புதன், 22 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 78 "இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த க‌விதை மனிதன்" " இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்" பேசாலைதாஸ்


"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த க‌விதை மனிதன்"  " இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்" பேசாலைதாஸ்
                                                                             இன்று எனது இரசவாதத்தில் இரண்டு பாடல்களை ஒருமித்து இரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இரண்டு  பாடல்களும் வெவ்வேறு திரைப்படத்தில் வெளிவந்த கண்ணதாசனின் பாடல்கள். இரண்டுமே இறைவனைப்பற்றிய பாடல் கள் தான்! ஒரு பாடல் சாந்தி நிலையம் படத்தில் வெளிவந்தது. மற்றது ஏன் என்ற திரைப்படத்தில் வெளிவந்தது.
இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை - அவன் அன்பே நாம் பெறும் கருணை
வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன் சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு  பாசம் என்பது வீடு உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் கண்ணில் வரும் பாதையை காணச் சொன்னான் நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான் கண்கள் அவனைக் காண்க உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க,,,, இவ்வளவு அழகான வரிகள் இந்தபாடலில் தொக்கி நிற்கின்றது 


                                                அத்போலவே இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு, ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று. கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு, காந்தியைப்போலவே காவியங்கள் உண்டு,  முடிவு விளங்காத தொடர் கதை உண்டு. முடிக்கவேண்டும் என்று முடிப்பதும் உண்டு. கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்டிடம் பிறந்தை பெண்னுக்கே கொடுத்தான். மண்ணில் பிறந்ததை மண்ணுக்கே கொடுத்தான். வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான். கடவுளை வென்றது கவிஞனின் படைப்பு. ஒவ்வொரு வரிகளையும் கவனமாக இரசியுங்கள் அன்பர்களே அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...