வெள்ளி, 27 ஜூலை, 2018

பாட்டும் பதமும் 69 " கம்பன் ஏன் ஏமாந்தான்?" பேசாலைதாஸ்

" கம்பன் ஏன் ஏமாந்தான்?" பேசாலைதாஸ்

                          இயக்குணர் சிகரம் கே பாலசந்தர் இயக்கத்தில், கமலஹாசன் நடித்து வெளி வந்த, நிழல் நிஜமாகின்றது என்ற படத்தில் இடம் பெறுகின்றது . இந்த பாடல். வரிகளுக்கு சொந்தகாரன் கவியரசு கண்ணதாஸன்.. பூ ஒன்று புயலாவது போல, பெண்மைக்குள் ஒழிந்துள்ள, ஆத்திரம் கோபம்,  ஆண்களை ஆளவேண்டும் என்கின்ற ஆதிக்க மன உணர் வுகளை நியாயப்படுத்த பாலச்சந்தர் இயக் கிய படம் நிழல் நிஜமாகின்றது. நிழல் நிஜமா கிற்றோ என்னவோ, ஆனால் பாலச்சந்தர்,  கண்ணதாசன் போன்ற‌வர்களின் உண்மை முகம் இங்கே நிஜமாகின்றது.

                                                                     என்னை நான், கைத்தறி என்று அதாவது கண்ணதாஸின் அபிமானி என நினைத்துள்ளேன், அவரது கவியின், மேன்மை குறித்து, புலகாங்கிதம் அடைந்துள்ளேன். இருந்தாலும், கண்ணதாசன் முரண்பட்ட ஒரு மனிதர் என்பதை அவ்வப்போது வெளிப் படுத்த தவறியதில்லை.. பெண்மையை உயர்வாக, பெண் விடுதலையை போற்றி, ஆண் அதிக்கத்த சாடும் கவியரசு, இந்த பாட லில், ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால், அடங்குதல் முறைதானே! என வாக்காலத்து வாங்கியுள்ளார்! பெண்கள் என்றால் சுவைதரும் போதை பொருளா? அவளுக்கு வரும் கோபம், நியாயமாக இருக்கக் கூடாதா? அருஞ்சுவை ப்பால் என்று ஏன் சொன்னான், அவள் கொதிப்பதினால் தானா? பெண்கள் பால் போல, சுவைக்க வேண்டும், கோபப்பட்டு கொதிக்கக் கூடாது, அப்படி கொதித்தாலும், படுக்கையில் மட்டும் காமம், கொப் பளிக்க கொதிக்கலாம்! இதைத்தானே பாலச்சந்தரும், கண்ணதாஸனும் சொல்லவருகின்றார்கள்!

                                                 கதைக்காக, கதாநாயகனின் ஆண் ஆதிக்கத்தை கவிஞர் நியாயப்படுத்த முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்க ளின் உரிமைக்காக போராடவேண்டும், அவள் சுதந்திரமாக, அனைத்து உரிமைகள், விசேட உரிமைகள் பெற்று, ஆணைவிட உயர்வாக வாழும் போதுதான், அந்த சமூகம், அந்த நாடு வெற்றிகரமான, சந்தோசம் தரும் நாடாக, உலகில் முதல் தரத்தில் இருக்கும் என்பதை, நோர்வே நாட்டில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நோர்வே அரசியல், கலை இலக்கியம் எல்லாமே பெண் உரிமை விடுதலை பற்றி பேசியதினால் தான், இன்று  அவர்கள் வெற்றி கண்டு, முதல் தர நாடாக, பொருளாதார, சமூக, சந்தோச உணர்வில் மகிழ்ச்சியாக வாழ்கின்றர்கள், பாடலைகேட்டுவிட்டு, என் கருத்தை ஆமோதிக்க வேண்டுகின்றேன். கம்பன் ஏமாறலாம், கன்னதாசன் ஏமாறலாம் ஆனால் நாம் ஏமாறக்கூடாது. புதிய காலாச்சாரம் வளர்ப்போம், அதில் பெண்மையை தூக்கி நிறுத்துவோம் அன்புடன் பேசாலைதாஸ்

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
கம்பன் ஏமாந்தான்...

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ


வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்..
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...