"சித்திரை மாதம், பெளர்னமி நேரம், முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்" பேசாலைதாஸ்
நிலா என்றாலே சுகமான கனவுகள் வரும், அதுவும் கவிஞர்களுக்கு சித்திரா பெளர்னமி என்றால் சொல்லத்தேவை இல்லை. ராமன் எத்த னை ராமனடி! இந்த திரைப்படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு பிடித்தமான பாடல். காதலில் தோல்வி கண்ட ஒருவன், தன் கிராமத்தைவிட்டு எங்கேயோ ஓடிப்போய், பின்னர் அதேகிராமத்துக்கு, வெற்றிக்கதாநாயகனாக திரும்பி, இரயில் வரும் போது, தன் கிராமாத்து காதலி, தன் வருகைக்காக பாடும் ஒரு கனவுப்பாட்டு காட்சி இது! புன்னகை அரசியின் நடிப்பும், இசையும், சுசிலாவின் குரலும், கூடவே கண்ணதாஸனின் கற்பனையும் பாடலுக்கு மெருகூட்டுகின்றது. காதலில் தோற்றுப்பாருங்கள், நீங்களிலும் கவிஞர்கள் ஆகிவிடுவீர்கள்,குறைந்த பட்சம், நல்ல இரசனையாளராகவாவது மாறிவிடு வீர்கள்! இது என் அனுபவ தரிசனம்!
இந்த பாடலில் ஒரு அடிவரும், அதுதான், "தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம், சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்"
இந்த வரிக்காக நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. காதல் என் றாலே அது தேன் சுவை கொட்டும் ஒரு இன்ப உலா! காதலியின் கரம் கோர்த்து, கடற்கரயோரம் நிலா ஒளியில்,உலா வந்த அனுபவும் உங்க ளுக்கு உண்டா? எனக்கு இன்னமும் இல்லை! அதற்காகத்தான் இந்த பாட லிலாவது அந்த ஆசை நிறைவேறட்டுமே!. "அந்நாளிலே நீ கண்ட கனவு, காயாகி கனியானதோ என்ற வரி மூலம் கவிஞர் கண்ணதாசன் திரை ப்படத்டின் முழுக்கதையையும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றார். பாடலின் வரிகள் இதோ!
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்..
படம் :ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : பி.சுசீலா
இசையமைப்பாளர் :மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
அந்நாளிலே நீ கண்ட கனவு
காயாகி இப்போது கனியானதோ?
என் நெஞ்சிலே நீ தந்த உறவு
கனவாகி இப்போது நனவானதோ?
மின்னல் இளமேனி ஆசைத் தீர
மெல்ல மெல்ல சேராதோ?
பொன்னழகு கன்னம் காதல் தேவன்
பூஜையில் மலராதோ?
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
பூ மாலைகள் உன் மீது விழுந்து
ஊரெங்கும் பேர் பாடும் பொன்னாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை
ஒன்றல்ல பலக் கோடி உன் வாழ்விலே
பங்கு கொள்ள வந்து கண்ணா உந்தன்
சங்கம் வரக் கூடாதோ?
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால்
வாழ்வே மலராதோ?
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக