தால் அதனை அவர் போட்டியாக கருதுவதில்லை, அவர்களை தட்டிக்கொடுத்து வளர்த்தெடுப்பதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணதாசன் என் மனத்திரையில் சிரிப்பது போல ஒரு பிரமை, இசை ரசிகன் பேசாலைதாஸ்
மேலதிகமாக வாசிக்க https://pesalaithas.com என்ற இனையத்தளத்தையும் பார்வையிடலாம் அன்புடன் பேசாலைதாஸ்
திங்கள், 26 நவம்பர், 2018
பாட்டும் பதமும் 88 " இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகின்றாள் துணையை எண்ணி" பேசாலைதாஸ்
" இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகின்றாள் துணையை எண்ணி" பேசாலைதாஸ்
பெண் இயற்கையின் சீதனப்பரிசு என்று கவியரசர் கண்ணதாசன் பாடினான், இந்த பாடலும் அதையே சொல்லவருகின்றது, அதுபோகட்டும், இந்த பாடலுக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களா? இருக்கவே இருக்கின்றது, இணையத்தில் ஒரு இரசிகன் இப்படி அடித்து சொல்கின்றார்.,,,, இது உண்மையான தகவல். M.G.R. அவர்களுக்கும், T.M.S. அவர்களுக்கும் வருத்தம் ஏற்ப்பட்டது உண்மையே. இங்கு காரணம் குறிப்பிடவில்லை அடியேன் அப்போதே ( 197I ) அறிந்த விடயம், அடிமைப்பெண் படம் ஷூட்டிங் நடந்துகொண்டு இருந்தது. " ஆயிரம் நிலவே வா " என்ற பாடல் பதிவிற்காக T.M.S. அவர்களும் , சுசீலா அவர்களும் ஸ்டுடியோவில் காத்திருக்க , M.G.R. அவர்கள் வரவில்லை.
விடிந்தால் மதுரையில் T.M.S. அவர்களின் பெண்ணின் திருமணம். வெகுநேரமாகியும் M.G.R. வராததால் நான் மதுரை புறப்பட்டு செல்கிறேன் மீண்டும் வந்து பாடி கொடுக்கிறேன் என அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு , T.M.S. புறப்பட்டு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அங்கு வந்த M.G.R. T.M.S. இல்லாதை கண்டு, கடும் கோபம் கொண்டு கூப்பிடு அந்த பாலசுப்பிரமணியத்தை என்று கூறி, அந்த பாடல் S.B.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொடுக்கப் பட்டது. அப்போது சாந்தி நிலையம் என்ற படம் வெளிவந்து , அதில் " இயற்கை என்னும் இளைய கன்னி " என்ற பாடல் சுசீலாவுடன் S.B.P. பாடியிருந்தார். அந்த பாடலை கேட்ட M.G.R. அவருக்கு உடனே வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் பிறகு T.M.S. M.G.R. படங்களில் ஓரங்கட்டப்பட்டார். இதுதான் உண்மை. இதுபோல இன்னொரு விடயம்!
வெளி நாட்டில் நடந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட T.M.S. டம் எம்.ஜி.ஆர் பாட்டு பாடுங்க என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர். ஆத்திரம் அடைந்த T.M.S எதுய்யா M.G.R பாட்டு ....? அவை எல்லாம் நான் பாடிய பாடல்கள் , என்னுடைய குரலால் தான் அவருக்கு புகழ் கிடைத்தது என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இந்த விஷயம் M.G.R ன் காதுக்கு போனது. அதன் பிறகு எஸ்.பி.பி யும் யேசுதாஸும் அதிக அளவில் அவருக்கு பின்னணி பாடினர். " இன்று போல் என்றும் வாழ்க"...படத்தில் "அன்புக்கு நானடிமை தமிழ்ப் பண்பிற்கு நானடிமை...என்று யேசுதாஸின் குரல் M.G.R க்காக ஒலித்த போது அது பொருநத்வில்லை என்ற பேச்சு எழுந்தது. T.M.S எப்போதும் கணீர் என்று பாடக்கூடியவர்.
* நான் ஆணையிட்டால்.....
* உலகம் பிறந்தது எனக்காக
* நினைத்ததை நடத்தியே
* நான் உங்கள் வீட்டுப்
எத்தனை எத்தனை இனிய பாடல்கள் டி.எம்.எஸ் குரலில் M.G.R க்காக அடடா....? ஆக மொத்தத்தில், இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல் தான் எஸ்.பி. பாலவின் முதல் பாடல், நான் இதுவரை நினைத்தது ஆயிரம் நிலவே வா என்ற பாடல்தான் அவரின் முதல் பாடல் என்று,,,,,,,,,,,, என்றும் அன்புடன் பேசாலைதாஸ்
படம் - சாந்தி நிலையம்
இசை - எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா
பி எஸ்
ஆஹுஹா......
எஸ் பி
ஓஓஹோ......
இருவரும்
ஆ ஆ ஆ.......
எஸ் பி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பி எஸ்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பி எஸ்
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
பி எஸ்
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கே தூது விட்டாள்
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
எஸ் பி
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
பி எஸ்
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
எஸ் பி
மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சள் ஒன்று போடலாமே
பி எஸ்
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆஹுஹா....ஹுஹா.........
செவ்வாய், 30 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 87 "நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது" பேசாலைதாஸ்
"நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது" பேசாலைதாஸ்
இந்த பாடல், மற்றும் கண்ணுக்கு மையழகு என்ற அருமையான பாடல்கள் அடங்கிய புதிய முகம் என்ற திரைப்படம் 1993 இல் வெளிவந்தது, படத்தை இயக்கியவர் சுரேஸ் சந்திரமேனன், இவரே படத்தின் கதாநாயகனாக வருகின்றார். இவர் ரேவதி என்பவரின் முன் னாள் கணவன், இந்த படத்தில் ரேவதி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் நேற்று இல்லாத மாற்றம் என்னது என்பது, பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் நம்ம சர்ச்சைக்குரிய வைரமுத்து, பாடலுக்கு இசை அமைத்தவர் இசைப்புயல் ஏ ரஹ்மான், என்னைப்பொறுத்தவரை, ரஹ்மானுக்கு உயர் அந்தஸ்த்து கிடைப்பதற்கு இந்தபாடலும் ஒரு காரனம் என்பதே!
இனி பாடல் வரிகளுக்கு வருவோம், நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது, இதுதான் காதல் என்பதாஇளமை பொங்கி விட்டதா, இதயம் சிந்தி விட்டதா, சொல் மனமே.. பல்லவியாக வரும் இந்த பாடல் வரிகளில் என் இதயம் சிந்தவில்லை கிடந்து துடிக்கின்றது! கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை,,, என்னே அற்புதமான வைரவரிகள்!
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை,,,, உண்மைதான், ஆனால் நான் இன்றுவரை அப்படி ப்பட்ட ஆசைக்காக ஏங்குகின்றேன் வைரமுத்து அவர்களே! காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை,,, அந்த கண்கள் கொடுத்துவைத்தவை! கவிதை வரியின் சுவை, அர்த்தம் புரியும் வரை,,,,, இந்த இந்த ஒற்றை வரியில் தான் வைரமுத்து அவர்களே நீங்கள் எழும்பி நிற்கின்றீர்கள்! கவிதையின் அர்த்தம், புரியாமல் இசைக்காக தலை ஆட்டும் மாந்தர்கள் மத்தியில் கவிதை வரிகள் உயிர்துடிப்பாகின் றது.இந்த பாடல் இசை உருவாகம் பெறும் ஒரு காணொளியையும் உங்களுக்காக இணைத்து வெளியிடுகின்றேன், அனுபவியுங்கள், அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)
கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)
படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து
புதன், 24 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 86 "குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா" பேசாலைதாஸ்
"குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா" பேசாலைதாஸ்
1960 களில் வெளிவந்த இரு வல்லவர்கள் திரைப்படத்தில் வெளிவந்த பாடல் இது; குடுமபத்தில் அம்மா அப்பா இவருக்கும் இடையில் ஏர்படுகின்ற கருத்துவேறுபாடுகள், சண்டைகள் , ஒரு பிஞ்சு மனதில் எத்தகைய உளவியல் தாக்கத்தை, ஏக்கத்தை ஏற்படு த்தும் என்பதை இப்பாடல் மிக அழகாக சித்தரிக்கின்றது ,இந்த பாடலை யும், களத்தூர் கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பிரபல பாடலையும் 'மியாவ் மியாவ் பூனைக் குட்டி', 'கோழி ஒரு கூட்டிலே', உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் மூலம் குழந்தை குரலில் பாடி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் எம்.எஸ். ராஜேஸ்வரி, கமலஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படத்தில் மிக பிர பலமான 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடலையும் பாடியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரியை, காரைக்குடி ஏவி.எம். கலையகத்தில் அப்போதைய பிரபல இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரி யை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டி யார் ராஜேஸ்வரியை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார்.இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 'ராமராஜ்யா' திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார் ஏவி.எம். செட்டியார். இந்தப் படத்தில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடி னார். இதன் பின்பு ஏவி.எம். பட நிறுவனம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறியபோது ராஜேசுவரியும் சென்னைக்கு வந்தார்.
'நாம் இருவர்' திரைப்படத்தில் 'கருணாமூர்த்தி காந்தி மகாத்மா', 'மகான் காந்தி மகான்' ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றி கரமாக ஓடியது.
அடுத்து 'வேதாள உலகம்' திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 'ஆகா ஆனந்தமானேன்' என்ற பாட லைப் பாடினார். 'வாழ்க்கை' படத்தில் 'உன் கண் உன்னை ஏமாற் றினால்' என்ற பாடலை டி..ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து பாடி யுள்ளார்.
1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இதனால் இவர் 'மழலைக் குரல் பாடகி' என அழைக்கப்பட்டார். கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான 'களத் தூர் கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற 'அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே' என்ற பாடலை பாடியது இவர்தான். மேலும், இவர் பாடிய 'மியாவ் மியாவ் பூனைக் குட்டி', 'ஓ ரசிக்கும் சீமானே', 'கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே' போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை . எம் எஸ் இராஜேஸ்வரி தனது குழந்தை குரலால் பாடிய அத்தனை பாடலக்ளும் எனக்கு பிடிக்கும், அதிலும் சிறப்பாக குவா குவா பாப்பா எப்பொழுதும் எனக்கு பிடிக்கும், இந்த பாட்லை நான் கேட்கும் போதெ ல்லாம், இப்பொழுது வளர்ந்து குமரிகளாகி, வைத்தியர்களாக இருக்கும் எனது முதல் பெண்குட்டியும், எனது கடை பெண்குட்டியும், பாப்பா க்களாக இருந்த அந்த காலம், என் நினைவுச்சுழியில் வந்து போகும், ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா,அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா இந்தவரிகளை கேட்கும்போதெல்லாம் ஒரு அப்பாவாக என் கண்களில் கண்ணீர் பணிக்கும், நீங்களும் பாட்டை இரசியுங்கள் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
"குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு
கூடுமில்ல துணையுமில்ல வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
வியாழன், 18 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 85 "அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா" பேசாலைதாஸ்
"அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா" பேசாலைதாஸ்
நான் இரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ் பி முத்துராமனின் கைவண்ணத்தில் 1974 இல் வெளிவந்த, எங்கம்மா சபத்ம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! பாடல் ஆசிரியர் என் கவி ஆசான் கண்ணதாசன், இசை அமைப்பு விஜய்பாஸ்கர், பாடலை பாடியவர்கள் வாணி ஜெயராம், எஸ் பாலா. சங்ககாலத்தில் அன்னத்தை புறாவை பூவை தூது விட்டது போல, மேகத்தையும் காதலர்கள் தூதுவிட்டார்கள், மேகவிடு தூது என்ற ஒரு சங்க இலக்கிய படையலே இருக்கின்றது. இந்த பாடலில் வாணியின் குரல் அமுதமாக நெஞ்சிலே கொட்டுகின்றது, அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா!, கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது, கண்ணதாசின் வரிகள், வரிகள் அல்ல தேன் துளிகள்; நான் நீயன்றோ நீ நான்அன்றோ எனது மயக்கம் தெளிந்ததா என்று காதலி கேட்பதாக கவிஞர் வரிகளை கொட்டும் போது, வரிகள் சிந்தியதேன்? என பேசாலைதாஸ் சிந்தித்தான்! ஆம் ,சிந்தியது தேன் தான்! பாடலை கேளுங்கள் உங்கள் மனதில் கட்டாயம் தேன் சிந்தும்! அன்புடன் பேசாலைதாஸ்
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நான்அன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா
ணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
சனி, 13 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 84 " களங்கம் வந்தால் என்ன பாரு, அதற்கும் நிலா என்று பேரு, அட சந்தையிலே நின்றாலும் நீ, வீர பாண்டி தேரு" பேசாலைதாஸ்.
" களங்கம் வந்தால் என்ன பாரு, அதற்கும் நிலா என்று பேரு, அட சந்தையிலே நின்றாலும் நீ, வீர பாண்டி தேரு" பேசாலைதாஸ்.
என் கவித்தலைவன், கருவாச்சியின் கைக்குழந்தை, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிராக, சின்மயி என்ற பாட்டுக்காரி களங்கம் கற்பிக்க முயல்கின்றாள்! இதை நான் செவிமடு த்தபோது, நான் சினம் கொண்டேன், கூடவே எனக்கு வைரமுத்து எழுதிய பாடல் வரி என் சிந்தனையில் வலம் வந்தது!
என் கவித்தலைவா! நீ களங்காதே, நீயே எழுதிய பாடல்வரிகளை, உனக்கே உரிமையோடு எடுத்தியம்புகின்றேன், கள ங்கம் வந்தால் என்ன? நிலா, நிலாதான்! செந்தமிழ் கவி உலகின், எங்கள் அடையா ளம் நீ! நீ பெரும் கவிஞன், காமத்தை கடவுளாக பார்க்கும் திறன் கொண் டான்! மங்கையின் இடுப்பைப்பார்த்து, குறுக்கு சிறுத்த வளே! என்னை சந்தனத்தில் அரைத்தவளே! என்று மங்கையின் இடுப் பைப்பார்த்து, சந்தனம் என்றாயே உண்மையில் நீ கவிப்பொய்யன் தான்! சந்தேகமே இல்லை,
நீ இரசிப்பதற்கு எம் தமிழ் மங்கையர்கள் கொடுத்து, வைத்திருக்கவேண்டும், உன் பார்வையே தனி ரகம்! என் அப்பன் சிவன் பாடினானே, சங்க கால குறுந்தொகை செய்யு ளாக, இறையனார் அகப்பொருளில், கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி, காமஞ் செப்பாது கண்டது மொழிமோ , பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின், நறியவு முளவோநீ யறியும் பூவே.
எம் தமிழ் குலப்பெண்களின் தலைமயில் கூட, காமம் கொப்பளிக்கும் என்றானே என் கொப்பாட்டான் சிவ பெருமான்! அவன் என்ன பாலியல் தொந்தரவு செய்தானா? கங்கை கரைத்தோட்டத்தில், பெண்களின் சீலையை களவாடி, பெண்மையை இரசித்தானே, மதுசூதன் கண்ண பரமார்த்தா! அவன் என்ன பாலியல் தொந்தரவு செய்தானா? ஏன் தமிழ் கடவுள் சிவன் மீதும், பாடகி சின்மயின் இந்து கடவுள் மீதும், பாலியல் தொந்தரவு குற்றசாட்டு எழவில்லை? வெறும் சதைப்புணர்ச்சியில் இன்பம் காண்பவர் எம் தமிழ் புலவர் இல்லை என்பதை சின்மயி உணர்ந்திருக்க வேண்டும்!
என் கவி ஆசான் கண்ணதாசன் பாடினானே " ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும், ஒரு கோல மயில் என் துணை இருப்பு" அப்படியானால் பெண்களை இரசுத்து, அனுபவித்து, கவிதை தந்த காவியத்தாயின் இளைய மகன் மீது, பாலியல் தொந்தரவை வழக்கை பதிவு செய்யுங்கள் சின்மயி அவர்களே! ஈழத்து உறவுகள் செத்து மாண்ட போது, கவிதை பாடி, இதயங்களை ஈரமாக்கிய என் கவித்தலைவனுக்கு, உன் உடலை நக்கி, தன் நாக்கை ஈரமாக்க நினைத்திருப்பானோ சொல், வளர்த்த கடா பார்பில் பாய்ந் ததுபோல, உன்னை வளர்த்து ஆளாக்கிய வைரமுத்துவை வசைபாட துணிந்தாயோ நன்றி கெட்ட தெலுங்குகாரியே! உனக்கு முகவரி தந்த முகத்திலே காறி துப்புகின்றயே! உன் பார்ப்பன குனமே அப்படித்தான்! ஏய் சின்மயி உன்னை எச்சரிக்கின்றோம், உன் தவறை உணர்ந்து, மன்னிப்புக்கேள்! அன்புடன் பேசாலைதாஸ்
வெள்ளி, 12 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 83 "தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும், நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்" பேசாலைதாஸ்
"தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும், நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்" பேசாலைதாஸ்
பாண்டவர் பூமி என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் இது, பாடலாசிரியர் மிக இளவயது கொண்ட சினேகன் இசை அமைத்தவர் பரத்வாஜ் பாடியவர்கள் ரேஸ்மி யுகேந்திரன் எல்லோருமே புதியவர்கள் என்றாலும் பாடல் அசத்துகிறது. பாடலின் நட்பு என்ற கருத்து அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அழகான, உண்மையான நட்பை காணமுடியாது, உயர்வான நட்பு, காதலாக மாறும் போது அதன் சுவையே தனி! வெறும் உதவிக ளுக்காகவும், பணத்திற்காகவும் நட்பை பயண்படுத்துவதும், பின்னர் மெளனமாக விலகிச் செல்வதும், வாடிக்கையாகிவிட்டது, நட்பு என்றால் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காமல், பிரச்சனைகளை அவ்வப்போது சண்டைபோட்டு தீர்த்துகொள்வதும், நட்பை ஆழப்படுத்தும், அந்த நட்பு க்குள் பாலியல் உணர்வும் கலந்துவிட்டால்! சர்க்கரை கலந்த பாலாக உறவு மாறிவிடும்!
அற்ற குளத்து அறுநீர் பறவை போல, வற்றிய குளத்தை விட்டோடும் பறவைகள் போல, சிலர் நட்பை பயண்படுத்துவார்கள். நட்புக்கும் கற்பு உண்டு என்பதை சிலர் மறந்து விடுகின்றார்கள், எங்கே தமது பலவீனம், தவறுகள் தெரிந்துவிடும் என்பதற்காக ஒரு சிலர் மெள்னமாகிவிடுவார்கள், இந்த மெளனத்தை புரிந்து கொண்டு, நணப்ர் களாய் வந்தவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள் என்பதற்காக மெளன த்தை ஒரு சிலர் ஆயுதமாக பாவிப்பார்கள், காரணம் கேட்டால்,,,, இதய த்தில் பூஜிப்பதாக கதை பல அளப்பார்கள், இவர்களுக்கு நட்பு என்றால் என்னவென்று புரிவதில்லை, காதலையும் தெரிந்து கொளவதில்லை, மனதில் வரும் கவலைகள், பிரச்சனைகளை பேசிப்பபறிமாற நட்பை விட வேறு என்ன உறவு இருக்கமுடியும்! மனைவி, கணவன் இவர்களிடம் கூட பகிரமுடியா பல சிக்கல்களை நண்பர்களிடம் சொல்லி ஆருதல் அடையாலாம், தோள் கொடுப்பவர்களே தோழர், அவர்கள் உயிரையே தருவார்கள், ஒருபோதும் மெளன்மாய் விலகமாட்டார்கள்! இந்தபாடலை கேட்கும் போதெல்லாம் அப்படி ஒரு நட்பு கிடைக்காதா என்று மனம் ஏங்கும்
நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது, நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்கு ஆண் பெண் தெரியாது, நீயும் நானும் வெகு நேரம், மனம் விட்டு பேசி சிரித் தாலும், பிரியும் பொழுதும் சில நொடிகள், மௌனம் கொள்வது ஏன், தோழி? எவ்வளவு ஆழமான உணர்வுகளை கொட்டும் சினேகனின் வரிகள்! நண்பர்கள் என்றால் மனம்விட்டு மணிக்கணக்காக பேச ஆசை ப்படுவார்கள் அதன் மூலம் அததனை மனச்சுமைகளையும் இறக்கிவை க்கலாம் அது ஒருவரம்! எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை, சிலருக்கு மனவி, கணவன் கூட நட்பாக கிடைத்துவிடும் அவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள் தான்! அன்புடன் பேசாலைதாஸ்
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,
உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,
நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
—
நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,
பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,
பாண்டவர் பூமி என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் இது, பாடலாசிரியர் மிக இளவயது கொண்ட சினேகன் இசை அமைத்தவர் பரத்வாஜ் பாடியவர்கள் ரேஸ்மி யுகேந்திரன் எல்லோருமே புதியவர்கள் என்றாலும் பாடல் அசத்துகிறது. பாடலின் நட்பு என்ற கருத்து அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அழகான, உண்மையான நட்பை காணமுடியாது, உயர்வான நட்பு, காதலாக மாறும் போது அதன் சுவையே தனி! வெறும் உதவிக ளுக்காகவும், பணத்திற்காகவும் நட்பை பயண்படுத்துவதும், பின்னர் மெளனமாக விலகிச் செல்வதும், வாடிக்கையாகிவிட்டது, நட்பு என்றால் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காமல், பிரச்சனைகளை அவ்வப்போது சண்டைபோட்டு தீர்த்துகொள்வதும், நட்பை ஆழப்படுத்தும், அந்த நட்பு க்குள் பாலியல் உணர்வும் கலந்துவிட்டால்! சர்க்கரை கலந்த பாலாக உறவு மாறிவிடும்!
அற்ற குளத்து அறுநீர் பறவை போல, வற்றிய குளத்தை விட்டோடும் பறவைகள் போல, சிலர் நட்பை பயண்படுத்துவார்கள். நட்புக்கும் கற்பு உண்டு என்பதை சிலர் மறந்து விடுகின்றார்கள், எங்கே தமது பலவீனம், தவறுகள் தெரிந்துவிடும் என்பதற்காக ஒரு சிலர் மெள்னமாகிவிடுவார்கள், இந்த மெளனத்தை புரிந்து கொண்டு, நணப்ர் களாய் வந்தவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள் என்பதற்காக மெளன த்தை ஒரு சிலர் ஆயுதமாக பாவிப்பார்கள், காரணம் கேட்டால்,,,, இதய த்தில் பூஜிப்பதாக கதை பல அளப்பார்கள், இவர்களுக்கு நட்பு என்றால் என்னவென்று புரிவதில்லை, காதலையும் தெரிந்து கொளவதில்லை, மனதில் வரும் கவலைகள், பிரச்சனைகளை பேசிப்பபறிமாற நட்பை விட வேறு என்ன உறவு இருக்கமுடியும்! மனைவி, கணவன் இவர்களிடம் கூட பகிரமுடியா பல சிக்கல்களை நண்பர்களிடம் சொல்லி ஆருதல் அடையாலாம், தோள் கொடுப்பவர்களே தோழர், அவர்கள் உயிரையே தருவார்கள், ஒருபோதும் மெளன்மாய் விலகமாட்டார்கள்! இந்தபாடலை கேட்கும் போதெல்லாம் அப்படி ஒரு நட்பு கிடைக்காதா என்று மனம் ஏங்கும்
நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது, நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்கு ஆண் பெண் தெரியாது, நீயும் நானும் வெகு நேரம், மனம் விட்டு பேசி சிரித் தாலும், பிரியும் பொழுதும் சில நொடிகள், மௌனம் கொள்வது ஏன், தோழி? எவ்வளவு ஆழமான உணர்வுகளை கொட்டும் சினேகனின் வரிகள்! நண்பர்கள் என்றால் மனம்விட்டு மணிக்கணக்காக பேச ஆசை ப்படுவார்கள் அதன் மூலம் அததனை மனச்சுமைகளையும் இறக்கிவை க்கலாம் அது ஒருவரம்! எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை, சிலருக்கு மனவி, கணவன் கூட நட்பாக கிடைத்துவிடும் அவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள் தான்! அன்புடன் பேசாலைதாஸ்
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,
உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,
நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
—
நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,
பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,
புதன், 10 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 82 என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் பேசாலைதாஸ்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் பேசாலைதாஸ்
வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுச் சுழிகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது! வாலியின் வ்யோதிப பருவத்திலும் ஒரு வாலைபனைப்போல தன் உண
ர்வுகளை கொப்பளித்துவிடுகின்றார். கவிஞர்களுக்கு வயது என்பது வரம்பற்றது என்பதற்கு இது ஓர் சான்று!
இளையராஜாவின் ஹிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்! கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் வாலியின்வரிகள் மிக அழகானவை அன்புடன் பேசாலைதாஸ்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்..................
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றி ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்..................
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுச் சுழிகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது! வாலியின் வ்யோதிப பருவத்திலும் ஒரு வாலைபனைப்போல தன் உண
ர்வுகளை கொப்பளித்துவிடுகின்றார். கவிஞர்களுக்கு வயது என்பது வரம்பற்றது என்பதற்கு இது ஓர் சான்று!
இளையராஜாவின் ஹிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்! கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் வாலியின்வரிகள் மிக அழகானவை அன்புடன் பேசாலைதாஸ்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்..................
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றி ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்..................
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
சனி, 6 அக்டோபர், 2018
பாட்டும் பதமும் 81 “இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” பேசாலைதாஸ்
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” பேசாலைதாஸ்
என் கவிதை ஆசான் கண்ணதாசன் சொல்லுக்குள் சுகம் வைக்கும் ஒரு சித்தன், ஒரு சொல்லாலே முழுக்கதை சொல்லும் வல்லமை கொண்டவன். மேலஏ உள்ள இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை, எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், “சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?” # பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...! இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..? “ அது வந்து....
அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று.... அது இதுதான்...!
.
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்...
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும்
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் ....
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்...
வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!
.
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
.
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
.
#.. கதையைப் படித்து முடித்த நான் ,
கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
.
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
.
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..!
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் ,
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
.
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
.
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
.
# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் ,
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
.
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
.
# கவியரசர் கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...
பூஜிக்க வேண்டிய கவிஞன்..! மீண்டும் அடுத்த பதிவில் பேசாலைதாஸ்
சனி, 22 செப்டம்பர், 2018
பாட்டும் பதமும் 80 "சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு" பேசாலைதாஸ்
"சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு" பேசாலைதாஸ்
சொல்லுக்குள் சுகம் வைப்பவன் என் ஆசான் கண்ணதாசன். அவனை மிஞ்ச யார் இருக்கின்றார்? இசையும் இசைக்கு அவன் தரும் சொற் சிலம்பும் போதும் வாழ்வில் இரசித்துக்கொண்டே இருக்கலாம். நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது.இந்த பாடால் எனது கிராமத்து மீனவர்களு க்கு ரெம்ப பிடிக்கும். இதில்தான் நிறைய வலைகள் இருக்கின்றதே! கரவலை. விடுவலை, சுருக்குவலை, பாய்ச்சுவலை,களங்கட்டிவலை, கன்னிவலை, இப்படிப்பட்ட ஏகப்பட்ட வலைகள்! இந்த வலைகள் எல் லாம் கடல் வலைகள் ஆனால் காதல்வளைகள் வேறு. சின்னவளை முகம் சிவந்தவளை, என்னவளை காதல் சொன்னவளை, வந்தவளை கரம் தந்தவளை,பொங்குவளை கண்கள் கொண்டவளை, தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை, மொழி படித்தவளை என்று காடலுக்குள் எத்தனை வலைகள், காதலுக்குள் வளைகளும் உண்டு, வலிகளும் உண்டு. இந்த பாடல் இடம் பெற்ற படம் புதிய பூமி, இசை விஸ்வநாதன், பாடல் ஆசிரியர் என் ஆசான் கண்ணதாசன், இனி பாடலைகேட்டு இரசியுங்கள்!
"சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு
பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
(வந்தவளை..)
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)
படம்: புதிய பூமி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தராஜன், P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
திங்கள், 17 செப்டம்பர், 2018
பாட்டும் பதமும் 79 " நிலாவே வா! செல்லாதே வா " பேசாலைதாஸ்
" நிலாவே வா! செல்லாதே வா " பேசாலைதாஸ்
1986 இல் வெளிவந்த மணிரத்தினத்தின் மெளன ராகம் திரைப்படத்தில் வெளிவந்த பாடல் இது. பாடல் ஆசிரியர் வாலி, வாலியின் பாடல் என்றாலே காம இரசனை சொட்டும், ஆனால் இந்த பாடலில், மென்மையான, மனதை வருடும், மெல்லிய சோகம் கலந்த வரிகள், மனதை மெல்ல வருடுகின்றது. காதல் என்றாலே, இருத்தல், இரங்கல், ஏங்கள், தவித்தல், பிரிதல் என்ற ஐவகை நிலத்துக்கே உரிய தன்மை இருக்கத்தான் செய்யும், அதில் பிரிதலால் வ்ரும் ஏக்கம் தவிப்பு இவை ஏனோ மனதுக்குள் இனம் புரியா சோகத்தை விதைத்தாலும், அந்த சோகத்துக்குள்ளும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கின்றது. காவேரியா, கானல் நீரா பெண்மை! முள்வேலியா இல்லை முல்லைப்பூவா நீ சொல்லு! என்பதாக வரும் பாடல் வரிகள் அருமை! பூந்தேனே நீ சொல்லில் ஏன் வைத்தாய் முள்ளை? என்ற வினாப்போல வரும் பாடல் வரிகள்,, அதை கேட்கும் போது மனதுக்குள்ளே எங்கோ ஓர் இடத்தில் வலிக்கின்றது! நான் இரசித்த பாடலை நீங்களும் இரசித்து கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணனே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்...
புதன், 22 ஆகஸ்ட், 2018
பாட்டும் பதமும் 78 "இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன்" " இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்" பேசாலைதாஸ்
"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன்" " இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்" பேசாலைதாஸ்
இன்று எனது இரசவாதத்தில் இரண்டு பாடல்களை ஒருமித்து இரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இரண்டு பாடல்களும் வெவ்வேறு திரைப்படத்தில் வெளிவந்த கண்ணதாசனின் பாடல்கள். இரண்டுமே இறைவனைப்பற்றிய பாடல் கள் தான்! ஒரு பாடல் சாந்தி நிலையம் படத்தில் வெளிவந்தது. மற்றது ஏன் என்ற திரைப்படத்தில் வெளிவந்தது.
இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை - அவன் அன்பே நாம் பெறும் கருணை
வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன் சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு பாசம் என்பது வீடு உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் கண்ணில் வரும் பாதையை காணச் சொன்னான் நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான் கண்கள் அவனைக் காண்க உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க,,,, இவ்வளவு அழகான வரிகள் இந்தபாடலில் தொக்கி நிற்கின்றது
அத்போலவே இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு, ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று. கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு, காந்தியைப்போலவே காவியங்கள் உண்டு, முடிவு விளங்காத தொடர் கதை உண்டு. முடிக்கவேண்டும் என்று முடிப்பதும் உண்டு. கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்டிடம் பிறந்தை பெண்னுக்கே கொடுத்தான். மண்ணில் பிறந்ததை மண்ணுக்கே கொடுத்தான். வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான். கடவுளை வென்றது கவிஞனின் படைப்பு. ஒவ்வொரு வரிகளையும் கவனமாக இரசியுங்கள் அன்பர்களே அன்புடன் பேசாலைதாஸ்
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
பாட்டும் பதமும் 77 வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ? பேசாலைதாஸ்
வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ? பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞன். அனுபவ வாயிலாக அனைத்தையும் அறி ந்து கொள்ளும் ஒரு ஞானியாக கவிஞர் கண்ணதாசன் ஒருவ னால் மட்டுமே முடியும். “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடி யதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்து ஒரு பாடல் எழுதினான். வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாச னின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும்.
கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’. “ஒரு வன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்ப டியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இரு க்கிறது” என்று உரைத்தவன் அவன். இனி பாடலை கேளுங்கள்.
புதன், 15 ஆகஸ்ட், 2018
பாட்டும் பதமும் 76 கேட்டவரெல்லாம் ஆடாலம், என் பாட்டுக்கு தாளம் போடலாம்! பேசாலைதாஸ்
கேட்டவரெல்லாம் ஆடாலம், என் பாட்டுக்கு தாளம் போடலாம்! பேசாலைதாஸ்
இந்ததடவை நான் எடுத்துக்கொண்ட பாடல் இதுதான். தங்கை படத்துக்காக, கண்ண்தாசன் எழுத , விஸ்வனாதனின் இசையில் வளர்ந்த பாடல். இந்த பாடல் பிறந்த கதையே தனி ரகம்!கேட்டவரெல்லாம் பாடலாம் – தங்கை
கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.
திருலோக் situation சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.
முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.
அப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.
“சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.
அப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.
போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.
“இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.
“ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.
புன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.
அப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
பாட்டும் பதமும் 75 உன் கண்ணில் நீர்வழிந்தால்! என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" பேசாலைதாஸ்
" உன் கண்ணில் நீர்வழிந்தால்! என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" பேசாலைதாஸ்
வியட்நாம் வீடு திரைப்படத்தில் வரும் இந்த பாடல், மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்டது. நம்மை நெஞ்சைப்பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளைமட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், 'KVM பிளஸ் புகழேந்தி சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்தமாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டி.எம்.எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப்பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட.......
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றிவரும் பஞ்கச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி...
உன்னைக்கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப்போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக் கொள்ள....
சாலச்சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக்காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மனாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மனாபனைக்காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.....
முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக்குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
தேவையை யாரறிவார்... என்...... தேவையை யாரறிவார்
உன்னைப்போல தெய்வம் ஒன்றேயறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில்.... நீர் வழிந்தால்.... என் நெஞ்சில்.....
(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)
பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக்கொள்ளும் ரசிகர் கூட்டம்.
எழுதியவர் இல்லை, இசைவடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவரும் போய்விட்டார்... ஆனாலும் இன்னமும் நெஞ்சுக்குள் உதிரம் கொட்டுகின்றதே இந்த பாடலை மீண்ண்டு மீண்டும் கேட்க,,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
பாட்டும் பதமும் 74 அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு,உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை" பேசாலைதாஸ்
"அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு,உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை" பேசாலைதாஸ்
இருமலர்கள் திரைஅப்படத்தில் வெளிவந்த பாடல் இது! மன்னிக்கவேண் டுகின்றேன், கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மாதவி பொன்மயிலால் பாடல்கள் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நான் உங்களோடு சிலாகிக்கி ன்றேன். 'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.
திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.
ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.
கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.
இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.
'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே
கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு. அன்புடன் பேசாலைதாஸ்
பாட்டும் பதமும் 73 மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது பேசாலைதாஸ்
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது பேசாலைதாஸ்
ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போது, மற்ற பாடல்கள் பின்தங்கி, அவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படி, மற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' பாடல்.
பெரிய சிவாஜியின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடலும், 'நீயும் நானுமா கண்ணா' பாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான சிவாஜியின் கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவது, அவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே'பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூட, மெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலுக்கு.
ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும், சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும், ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.
இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது,இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றதுபுதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றதுபுதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது
கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....
அன்பு என்னும் கோயில்தன்னிலேபாசம் என்னும் தீபம் தன்னிலேஉள்ளம் ஒன்று மயங்குகின்றதுதன்னை எண்ணி கலங்குகின்றதுதன்னை எண்ணி கலங்குகின்றது
இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட்,பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.
வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட்,வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.
என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது,இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றதுபுதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றதுபுதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது
கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....
அன்பு என்னும் கோயில்தன்னிலேபாசம் என்னும் தீபம் தன்னிலேஉள்ளம் ஒன்று மயங்குகின்றதுதன்னை எண்ணி கலங்குகின்றதுதன்னை எண்ணி கலங்குகின்றது
இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட்,பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.

வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட்,வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.
என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...