" நிலாவே வா! செல்லாதே வா " பேசாலைதாஸ்
1986 இல் வெளிவந்த மணிரத்தினத்தின் மெளன ராகம் திரைப்படத்தில் வெளிவந்த பாடல் இது. பாடல் ஆசிரியர் வாலி, வாலியின் பாடல் என்றாலே காம இரசனை சொட்டும், ஆனால் இந்த பாடலில், மென்மையான, மனதை வருடும், மெல்லிய சோகம் கலந்த வரிகள், மனதை மெல்ல வருடுகின்றது. காதல் என்றாலே, இருத்தல், இரங்கல், ஏங்கள், தவித்தல், பிரிதல் என்ற ஐவகை நிலத்துக்கே உரிய தன்மை இருக்கத்தான் செய்யும், அதில் பிரிதலால் வ்ரும் ஏக்கம் தவிப்பு இவை ஏனோ மனதுக்குள் இனம் புரியா சோகத்தை விதைத்தாலும், அந்த சோகத்துக்குள்ளும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கின்றது. காவேரியா, கானல் நீரா பெண்மை! முள்வேலியா இல்லை முல்லைப்பூவா நீ சொல்லு! என்பதாக வரும் பாடல் வரிகள் அருமை! பூந்தேனே நீ சொல்லில் ஏன் வைத்தாய் முள்ளை? என்ற வினாப்போல வரும் பாடல் வரிகள்,, அதை கேட்கும் போது மனதுக்குள்ளே எங்கோ ஓர் இடத்தில் வலிக்கின்றது! நான் இரசித்த பாடலை நீங்களும் இரசித்து கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணனே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக