ஞாயிறு, 23 டிசம்பர், 2018

பாட்டும் பதமும் 89 "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்" பேசாலைதாஸ்


"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்"  பேசாலைதாஸ்

                                                  நான் முருக பக்தனல்ல, ஆனாலும் இந்து கலாச்சாரங்கள் பற்றிய மேல திக வகுப்புகளுக்கு நான் உயர்தர கல்வி பயி லும் போது செல்வதுண்டு, யாழ்ப்பாணதில் கனகரத்தினம் மகாவித்தியலயம் என்ற சைவ கல்லூரியில் கற்றதினால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் என்ற பாடல் பக்தி உட்சாகத்தை தரக்கூடிய பாடல், அந்த பாடலை எழுதியவர் என் கவி ஆசான் கண்ணதாசன் என்றுதான் நினைத்திருந்தேன், அந்த பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்ற விடயம் எனக்கு பின்னரே தெரியவந்தது, அதிலும் இந்த பாடல் வரிகளை இயக்குணர் அவர்கள் கண்ணதாச னிடம் காட்டி, இது போன்ற ஒரு பாடலை எழுதும் படி கேட்டாராம்,  

                                                                        முழுபாடலையும் கேட்ட கண்ணதாசன், “இதுவே ரொம்ப நல்லா இருக்கு. அதுல“ சென்னையிலே கந்தகோட்டம் உண்டு” என்ற  வரியை மட்டும் “சிறப்புடனே கந்தகோட்டம் உண்டு
“என்று மாற்றிக் கொள்ளுங்கள்“ என்று அந்தபாடலை ,அந்தபாடல் ஆசிரியர் பெயரிலேயே வெளியிட செய்தார். பூவை செங்குட்டுவன் என்றஅந்த பாடல் ஆசிரியரின் திரையுலக பிரவேசத்திற்கு கதவுகளை திறந்துவிட்டார் கண்ணதாசன், கண்ணதாசன் புதுசாக யாரும் திரை உலகத்தில் பாட்டு எழுத வந்தால் அதனை அவர் போட்டியாக கருதுவதில்லை, அவர்களை தட்டிக்கொடுத்து வளர்த்தெடுப்பதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணதாசன் என் மனத்திரையில் சிரிப்பது போல ஒரு பிரமை, 
இசை ரசிகன் பேசாலைதாஸ்


  மேலதிகமாக வாசிக்க https://pesalaithas.com என்ற இனையத்தளத்தையும் பார்வையிடலாம் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...