கவிஞர் கண்ணதாசன் வடித்த பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. காமம் பற்றிய கவிஞரின் மெய் தரிசனம், என்னை அப்படியே மயக்கிவிட்டது. காமம் பற்றிய புதிய புரிதலை எனக்கு கொடுத் ததே இந்த பாடல்தான்! காமம் என்றவுடன் எதோ வேண்டாத விடயம் என்று ஒதுக்கும் நிலை இப்போது உண்டு. ஆனால் காம த்தை புனிதமான உணர்வாக மத்தித்து அதனை போற்றியது நமது பழந்தமிழ் பாரம்பரியம், இந்து சமயம், வைணவ
சமயம், சைவ சமயம் இவைகளில் காமம் கடவுளின் உணர்வாக கருதப்பட்டது, காம த்துக்கு கடவுளும் விதிவிலக்கு அல்ல, கிருஸ்ணர், சிவன், இந்திரன் இவர்களை குறிப்பிடலாம்.
காமத்தை தூண்டும் சிலைகள் மாமல்லபுரம், கஜோரா ஒவியங்களில் பார் க்கலாம். ஜைன சமயம், பெளத்த சமயம் ஆசியாவில் தலைத்தொங்கிய காலத்தில், துறவறம் என்ற போர்வையில், காமம் மக்க ளிடம் இருந்து ஒதுக்கப்பட்டது. மோயிசன் கருத்துகளின் அடிப்படையில் வளர்ந்த யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களிலும், பெண் கள், காமம், கற்பு என்பன வேறு ஒரு கோண த்தில் பார்க்கப்பட்டது. ஆகமொத்தத்தில் ஆசியாவில் காமம் தடைசெய்யப்பட உணர்வாக மாறியதால், ஆசிய ஆபிரிக்க நாடுகளில், பாலியல் வன்முறைகள் அதிகமாக காணப்படு கின்றது. மேலைத்தேசங்களில், காமம் கற்பு இவைபற்றி அலட்டிக்கொள் வதில்லை, இவை மனிதனின் அடிப்படை உணர்வாக மதிக்கப்படுவ தினால், பாலியல் பலாத்காரங்கள், பெண் அடிமைத்தனம் என்பன் இல்லாதொழிந்து, சந்தோசமாக, ஆனந்தமாக வாழ்கின்றனர்.
"எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றாகும் சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை, உன் சிந்தையிலே தான் பேதமடா" என்று கவிஞர் காமத்துக்கு கொடுக் கும் விளக்கம் அற்புதம்! காமம் ஒரே தன்மையான உணர்ச்சி நிலையை யைதான் ஏற்படுத்தும், காமம் அன்பின் தொடக்கப்புள்ளி எனப்து எனது தாழ்மையான கருத்து. அன்பு உணர்ச்சி, அது தனியே உடலோடு நின்று விட்டால், அது காம இச்சை, அதுவே உள்ளத்தையும் இணைத்துவிட்டால், அது காதலாகின்றது. அன்பின் உணர்வு உள்ளத்து உணர்வோடு மட்டும் நின்றுவிட்டால் அது பாசம், பக்தியாக மாறுகின்றது. எனவே காமத்தை உடலின் இச்சையோடு பார்க்காமல், அது அன்பின் தொடக்கப்புள்ளி என்று நீங்கள் நினைத்தால், காமம் பற்றிய சரியான புரிந்துணர்வு உங்களுக்கு ஏற்படும். இனி பாடலை கேட்டு இரசியுங்கள்... அன்பின் பேசாலைதாஸ்
படம்: மன்மத லீலை
குரல்:எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: கண்ணதாசன்
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே..
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலே தான் பேதமடா
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே
சு சு சு ஆ ஆஹா ஆஹா..
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக