சனி, 21 ஜூலை, 2018

பாட்டும் பதமும் 67 கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும், கோலங்கள், துடுப்புக்கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்" பேசாலைதாஸ்

"கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும், கோலங்கள், துடுப்புக்கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்"  பேசாலைதாஸ்

                       வரைமுத்துவை சினிமா உலகில் தூக்கி நிறுத்திய தத்துவப் பாடல் இது. கேட்ட மாத்திரத்திலே என்னடா வாழ்கை என சிந்திக்கத் தூண்டும் அத்தனை சத்தான வரி கள். துடுப்புக்கூட பாரம் என் நினைக்கும் ஓடங்களாய் சிலரின் வாழ்க்கைப்படகு அமைத்துவிடு வதை நாம் பார்க்கின்றோம். இரக் கம் நம் உள்ளத்தில் அப்போது துளிர்விடுகின்றது, ஓடிப்போய் உதவி செய்கின்றோம், ஆனால் உதவிபெற்றவர்கள் அதை அந்த கனமே மறந்துவிடுவது வேடிக்கையா னதும், வேதனையானது ஆகிவிடுகின்றது. 

                                           ஒரு சிலர் அப்படி செய்கின்றார்களே என்பதற்காக இரக்கப்படாமல் இருந்துவிடுவது முட்டாள்தனம்! இரக்கம் உள்ளவர்கள் பேறுபெற்றவர்கள்!,,,,,. பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி ,இருகின்ற தென்பது மெய் தானே, இவ்வுலகில் இருக்கும்வரை இரக்கத்துடன் இருந் துவிட்டுப்போவோமே! உடம்பு என்பது உண்மையில் என்ன ? கனவுகள் வாங்கும் பை தானே! இதற்கு ஆசை என்னும் ஜன்னல்கள் எதற்கு? காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா! மெய்யென்று மேனியை எவன் சொன்னது? உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் கடைசியில் மீதமாக எது இருக்கின்றது என்று, விடை இல்லை, காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் ,வாலிபம் என்பது பொய் வேஷம் ,தூக்கத்தில் பாதி...துக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி ,போனது போக எது மீதி? 

                                           எனோ இந்தப்படலை கேட்கும் இரசிக்கும் ஒவ்வொரு தருனமும், என் சிந்தனை மெய்ஞானத்தை தேடி வாஞ்சையாக அலை யும்,,, நீங்கள் எப்படி? அன்புடன் உங்கள்மிதயங்களை தட்டும் பேசாலைதாஸ்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 

...............கனவு காணும் ...................... 

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன 
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன 
கனவுகள் வாங்கும் பை தானே 

...............கனவு காணும் ...................... 

காலங்கள் மாறும்....
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் 
வாலிபம் என்பது பொய் வேஷம் 
தூக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி 
போனது போக எது மீதம் 
பேதை மனிதனே...
பேதை மனிதனே கடமை இன்றே 
செய்வதில் தானே ஆனந்தம்.. 

................கனவு காணும் ............................

படம் : நீங்கள் கேட்டவை
குரல் : KJ யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...