சனி, 4 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 71 மலர் என்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்! மனம் என்ற கறுவண்டு பறக்கட்டும்! பேசாலைதாஸ்


மலர் என்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்! மனம் என்ற கறுவண்டு பறக்கட்டும்!  பேசாலைதாஸ்
                                                            ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று மனித சிந்தனையை மல‌ர்களுக்கு ஒப்பிட்டு பேசினார் சீனாவின் கம்யூனிஸ்ட் புரட்ச்சி தந்தை மாவோ. அதற்கு மேலாக மனிதர்களிடம் உள்ள மாற்று சிந்தனைகளை மலர்களுக்கு ஒப்பிட்டு, மாற்றான் தோட்டத்து மலர்களுக் கும் வாசம் உண்டு என்றார் தமிழ் அறிஞன் அண்ணாதுரை. 

                                                      பெண்களை மலர்களுக்கு ஒப்பிட்டு கவிதைகள் எழுதினார்கள் தமிழ் கவிஞர்கள். பூவிலும் மெல்லிய பூங்கொடி என்றும், மல்லிகை பூவிலும் மெல்லிய மாது என்றும், சினிமா கவிஞர்கள் மங்கை யையும் மலர்களையும் ஒப்பிட்டு கவிதை படைத்தனர். 1964 இல் வெளி வந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் வெளிவந்த பாடல் மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டுமே மனம் என்ற கறுவண்டு பறக்கட்டுமே! 

                                                                         இந்த பாடலைல் கவிஞர் கண்ணதாசன் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை என்றாலும் விஸ்வநாதனின் இசை அமைப்பு நன்றாக உள்ளது Rock and Roll ஆங்கில இசைப்பாடல் போல இந்த பாடல் அமைந்துள்ளது. ஆடிடும் சின்ன உடல், பாடிடும் சின்ன இதழ், அஞ்சிடும் சின்ன இடை, கெஞ்சிடும் வஞ்சி இடை, இப்படி கவிஞ ரின் சொல் பிரவாகம் இந்த பாடலில் தாராளமாக கொட்டும் நீங்களும் இரு முறை பாட்டை கேட்டு இரசித்துப்பாருங்கள் அன்புடன் உங்கள் இரசிகன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...