திங்கள், 26 நவம்பர், 2018

பாட்டும் பதமும் 88 " இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகின்றாள் துணையை எண்ணி" பேசாலைதாஸ்


" இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகின்றாள் துணையை எண்ணி" பேசாலைதாஸ்


                   


                                           பெண் இயற்கையின் சீதனப்பரிசு என்று கவியரசர் கண்ணதாசன் பாடினான், இந்த பாடலும் அதையே சொல்லவருகின்றது, அதுபோகட்டும், இந்த பாடலுக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களா? இருக்கவே இருக்கின்றது, இணையத்தில் ஒரு இரசிகன் இப்படி அடித்து சொல்கின்றார்.,,,, இது உண்மையான தகவல். M.G.R. அவர்களுக்கும், T.M.S. அவர்களுக்கும் வருத்தம் ஏற்ப்பட்டது உண்மையே. இங்கு காரணம் குறிப்பிடவில்லை அடியேன் அப்போதே ( 197I ) அறிந்த விடயம்,  அடிமைப்பெண் படம் ஷூட்டிங் நடந்துகொண்டு இருந்தது. " ஆயிரம் நிலவே வா " என்ற பாடல் பதிவிற்காக T.M.S. அவர்களும் , சுசீலா அவர்களும் ஸ்டுடியோவில் காத்திருக்க , M.G.R. அவர்கள் வரவில்லை.  
      
                                                                                                      விடிந்தால் மதுரையில் T.M.S. அவர்களின் பெண்ணின் திருமணம்.  வெகுநேரமாகியும் M.G.R. வராததால்  நான் மதுரை புறப்பட்டு செல்கிறேன்  மீண்டும் வந்து பாடி கொடுக்கிறேன் என அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு , T.M.S. புறப்பட்டு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அங்கு வந்த M.G.R. T.M.S. இல்லாதை கண்டு, கடும் கோபம் கொண்டு கூப்பிடு அந்த பாலசுப்பிரமணியத்தை என்று கூறி, அந்த பாடல் S.B.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொடுக்கப் பட்டது. அப்போது சாந்தி நிலையம்  என்ற படம் வெளிவந்து , அதில் " இயற்கை என்னும் இளைய கன்னி " என்ற பாடல் சுசீலாவுடன் S.B.P. பாடியிருந்தார். அந்த பாடலை கேட்ட M.G.R. அவருக்கு உடனே வாய்ப்பு கொடுத்துள்ளார்.  அதன் பிறகு T.M.S. M.G.R. படங்களில் ஓரங்கட்டப்பட்டார். இதுதான் உண்மை. இதுபோல இன்னொரு விடயம்!

                                                                                               வெளி நாட்டில் நடந்த ஒரு மெல்லிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட T.M.S. டம் எம்.ஜி.ஆர் பாட்டு பாடுங்க என்று ரசிகர்கள் கூச்சலிட்டனர். ஆத்திரம் அடைந்த T.M.S எதுய்யா M.G.R பாட்டு ....? அவை எல்லாம் நான் பாடிய பாடல்கள் , என்னுடைய குரலால் தான் அவருக்கு புகழ் கிடைத்தது என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இந்த விஷயம் M.G.R ன் காதுக்கு போனது. அதன் பிறகு எஸ்.பி.பி யும் யேசுதாஸும் அதிக அளவில் அவருக்கு பின்னணி பாடினர். " இன்று போல் என்றும் வாழ்க"...படத்தில் "அன்புக்கு நானடிமை தமிழ்ப் பண்பிற்கு நானடிமை...என்று யேசுதாஸின் குரல் M.G.R க்காக ஒலித்த போது அது பொருநத்வில்லை என்ற பேச்சு எழுந்தது. T.M.S எப்போதும் கணீர் என்று பாடக்கூடியவர். 
    * நான் ஆணையிட்டால்.....
    * உலகம் பிறந்தது எனக்காக
    * நினைத்ததை நடத்தியே 
    * நான் உங்கள் வீட்டுப் 
எத்தனை எத்தனை இனிய பாடல்கள் டி.எம்.எஸ் குரலில் M.G.R க்காக அடடா....?  ஆக மொத்தத்தில், இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல் தான் எஸ்.பி. பாலவின் முதல் பாடல், நான் இதுவரை நினைத்தது ஆயிரம் நிலவே வா என்ற பாடல்தான் அவரின் முதல் பாடல் என்று,,,,,,,,,,,, என்றும் அன்புடன் பேசாலைதாஸ்


படம் - சாந்தி நிலையம்
இசை - எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா

பி எஸ்
ஆஹுஹா......
எஸ் பி 
ஓஓஹோ......
இருவரும்
ஆ ஆ ஆ.......

எஸ் பி 
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பி எஸ்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பி எஸ்
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
பி எஸ்
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கே தூது விட்டாள்
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
பி எஸ்
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சள் ஒன்று போடலாமே
பி எஸ்
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆஹுஹா....ஹுஹா.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...