வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 77 வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ? பேசாலைதாஸ்


வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ?  பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞன். அனுபவ வாயிலாக அனைத்தையும் அறி ந்து கொள்ளும் ஒரு ஞானியாக கவிஞர் கண்ணதாசன் ஒருவ னால் மட்டுமே முடியும்.  “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடி       யதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்து  ஒரு பாடல் எழுதினான். வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி –        என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாச னின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். 
                                               கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’.  “ஒரு வன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்ப டியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இரு க்கிறது” என்று உரைத்தவன் அவன். இனி பாடலை கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...