எனக்கு பிடித்தபாடல்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கின்றீர்களா? அதில் ஏராளமான நிலா இருக்கின்றதே!
தர்பாரி கனடா ராகத்தில் அமைந்த இந்த பாடல், ராகத்தைப்போல மென்மையானதும், அமைதி நிரம்பிய பாடலாகும். மம்முட்டியின் அசத்தலான அமைதியான் நடிப்பும், அமலா வின் குளிர்ச்சியான அழகும் பாடலுக்கு மெரு கேற்றுகின்றது. தர்பாரி கனடா ராகம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் 'தர்பாரி' கனடா எனப் பெயர் பெற்றது போலும்., சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு
கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம், மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா, நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா, ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே. ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை, ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன் இப்படி நிறைய இருக்கின்றது. இந்த பாடலை ப்பார்த்தால் கண்ணதாஸனின் பாடல் போல் இருக்கும் ஆனால் எழுதி யது வாலி!
வெண்ணிலா உன் காதல், கண்னிலா, விண்ணிலா, மண்ணிலா என்ற சொற்சந்த கூட்டும், கூடாலா, தேவார பாடலா, தீராத ஊடலா, தேன் சிந்தும் தூரலா என்ற சொல் வரிகளை திரும்ப திரும்ப கேட்கும் போது, தேன் உண்ட வண்டைப்போல மாறிவிடுகின்றேன். உன் பார்வை தூண்டிலா? நான் கூண்டிலா? உன் தேகம் என்ன தேக்கிலா, சுவை என்ன நாக்கிலா? என்று சொற்களை கேகும் போது , தேனுக்குள் விழுந்த எறும்பாக நான் திளைக்கின்றேன், தவிக்கின்றேன்! அன்புடன் பேசாலைதாஸ்
மனதிற்கு இதமான பாடல்
பதிலளிநீக்கு