சனி, 22 செப்டம்பர், 2018

பாட்டும் பதமும் 80 "சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு" பேசாலைதாஸ்


"சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு" பேசாலைதாஸ்
சொல்லுக்குள் சுகம் வைப்பவன் என் ஆசான் கண்ணதாசன். அவனை மிஞ்ச யார் இருக்கின்றார்? இசையும் இசைக்கு அவன் தரும் சொற் சிலம்பும் போதும் வாழ்வில் இரசித்துக்கொண்டே இருக்கலாம். நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது.இந்த பாடால் எனது கிராமத்து மீனவர்களு க்கு ரெம்ப பிடிக்கும். இதில்தான் நிறைய வலைகள் இருக்கின்றதே! கரவலை. விடுவலை, சுருக்குவலை, பாய்ச்சுவலை,களங்கட்டிவலை, கன்னிவலை, இப்படிப்பட்ட ஏகப்பட்ட வலைகள்! இந்த வலைகள் எல் லாம் கடல் வலைகள் ஆனால் காதல்வளைகள் வேறு. சின்னவளை முகம் சிவந்தவளை, என்னவளை காதல் சொன்னவளை, வந்தவளை கரம் தந்தவளை,பொங்குவளை கண்கள் கொண்டவளை, தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை, மொழி படித்தவளை என்று காடலுக்குள் எத்தனை வலைகள், காதலுக்குள் வளைகளும் உண்டு, வலிகளும் உண்டு. இந்த பாடல் இடம் பெற்ற படம் புதிய பூமி, இசை விஸ்வநாதன், பாடல் ஆசிரியர்  என் ஆசான் கண்ணதாசன், இனி பாடலைகேட்டு இரசியுங்கள்!


"சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு
பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
(வந்தவளை..)

வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)

படம்: புதிய பூமி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தராஜன், P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...