செவ்வாய், 10 ஜூலை, 2018

பாட்டும் பதமும் 64 மலரோடு விளையாடும் தென்றலே வாராய்! பேசாலைதாஸ்


" மலரோடு விளையாடும் தென்றலே வாராய்!  பேசாலைதாஸ்

                                                                என் சிந்தை கவர்ந்த பழைய பாடல்களில் இதுவும் ஒன்று! என்னடா பேசாலைதாஸிற்கு முதுமை தட்டிவிட்டது என்று நினைக்காதீர்கள், எனக்கு பழைய சினிமா பாடல்களின் மீது அலாதியான பிரியம்.உண்மை சொல்லப்போனால் பழைய பாடல்களில் கவித்துவமான, இசையோடு கூடிய அம்சங்கள் நிறையவே இருக்கும், நீங்கள் தனிமையாக இருக்கும் வேளையில் அந்த பாடலில் வரும் , வரிகளில் இளைத்து நிற்பிர்கள் என்றால் நிச்சயமாக நீங்களும் இரசிக்கின்ற ஒரு மனிதராகிவிடுவீர்கள். இரசிக்க தெரிந்த மனிதன் தான், நல்ல காதலானாக, கணவனாக,  நல்ல இதயம் உள்ளவனாக இருக்கமுடியும் இது எனது வாதம்! 

                                                1959 வெளிவந்த தெய்வபலம் என்ற படம் முதலில் தெலுங்கில் ராமராவ் நடித்து வெளியானது, சமகாலத்தில் தமிழிலும் வெளியானது, பலாஜி இதில் கதாநாயகனாக நடித்திருப்பார்.
பொன்னலூரி பிரதர்ஸ் தயாரிப்பில் "தெய்வபலம்" திரைப்படம் 1959-ல் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரேநேரத்தில் வெளிவந்தது... கதாநாயகனாக தமிழில் கே பாலாஜியும் தெலுங்கில் என் டி ராமாராவும் நடித்தனர்... இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக ஜெயஸ்ரீ (நடிகை ஜெயசித்ராவின் தாயார்) நடித்தார்... படத்தை இயக்கியவர் பி வசந்த குமார் ரெட்டி... படத்திற்கு இசை : ஜி அஸ்வத்தாமா... .தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந் தராய் பதவி வகிக்கும் "வீணை ஈ காயத்திரி" அவர்கள் ஜி அஸ்வத்தாமா அவர்களின் மகள் ஆவார்... தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் "முதுகலை திரையிசை" படிப்பினை அறிமுகம் செய்தவர் "வீணை ஈ காயத்திரி" அவர்கள்...திரை உலகில் பல அற்புதமான பாடல்களை தந்தவர் மருதகஸி. என் இசைப்பிரியர்களே! உங்கள் ரசனைக்காக பாடலை அப்படியே தருகின்றேன்.  அரும்மை தீண்டும் அன்பு, அதனால் வரும் குறும்பு, இதனைப்பார்க்கும் எனோ நான் எறும்பாய் மாறிவிடுகின்றேன்! உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

அரும்பைத் தீண்டு அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இரவில் நிலவை வீண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..  பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...