பாண்டவர் பூமி என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் இது, பாடலாசிரியர் மிக இளவயது கொண்ட சினேகன் இசை அமைத்தவர் பரத்வாஜ் பாடியவர்கள் ரேஸ்மி யுகேந்திரன் எல்லோருமே புதியவர்கள் என்றாலும் பாடல் அசத்துகிறது. பாடலின் நட்பு என்ற கருத்து அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அழகான, உண்மையான நட்பை காணமுடியாது, உயர்வான நட்பு, காதலாக மாறும் போது அதன் சுவையே தனி! வெறும் உதவிக ளுக்காகவும், பணத்திற்காகவும் நட்பை பயண்படுத்துவதும், பின்னர் மெளனமாக விலகிச் செல்வதும், வாடிக்கையாகிவிட்டது, நட்பு என்றால் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காமல், பிரச்சனைகளை அவ்வப்போது சண்டைபோட்டு தீர்த்துகொள்வதும், நட்பை ஆழப்படுத்தும், அந்த நட்பு க்குள் பாலியல் உணர்வும் கலந்துவிட்டால்! சர்க்கரை கலந்த பாலாக உறவு மாறிவிடும்!
அற்ற குளத்து அறுநீர் பறவை போல, வற்றிய குளத்தை விட்டோடும் பறவைகள் போல, சிலர் நட்பை பயண்படுத்துவார்கள். நட்புக்கும் கற்பு உண்டு என்பதை சிலர் மறந்து விடுகின்றார்கள், எங்கே தமது பலவீனம், தவறுகள் தெரிந்துவிடும் என்பதற்காக ஒரு சிலர் மெள்னமாகிவிடுவார்கள், இந்த மெளனத்தை புரிந்து கொண்டு, நணப்ர் களாய் வந்தவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள் என்பதற்காக மெளன த்தை ஒரு சிலர் ஆயுதமாக பாவிப்பார்கள், காரணம் கேட்டால்,,,, இதய த்தில் பூஜிப்பதாக கதை பல அளப்பார்கள், இவர்களுக்கு நட்பு என்றால் என்னவென்று புரிவதில்லை, காதலையும் தெரிந்து கொளவதில்லை, மனதில் வரும் கவலைகள், பிரச்சனைகளை பேசிப்பபறிமாற நட்பை விட வேறு என்ன உறவு இருக்கமுடியும்! மனைவி, கணவன் இவர்களிடம் கூட பகிரமுடியா பல சிக்கல்களை நண்பர்களிடம் சொல்லி ஆருதல் அடையாலாம், தோள் கொடுப்பவர்களே தோழர், அவர்கள் உயிரையே தருவார்கள், ஒருபோதும் மெளன்மாய் விலகமாட்டார்கள்! இந்தபாடலை கேட்கும் போதெல்லாம் அப்படி ஒரு நட்பு கிடைக்காதா என்று மனம் ஏங்கும்
நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது, நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்கு ஆண் பெண் தெரியாது, நீயும் நானும் வெகு நேரம், மனம் விட்டு பேசி சிரித் தாலும், பிரியும் பொழுதும் சில நொடிகள், மௌனம் கொள்வது ஏன், தோழி? எவ்வளவு ஆழமான உணர்வுகளை கொட்டும் சினேகனின் வரிகள்! நண்பர்கள் என்றால் மனம்விட்டு மணிக்கணக்காக பேச ஆசை ப்படுவார்கள் அதன் மூலம் அததனை மனச்சுமைகளையும் இறக்கிவை க்கலாம் அது ஒருவரம்! எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை, சிலருக்கு மனவி, கணவன் கூட நட்பாக கிடைத்துவிடும் அவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள் தான்! அன்புடன் பேசாலைதாஸ்
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,
உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,
நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
—
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
—
நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,
பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக