"குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா" பேசாலைதாஸ்
1960 களில் வெளிவந்த இரு வல்லவர்கள் திரைப்படத்தில் வெளிவந்த பாடல் இது; குடுமபத்தில் அம்மா அப்பா இவருக்கும் இடையில் ஏர்படுகின்ற கருத்துவேறுபாடுகள், சண்டைகள் , ஒரு பிஞ்சு மனதில் எத்தகைய உளவியல் தாக்கத்தை, ஏக்கத்தை ஏற்படு த்தும் என்பதை இப்பாடல் மிக அழகாக சித்தரிக்கின்றது ,இந்த பாடலை யும், களத்தூர் கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பிரபல பாடலையும் 'மியாவ் மியாவ் பூனைக் குட்டி', 'கோழி ஒரு கூட்டிலே', உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் மூலம் குழந்தை குரலில் பாடி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் எம்.எஸ். ராஜேஸ்வரி, கமலஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படத்தில் மிக பிர பலமான 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடலையும் பாடியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரியை, காரைக்குடி ஏவி.எம். கலையகத்தில் அப்போதைய பிரபல இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரி யை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டி யார் ராஜேஸ்வரியை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார்.இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 'ராமராஜ்யா' திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார் ஏவி.எம். செட்டியார். இந்தப் படத்தில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடி னார். இதன் பின்பு ஏவி.எம். பட நிறுவனம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறியபோது ராஜேசுவரியும் சென்னைக்கு வந்தார்.
'நாம் இருவர்' திரைப்படத்தில் 'கருணாமூர்த்தி காந்தி மகாத்மா', 'மகான் காந்தி மகான்' ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றி கரமாக ஓடியது.
அடுத்து 'வேதாள உலகம்' திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 'ஆகா ஆனந்தமானேன்' என்ற பாட லைப் பாடினார். 'வாழ்க்கை' படத்தில் 'உன் கண் உன்னை ஏமாற் றினால்' என்ற பாடலை டி..ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து பாடி யுள்ளார்.
1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இதனால் இவர் 'மழலைக் குரல் பாடகி' என அழைக்கப்பட்டார். கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான 'களத் தூர் கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற 'அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே' என்ற பாடலை பாடியது இவர்தான். மேலும், இவர் பாடிய 'மியாவ் மியாவ் பூனைக் குட்டி', 'ஓ ரசிக்கும் சீமானே', 'கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே' போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை . எம் எஸ் இராஜேஸ்வரி தனது குழந்தை குரலால் பாடிய அத்தனை பாடலக்ளும் எனக்கு பிடிக்கும், அதிலும் சிறப்பாக குவா குவா பாப்பா எப்பொழுதும் எனக்கு பிடிக்கும், இந்த பாட்லை நான் கேட்கும் போதெ ல்லாம், இப்பொழுது வளர்ந்து குமரிகளாகி, வைத்தியர்களாக இருக்கும் எனது முதல் பெண்குட்டியும், எனது கடை பெண்குட்டியும், பாப்பா க்களாக இருந்த அந்த காலம், என் நினைவுச்சுழியில் வந்து போகும், ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா,அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா இந்தவரிகளை கேட்கும்போதெல்லாம் ஒரு அப்பாவாக என் கண்களில் கண்ணீர் பணிக்கும், நீங்களும் பாட்டை இரசியுங்கள் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
"குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு
கூடுமில்ல துணையுமில்ல வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக