வியாழன், 18 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 85 "அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா" பேசாலைதாஸ்


"அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா" பேசாலைதாஸ்
                    

நான் இரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ் பி முத்துராமனின் கைவண்ணத்தில் 1974 இல் வெளிவந்த, எங்கம்மா சபத்ம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! பாடல் ஆசிரியர் என் கவி ஆசான் கண்ணதாசன், இசை அமைப்பு விஜய்பாஸ்கர், பாடலை பாடியவர்கள் வாணி ஜெயராம், எஸ் பாலா. சங்ககாலத்தில் அன்னத்தை புறாவை பூவை தூது விட்டது போல, மேகத்தையும் காதலர்கள் தூதுவிட்டார்கள், மேகவிடு தூது என்ற ஒரு சங்க இலக்கிய படையலே இருக்கின்றது. இந்த பாடலில் வாணியின் குரல் அமுதமாக நெஞ்சிலே கொட்டுகின்றது, அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா!, கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது, கண்ணதாசின் வரிகள், வரிகள் அல்ல தேன் துளிகள்; நான் நீயன்றோ நீ நான்அன்றோ எனது மயக்கம் தெளிந்ததா என்று காதலி கேட்பதாக கவிஞர் வரிகளை கொட்டும் போது, வரிகள் சிந்தியதேன்? என  பேசாலைதாஸ் சிந்தித்தான்! ஆம் ,சிந்தியது தேன் தான்! பாடலை கேளுங்கள் உங்கள் மனதில் கட்டாயம் தேன் சிந்தும்!  அன்புடன் பேசாலைதாஸ்


அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா


கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நான்அன்றோ

எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா


ணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு

வா மஞ்சமே பார் நெஞ்சமே

புதிய உலகம் திறந்தது

பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...