சனி, 28 ஜூலை, 2018

பாட்டும் பதமும் 70 "கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே"! பேசாலைதாஸ்


"கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே"! பேசாலைதாஸ்
                                                                   அடுத்தவீட்டுப்பெண் திரைப்படத்துகாக கவிஞர் எழுதிய இந்த பாடலை சீனிவாசன் இர்ம்ப அழகாக பாடியுள் ளார். காதலியின் பார்வை இல்லாமல் காதல் ஏது? பார்வை ஒன்ரே போதுமே! பல்லாயிரம் சொல் தேவையா? இப்படி காதல் வசப்பட்ட பார்வையை மிக அழகாக வர்ணித்துக்கொண்டே என்னால் பக்கம் பக் கமாக எழுத முடியும், எதற்கு அந்த வீண் சிரமம்! கண்ணின் கடைப் பார்வை, காதலியர் காட்டிவிட்டால், மண்ணின் மைந்தர்களுக்கு, மாம லையும் ஒரு கடுகாம் என பாவேந்தன் பாடிச்சென்றபின், நான் கைத்தறி, சொல்வதற்கு இனி என்ன இருக்கின்றது? 

                                                                       கவிஞர் பாடல் வரிகளிலே பார்வையில் போதை உண்டாகுவதாக கூறுகின்றார். உண்மைதான் ரதியவள், பட்டு மதி மயங்கய இளைஞர்கள் எத்தனை? அன்னமே உன் பின்னால் ஆசை வெட்கம் அறியாமல் என்னனென்னமோ.செய்யத்தோன்றும்!  மதுவை காதலி, தன் பார்வையில் மதுவை ஏந்தி நிற்கின்றவேளையில் மனம் படகு போல, தத்தளித்து தள்ளாடுமே! தமிழ் பாடல்கள் அத்தனை வரி களை நீங்கள் ஆழங்கண்டு இரசிப்பீர்கள் என்றால் உண்மையில் நீங்க ளும் ஒரு சின்ன கவிஞன் ஆகிவிடுவீர்கள் இனி பாடலை கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் 
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே


காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)


பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே


காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...