சனி, 28 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 70 "கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே"! பேசாலைதாஸ்
"கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே"! பேசாலைதாஸ்
அடுத்தவீட்டுப்பெண் திரைப்படத்துகாக கவிஞர் எழுதிய இந்த பாடலை சீனிவாசன் இர்ம்ப அழகாக பாடியுள் ளார். காதலியின் பார்வை இல்லாமல் காதல் ஏது? பார்வை ஒன்ரே போதுமே! பல்லாயிரம் சொல் தேவையா? இப்படி காதல் வசப்பட்ட பார்வையை மிக அழகாக வர்ணித்துக்கொண்டே என்னால் பக்கம் பக் கமாக எழுத முடியும், எதற்கு அந்த வீண் சிரமம்! கண்ணின் கடைப் பார்வை, காதலியர் காட்டிவிட்டால், மண்ணின் மைந்தர்களுக்கு, மாம லையும் ஒரு கடுகாம் என பாவேந்தன் பாடிச்சென்றபின், நான் கைத்தறி, சொல்வதற்கு இனி என்ன இருக்கின்றது?
கவிஞர் பாடல் வரிகளிலே பார்வையில் போதை உண்டாகுவதாக கூறுகின்றார். உண்மைதான் ரதியவள், பட்டு மதி மயங்கய இளைஞர்கள் எத்தனை? அன்னமே உன் பின்னால் ஆசை வெட்கம் அறியாமல் என்னனென்னமோ.செய்யத்தோன்றும்! மதுவை காதலி, தன் பார்வையில் மதுவை ஏந்தி நிற்கின்றவேளையில் மனம் படகு போல, தத்தளித்து தள்ளாடுமே! தமிழ் பாடல்கள் அத்தனை வரி களை நீங்கள் ஆழங்கண்டு இரசிப்பீர்கள் என்றால் உண்மையில் நீங்க ளும் ஒரு சின்ன கவிஞன் ஆகிவிடுவீர்கள் இனி பாடலை கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே...)
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே...)
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே...)
வெள்ளி, 27 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 69 " கம்பன் ஏன் ஏமாந்தான்?" பேசாலைதாஸ்
" கம்பன் ஏன் ஏமாந்தான்?" பேசாலைதாஸ்
இயக்குணர் சிகரம் கே பாலசந்தர் இயக்கத்தில், கமலஹாசன் நடித்து வெளி வந்த, நிழல் நிஜமாகின்றது என்ற படத்தில் இடம் பெறுகின்றது . இந்த பாடல். வரிகளுக்கு சொந்தகாரன் கவியரசு கண்ணதாஸன்.. பூ ஒன்று புயலாவது போல, பெண்மைக்குள் ஒழிந்துள்ள, ஆத்திரம் கோபம், ஆண்களை ஆளவேண்டும் என்கின்ற ஆதிக்க மன உணர் வுகளை நியாயப்படுத்த பாலச்சந்தர் இயக் கிய படம் நிழல் நிஜமாகின்றது. நிழல் நிஜமா கிற்றோ என்னவோ, ஆனால் பாலச்சந்தர், கண்ணதாசன் போன்றவர்களின் உண்மை முகம் இங்கே நிஜமாகின்றது.என்னை நான், கைத்தறி என்று அதாவது கண்ணதாஸின் அபிமானி என நினைத்துள்ளேன், அவரது கவியின், மேன்மை குறித்து, புலகாங்கிதம் அடைந்துள்ளேன். இருந்தாலும், கண்ணதாசன் முரண்பட்ட ஒரு மனிதர் என்பதை அவ்வப்போது வெளிப் படுத்த தவறியதில்லை.. பெண்மையை உயர்வாக, பெண் விடுதலையை போற்றி, ஆண் அதிக்கத்த சாடும் கவியரசு, இந்த பாட லில், ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால், அடங்குதல் முறைதானே! என வாக்காலத்து வாங்கியுள்ளார்! பெண்கள் என்றால் சுவைதரும் போதை பொருளா? அவளுக்கு வரும் கோபம், நியாயமாக இருக்கக் கூடாதா? அருஞ்சுவை ப்பால் என்று ஏன் சொன்னான், அவள் கொதிப்பதினால் தானா? பெண்கள் பால் போல, சுவைக்க வேண்டும், கோபப்பட்டு கொதிக்கக் கூடாது, அப்படி கொதித்தாலும், படுக்கையில் மட்டும் காமம், கொப் பளிக்க கொதிக்கலாம்! இதைத்தானே பாலச்சந்தரும், கண்ணதாஸனும் சொல்லவருகின்றார்கள்!
கதைக்காக, கதாநாயகனின் ஆண் ஆதிக்கத்தை கவிஞர் நியாயப்படுத்த முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்க ளின் உரிமைக்காக போராடவேண்டும், அவள் சுதந்திரமாக, அனைத்து உரிமைகள், விசேட உரிமைகள் பெற்று, ஆணைவிட உயர்வாக வாழும் போதுதான், அந்த சமூகம், அந்த நாடு வெற்றிகரமான, சந்தோசம் தரும் நாடாக, உலகில் முதல் தரத்தில் இருக்கும் என்பதை, நோர்வே நாட்டில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நோர்வே அரசியல், கலை இலக்கியம் எல்லாமே பெண் உரிமை விடுதலை பற்றி பேசியதினால் தான், இன்று அவர்கள் வெற்றி கண்டு, முதல் தர நாடாக, பொருளாதார, சமூக, சந்தோச உணர்வில் மகிழ்ச்சியாக வாழ்கின்றர்கள், பாடலைகேட்டுவிட்டு, என் கருத்தை ஆமோதிக்க வேண்டுகின்றேன். கம்பன் ஏமாறலாம், கன்னதாசன் ஏமாறலாம் ஆனால் நாம் ஏமாறக்கூடாது. புதிய காலாச்சாரம் வளர்ப்போம், அதில் பெண்மையை தூக்கி நிறுத்துவோம் அன்புடன் பேசாலைதாஸ்
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
கம்பன் ஏமாந்தான்...
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்..
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
ஞாயிறு, 22 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 68கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே பேசாலைதாஸ்.
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே பேசாலைதாஸ்.
இறைவன் என்பவன் இயற்கையில் உறைகின்றான், சுருக்கமாக சொல்லப்போ னால் இயற்கைதான் கடவுள், இது கிறிஸ்த யூத இஸ்லாம் சமயங்களில் சொல்லப்படு வதில்லை அவை எல்லாம் இறைவன் ஒரு வன் என்ற ஒருமை தன்மையை போதிக்கி ன்றன, எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இறைவன் மனிதானாக தன்னை வெளிப்ப டுத்துகின்றான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுள் தான். நம்மை சூழவுள்ள இயற்கை கடவு ளின் பிரதி பிம்பங்கள். மனிதந்தான் கடவுள் எனவேதான் இயேசு வடிவில் மனிதனாக உலகிற்கு கடவுள் வந்தார். ஆனால் கிறிஸ் தவம் இயற்கை, மனித நேயம் இவைகளை கண்டுகொள்ளாமல் இறைவனையும் மனிதனையும் வெவ்வேறாக பாகு படுத்தி, படைப்பு, படைப்பாளி என இரு கோடு ப்åஓட்டு காட்டுகின்றது. சற்று ஆழ்மாக யோசித்துப்பார்த்தால் நாம் தான் கடவுள் என்பதை நீங் கள் புரிந்து கொள்வீர்கள், இந்து சமயத்தவர் கண்ணனை தனது கடவுளாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை கூடவே இய்ற்கை எல்லாம் கண்ணனின் பிரதிபிம்பங்கள் என்றே கருதுகின்றனர்.
55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங் களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில், 'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு. எதிலும் அவன் குரலே என்பதில் இருந்து எல்லாம் கடவுள் என்ற நிலைக்கு நாம் வரமுடிகின்றது. பாடலை சற்று கூர்ந்து கவனியுங்கள் நான் சொல்லவ்ருவது உங்களுக்கு புரியும் அன்புடன் பேசாலைதாஸ்
இறைவன் என்பவன் இயற்கையில் உறைகின்றான், சுருக்கமாக சொல்லப்போ னால் இயற்கைதான் கடவுள், இது கிறிஸ்த யூத இஸ்லாம் சமயங்களில் சொல்லப்படு வதில்லை அவை எல்லாம் இறைவன் ஒரு வன் என்ற ஒருமை தன்மையை போதிக்கி ன்றன, எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இறைவன் மனிதானாக தன்னை வெளிப்ப டுத்துகின்றான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுள் தான். நம்மை சூழவுள்ள இயற்கை கடவு ளின் பிரதி பிம்பங்கள். மனிதந்தான் கடவுள் எனவேதான் இயேசு வடிவில் மனிதனாக உலகிற்கு கடவுள் வந்தார். ஆனால் கிறிஸ் தவம் இயற்கை, மனித நேயம் இவைகளை கண்டுகொள்ளாமல் இறைவனையும் மனிதனையும் வெவ்வேறாக பாகு படுத்தி, படைப்பு, படைப்பாளி என இரு கோடு ப்åஓட்டு காட்டுகின்றது. சற்று ஆழ்மாக யோசித்துப்பார்த்தால் நாம் தான் கடவுள் என்பதை நீங் கள் புரிந்து கொள்வீர்கள், இந்து சமயத்தவர் கண்ணனை தனது கடவுளாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை கூடவே இய்ற்கை எல்லாம் கண்ணனின் பிரதிபிம்பங்கள் என்றே கருதுகின்றனர்.
55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங் களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில், 'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு. எதிலும் அவன் குரலே என்பதில் இருந்து எல்லாம் கடவுள் என்ற நிலைக்கு நாம் வரமுடிகின்றது. பாடலை சற்று கூர்ந்து கவனியுங்கள் நான் சொல்லவ்ருவது உங்களுக்கு புரியும் அன்புடன் பேசாலைதாஸ்
சனி, 21 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 67 கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும், கோலங்கள், துடுப்புக்கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்" பேசாலைதாஸ்
"கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும், கோலங்கள், துடுப்புக்கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்" பேசாலைதாஸ்
வரைமுத்துவை சினிமா உலகில் தூக்கி நிறுத்திய தத்துவப் பாடல் இது. கேட்ட மாத்திரத்திலே என்னடா வாழ்கை என சிந்திக்கத் தூண்டும் அத்தனை சத்தான வரி கள். துடுப்புக்கூட பாரம் என் நினைக்கும் ஓடங்களாய் சிலரின் வாழ்க்கைப்படகு அமைத்துவிடு வதை நாம் பார்க்கின்றோம். இரக் கம் நம் உள்ளத்தில் அப்போது துளிர்விடுகின்றது, ஓடிப்போய் உதவி செய்கின்றோம், ஆனால் உதவிபெற்றவர்கள் அதை அந்த கனமே மறந்துவிடுவது வேடிக்கையா னதும், வேதனையானது ஆகிவிடுகின்றது.
ஒரு சிலர் அப்படி செய்கின்றார்களே என்பதற்காக இரக்கப்படாமல் இருந்துவிடுவது முட்டாள்தனம்! இரக்கம் உள்ளவர்கள் பேறுபெற்றவர்கள்!,,,,,. பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி ,இருகின்ற தென்பது மெய் தானே, இவ்வுலகில் இருக்கும்வரை இரக்கத்துடன் இருந் துவிட்டுப்போவோமே! உடம்பு என்பது உண்மையில் என்ன ? கனவுகள் வாங்கும் பை தானே! இதற்கு ஆசை என்னும் ஜன்னல்கள் எதற்கு? காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா! மெய்யென்று மேனியை எவன் சொன்னது? உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் கடைசியில் மீதமாக எது இருக்கின்றது என்று, விடை இல்லை, காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் ,வாலிபம் என்பது பொய் வேஷம் ,தூக்கத்தில் பாதி...துக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி ,போனது போக எது மீதி?
எனோ இந்தப்படலை கேட்கும் இரசிக்கும் ஒவ்வொரு தருனமும், என் சிந்தனை மெய்ஞானத்தை தேடி வாஞ்சையாக அலை யும்,,, நீங்கள் எப்படி? அன்புடன் உங்கள்மிதயங்களை தட்டும் பேசாலைதாஸ்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
...............கனவு காணும் ......................
பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
...............கனவு காணும் ......................
காலங்கள் மாறும்....
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே...
பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..
................கனவு காணும் ............................
படம் : நீங்கள் கேட்டவை
குரல் : KJ யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் :
வரைமுத்துவை சினிமா உலகில் தூக்கி நிறுத்திய தத்துவப் பாடல் இது. கேட்ட மாத்திரத்திலே என்னடா வாழ்கை என சிந்திக்கத் தூண்டும் அத்தனை சத்தான வரி கள். துடுப்புக்கூட பாரம் என் நினைக்கும் ஓடங்களாய் சிலரின் வாழ்க்கைப்படகு அமைத்துவிடு வதை நாம் பார்க்கின்றோம். இரக் கம் நம் உள்ளத்தில் அப்போது துளிர்விடுகின்றது, ஓடிப்போய் உதவி செய்கின்றோம், ஆனால் உதவிபெற்றவர்கள் அதை அந்த கனமே மறந்துவிடுவது வேடிக்கையா னதும், வேதனையானது ஆகிவிடுகின்றது.
ஒரு சிலர் அப்படி செய்கின்றார்களே என்பதற்காக இரக்கப்படாமல் இருந்துவிடுவது முட்டாள்தனம்! இரக்கம் உள்ளவர்கள் பேறுபெற்றவர்கள்!,,,,,. பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி ,இருகின்ற தென்பது மெய் தானே, இவ்வுலகில் இருக்கும்வரை இரக்கத்துடன் இருந் துவிட்டுப்போவோமே! உடம்பு என்பது உண்மையில் என்ன ? கனவுகள் வாங்கும் பை தானே! இதற்கு ஆசை என்னும் ஜன்னல்கள் எதற்கு? காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா! மெய்யென்று மேனியை எவன் சொன்னது? உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் கடைசியில் மீதமாக எது இருக்கின்றது என்று, விடை இல்லை, காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் ,வாலிபம் என்பது பொய் வேஷம் ,தூக்கத்தில் பாதி...துக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி ,போனது போக எது மீதி?
எனோ இந்தப்படலை கேட்கும் இரசிக்கும் ஒவ்வொரு தருனமும், என் சிந்தனை மெய்ஞானத்தை தேடி வாஞ்சையாக அலை யும்,,, நீங்கள் எப்படி? அன்புடன் உங்கள்மிதயங்களை தட்டும் பேசாலைதாஸ்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
...............கனவு காணும் ......................
பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
...............கனவு காணும் ......................
காலங்கள் மாறும்....
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே...
பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..
................கனவு காணும் ............................
படம் : நீங்கள் கேட்டவை
குரல் : KJ யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் :
வியாழன், 19 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 66 "மன்மத லீலை மயக்குது ஆளை,,,, " பேசாலைதாஸ்
"மன்மத லீலை மயக்குது ஆளை,,,, " பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் வடித்த பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. காமம் பற்றிய கவிஞரின் மெய் தரிசனம், என்னை அப்படியே மயக்கிவிட்டது. காமம் பற்றிய புதிய புரிதலை எனக்கு கொடுத் ததே இந்த பாடல்தான்! காமம் என்றவுடன் எதோ வேண்டாத விடயம் என்று ஒதுக்கும் நிலை இப்போது உண்டு. ஆனால் காம த்தை புனிதமான உணர்வாக மத்தித்து அதனை போற்றியது நமது பழந்தமிழ் பாரம்பரியம், இந்து சமயம், வைணவ
சமயம், சைவ சமயம் இவைகளில் காமம் கடவுளின் உணர்வாக கருதப்பட்டது, காம த்துக்கு கடவுளும் விதிவிலக்கு அல்ல, கிருஸ்ணர், சிவன், இந்திரன் இவர்களை குறிப்பிடலாம்.
காமத்தை தூண்டும் சிலைகள் மாமல்லபுரம், கஜோரா ஒவியங்களில் பார் க்கலாம். ஜைன சமயம், பெளத்த சமயம் ஆசியாவில் தலைத்தொங்கிய காலத்தில், துறவறம் என்ற போர்வையில், காமம் மக்க ளிடம் இருந்து ஒதுக்கப்பட்டது. மோயிசன் கருத்துகளின் அடிப்படையில் வளர்ந்த யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களிலும், பெண் கள், காமம், கற்பு என்பன வேறு ஒரு கோண த்தில் பார்க்கப்பட்டது. ஆகமொத்தத்தில் ஆசியாவில் காமம் தடைசெய்யப்பட உணர்வாக மாறியதால், ஆசிய ஆபிரிக்க நாடுகளில், பாலியல் வன்முறைகள் அதிகமாக காணப்படு கின்றது. மேலைத்தேசங்களில், காமம் கற்பு இவைபற்றி அலட்டிக்கொள் வதில்லை, இவை மனிதனின் அடிப்படை உணர்வாக மதிக்கப்படுவ தினால், பாலியல் பலாத்காரங்கள், பெண் அடிமைத்தனம் என்பன் இல்லாதொழிந்து, சந்தோசமாக, ஆனந்தமாக வாழ்கின்றனர்.
"எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றாகும் சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை, உன் சிந்தையிலே தான் பேதமடா" என்று கவிஞர் காமத்துக்கு கொடுக் கும் விளக்கம் அற்புதம்! காமம் ஒரே தன்மையான உணர்ச்சி நிலையை யைதான் ஏற்படுத்தும், காமம் அன்பின் தொடக்கப்புள்ளி எனப்து எனது தாழ்மையான கருத்து. அன்பு உணர்ச்சி, அது தனியே உடலோடு நின்று விட்டால், அது காம இச்சை, அதுவே உள்ளத்தையும் இணைத்துவிட்டால், அது காதலாகின்றது. அன்பின் உணர்வு உள்ளத்து உணர்வோடு மட்டும் நின்றுவிட்டால் அது பாசம், பக்தியாக மாறுகின்றது. எனவே காமத்தை உடலின் இச்சையோடு பார்க்காமல், அது அன்பின் தொடக்கப்புள்ளி என்று நீங்கள் நினைத்தால், காமம் பற்றிய சரியான புரிந்துணர்வு உங்களுக்கு ஏற்படும். இனி பாடலை கேட்டு இரசியுங்கள்... அன்பின் பேசாலைதாஸ்
படம்: மன்மத லீலை
குரல்:எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: கண்ணதாசன்
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே..
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலே தான் பேதமடா
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே
சு சு சு ஆ ஆஹா ஆஹா..
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
கவிஞர் கண்ணதாசன் வடித்த பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. காமம் பற்றிய கவிஞரின் மெய் தரிசனம், என்னை அப்படியே மயக்கிவிட்டது. காமம் பற்றிய புதிய புரிதலை எனக்கு கொடுத் ததே இந்த பாடல்தான்! காமம் என்றவுடன் எதோ வேண்டாத விடயம் என்று ஒதுக்கும் நிலை இப்போது உண்டு. ஆனால் காம த்தை புனிதமான உணர்வாக மத்தித்து அதனை போற்றியது நமது பழந்தமிழ் பாரம்பரியம், இந்து சமயம், வைணவ
சமயம், சைவ சமயம் இவைகளில் காமம் கடவுளின் உணர்வாக கருதப்பட்டது, காம த்துக்கு கடவுளும் விதிவிலக்கு அல்ல, கிருஸ்ணர், சிவன், இந்திரன் இவர்களை குறிப்பிடலாம்.
காமத்தை தூண்டும் சிலைகள் மாமல்லபுரம், கஜோரா ஒவியங்களில் பார் க்கலாம். ஜைன சமயம், பெளத்த சமயம் ஆசியாவில் தலைத்தொங்கிய காலத்தில், துறவறம் என்ற போர்வையில், காமம் மக்க ளிடம் இருந்து ஒதுக்கப்பட்டது. மோயிசன் கருத்துகளின் அடிப்படையில் வளர்ந்த யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களிலும், பெண் கள், காமம், கற்பு என்பன வேறு ஒரு கோண த்தில் பார்க்கப்பட்டது. ஆகமொத்தத்தில் ஆசியாவில் காமம் தடைசெய்யப்பட உணர்வாக மாறியதால், ஆசிய ஆபிரிக்க நாடுகளில், பாலியல் வன்முறைகள் அதிகமாக காணப்படு கின்றது. மேலைத்தேசங்களில், காமம் கற்பு இவைபற்றி அலட்டிக்கொள் வதில்லை, இவை மனிதனின் அடிப்படை உணர்வாக மதிக்கப்படுவ தினால், பாலியல் பலாத்காரங்கள், பெண் அடிமைத்தனம் என்பன் இல்லாதொழிந்து, சந்தோசமாக, ஆனந்தமாக வாழ்கின்றனர்.
"எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றாகும் சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை, உன் சிந்தையிலே தான் பேதமடா" என்று கவிஞர் காமத்துக்கு கொடுக் கும் விளக்கம் அற்புதம்! காமம் ஒரே தன்மையான உணர்ச்சி நிலையை யைதான் ஏற்படுத்தும், காமம் அன்பின் தொடக்கப்புள்ளி எனப்து எனது தாழ்மையான கருத்து. அன்பு உணர்ச்சி, அது தனியே உடலோடு நின்று விட்டால், அது காம இச்சை, அதுவே உள்ளத்தையும் இணைத்துவிட்டால், அது காதலாகின்றது. அன்பின் உணர்வு உள்ளத்து உணர்வோடு மட்டும் நின்றுவிட்டால் அது பாசம், பக்தியாக மாறுகின்றது. எனவே காமத்தை உடலின் இச்சையோடு பார்க்காமல், அது அன்பின் தொடக்கப்புள்ளி என்று நீங்கள் நினைத்தால், காமம் பற்றிய சரியான புரிந்துணர்வு உங்களுக்கு ஏற்படும். இனி பாடலை கேட்டு இரசியுங்கள்... அன்பின் பேசாலைதாஸ்
படம்: மன்மத லீலை
குரல்:எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: கண்ணதாசன்
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே..
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலே தான் பேதமடா
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே
சு சு சு ஆ ஆஹா ஆஹா..
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
பாட்டும் பதமும் 65 சித்திரை மாதம், பெளர்னமி நேரம், முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்" பேசாலைதாஸ்
"சித்திரை மாதம், பெளர்னமி நேரம், முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்" பேசாலைதாஸ்
நிலா என்றாலே சுகமான கனவுகள் வரும், அதுவும் கவிஞர்களுக்கு சித்திரா பெளர்னமி என்றால் சொல்லத்தேவை இல்லை. ராமன் எத்த னை ராமனடி! இந்த திரைப்படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு பிடித்தமான பாடல். காதலில் தோல்வி கண்ட ஒருவன், தன் கிராமத்தைவிட்டு எங்கேயோ ஓடிப்போய், பின்னர் அதேகிராமத்துக்கு, வெற்றிக்கதாநாயகனாக திரும்பி, இரயில் வரும் போது, தன் கிராமாத்து காதலி, தன் வருகைக்காக பாடும் ஒரு கனவுப்பாட்டு காட்சி இது! புன்னகை அரசியின் நடிப்பும், இசையும், சுசிலாவின் குரலும், கூடவே கண்ணதாஸனின் கற்பனையும் பாடலுக்கு மெருகூட்டுகின்றது. காதலில் தோற்றுப்பாருங்கள், நீங்களிலும் கவிஞர்கள் ஆகிவிடுவீர்கள்,குறைந்த பட்சம், நல்ல இரசனையாளராகவாவது மாறிவிடு வீர்கள்! இது என் அனுபவ தரிசனம்!
இந்த பாடலில் ஒரு அடிவரும், அதுதான், "தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம், சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்"
இந்த வரிக்காக நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. காதல் என் றாலே அது தேன் சுவை கொட்டும் ஒரு இன்ப உலா! காதலியின் கரம் கோர்த்து, கடற்கரயோரம் நிலா ஒளியில்,உலா வந்த அனுபவும் உங்க ளுக்கு உண்டா? எனக்கு இன்னமும் இல்லை! அதற்காகத்தான் இந்த பாட லிலாவது அந்த ஆசை நிறைவேறட்டுமே!. "அந்நாளிலே நீ கண்ட கனவு, காயாகி கனியானதோ என்ற வரி மூலம் கவிஞர் கண்ணதாசன் திரை ப்படத்டின் முழுக்கதையையும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றார். பாடலின் வரிகள் இதோ!
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்..
படம் :ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : பி.சுசீலா
இசையமைப்பாளர் :மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
அந்நாளிலே நீ கண்ட கனவு
காயாகி இப்போது கனியானதோ?
என் நெஞ்சிலே நீ தந்த உறவு
கனவாகி இப்போது நனவானதோ?
மின்னல் இளமேனி ஆசைத் தீர
மெல்ல மெல்ல சேராதோ?
பொன்னழகு கன்னம் காதல் தேவன்
பூஜையில் மலராதோ?
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
பூ மாலைகள் உன் மீது விழுந்து
ஊரெங்கும் பேர் பாடும் பொன்னாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை
ஒன்றல்ல பலக் கோடி உன் வாழ்விலே
பங்கு கொள்ள வந்து கண்ணா உந்தன்
சங்கம் வரக் கூடாதோ?
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால்
வாழ்வே மலராதோ?
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
செவ்வாய், 10 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 64 மலரோடு விளையாடும் தென்றலே வாராய்! பேசாலைதாஸ்
" மலரோடு விளையாடும் தென்றலே வாராய்! பேசாலைதாஸ்
என் சிந்தை கவர்ந்த பழைய பாடல்களில் இதுவும் ஒன்று! என்னடா பேசாலைதாஸிற்கு முதுமை தட்டிவிட்டது என்று நினைக்காதீர்கள், எனக்கு பழைய சினிமா பாடல்களின் மீது அலாதியான பிரியம்.உண்மை சொல்லப்போனால் பழைய பாடல்களில் கவித்துவமான, இசையோடு கூடிய அம்சங்கள் நிறையவே இருக்கும், நீங்கள் தனிமையாக இருக்கும் வேளையில் அந்த பாடலில் வரும் , வரிகளில் இளைத்து நிற்பிர்கள் என்றால் நிச்சயமாக நீங்களும் இரசிக்கின்ற ஒரு மனிதராகிவிடுவீர்கள். இரசிக்க தெரிந்த மனிதன் தான், நல்ல காதலானாக, கணவனாக, நல்ல இதயம் உள்ளவனாக இருக்கமுடியும் இது எனது வாதம்!
1959 வெளிவந்த தெய்வபலம் என்ற படம் முதலில் தெலுங்கில் ராமராவ் நடித்து வெளியானது, சமகாலத்தில் தமிழிலும் வெளியானது, பலாஜி இதில் கதாநாயகனாக நடித்திருப்பார்.
பொன்னலூரி பிரதர்ஸ் தயாரிப்பில் "தெய்வபலம்" திரைப்படம் 1959-ல் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரேநேரத்தில் வெளிவந்தது... கதாநாயகனாக தமிழில் கே பாலாஜியும் தெலுங்கில் என் டி ராமாராவும் நடித்தனர்... இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக ஜெயஸ்ரீ (நடிகை ஜெயசித்ராவின் தாயார்) நடித்தார்... படத்தை இயக்கியவர் பி வசந்த குமார் ரெட்டி... படத்திற்கு இசை : ஜி அஸ்வத்தாமா... .தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந் தராய் பதவி வகிக்கும் "வீணை ஈ காயத்திரி" அவர்கள் ஜி அஸ்வத்தாமா அவர்களின் மகள் ஆவார்... தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் "முதுகலை திரையிசை" படிப்பினை அறிமுகம் செய்தவர் "வீணை ஈ காயத்திரி" அவர்கள்...திரை உலகில் பல அற்புதமான பாடல்களை தந்தவர் மருதகஸி. என் இசைப்பிரியர்களே! உங்கள் ரசனைக்காக பாடலை அப்படியே தருகின்றேன். அரும்மை தீண்டும் அன்பு, அதனால் வரும் குறும்பு, இதனைப்பார்க்கும் எனோ நான் எறும்பாய் மாறிவிடுகின்றேன்! உங்கள் அன்பின் பேசாலைதாஸ்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
அரும்பைத் தீண்டு அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
இரவில் நிலவை வீண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்... பேசாலைதாஸ்
வெள்ளி, 6 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 63 விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலைகள் ஓய்வதில் லை. வைரமுத்துவின் வரிகளுக்கு, இளய ராஜா சுத்த தன்யாசி இரா கத்தில் இசை அமைத்த பாடல் இது. இது மிக கம்பீரமான ராகம், மன தில் உற்சாகம் எற்படுத்த செய்யும் சக்தி இந்த ராகத்திற்கு உண்டு. காலம்காலமாக இந்த ராகத்தில் பல இசையமைப்பாளர்கள் பல பாடல்களை தந்துள்ளனர்.
இந்த ராகத்தில் அமைந்த அத்தனை பாட்டும் 'ஜாலியான' குஷியான பாடல்கள தான். இந்த ராகத்தில் அமைந்த பாடல் கள் அனைத்தும் சுப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லவும் வேண்டுமா ? ஆனாலும் எனக்கு இந்த பாடல் ஏனோ பிடித்திருக்கின்றது. மீசை முளை க்காத கார்த்திக், தாவனியோட ராதா முதன்முறையாக நடித்தபடம். கார்த்திக் அப்பொழுது கல்லூரிப்பெண்கள் மனதில் கொலுவிருக்க ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு அப்பொழுது21 வயது பல்கலைக்கழக மாணவனாக இருந்த பருவம், ராதா! நித்திரைவராதா! என்று என் காத லியை நினைத்து தவித்த காலம் அது! இன்னும் இன்னும் பசுமையாக,,,,,,,, இந்த படத்தைப்பற்றி கொஞ்சம் சிலாகிக்கலாம் என நினைகின்றேன். புதுமை இயக்குணர் என தன்னை அடையாளப்படுத்திய பாராதிராஜா இந்த படத்தின் மூலம், மதங்கள் காதலை ஒன்றும் செய்துவிடமுடியாது என அடித்து சொல்லிய படம் இது! அதனால் இந்த படத்துக்கு அப்போது இளைஞர் மத்த்யில் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே தான் படத்தோடு இந்த பாடலையும் இரசித்தேன் உங்களுக்காக சுரம் பிரிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலைகள் ஓய்வதில் லை. வைரமுத்துவின் வரிகளுக்கு, இளய ராஜா சுத்த தன்யாசி இரா கத்தில் இசை அமைத்த பாடல் இது. இது மிக கம்பீரமான ராகம், மன தில் உற்சாகம் எற்படுத்த செய்யும் சக்தி இந்த ராகத்திற்கு உண்டு. காலம்காலமாக இந்த ராகத்தில் பல இசையமைப்பாளர்கள் பல பாடல்களை தந்துள்ளனர்.
இந்த ராகத்தில் அமைந்த அத்தனை பாட்டும் 'ஜாலியான' குஷியான பாடல்கள தான். இந்த ராகத்தில் அமைந்த பாடல் கள் அனைத்தும் சுப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லவும் வேண்டுமா ? ஆனாலும் எனக்கு இந்த பாடல் ஏனோ பிடித்திருக்கின்றது. மீசை முளை க்காத கார்த்திக், தாவனியோட ராதா முதன்முறையாக நடித்தபடம். கார்த்திக் அப்பொழுது கல்லூரிப்பெண்கள் மனதில் கொலுவிருக்க ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு அப்பொழுது21 வயது பல்கலைக்கழக மாணவனாக இருந்த பருவம், ராதா! நித்திரைவராதா! என்று என் காத லியை நினைத்து தவித்த காலம் அது! இன்னும் இன்னும் பசுமையாக,,,,,,,, இந்த படத்தைப்பற்றி கொஞ்சம் சிலாகிக்கலாம் என நினைகின்றேன். புதுமை இயக்குணர் என தன்னை அடையாளப்படுத்திய பாராதிராஜா இந்த படத்தின் மூலம், மதங்கள் காதலை ஒன்றும் செய்துவிடமுடியாது என அடித்து சொல்லிய படம் இது! அதனால் இந்த படத்துக்கு அப்போது இளைஞர் மத்த்யில் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே தான் படத்தோடு இந்த பாடலையும் இரசித்தேன் உங்களுக்காக சுரம் பிரிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
வியாழன், 5 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 62 கல்யாணதேன் நிலா
"கல்யாணதேன் நிலா, காயாத பால் நிலா" பேசாலைதாஸ்
எனக்கு பிடித்தபாடல்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கின்றீர்களா? அதில் ஏராளமான நிலா இருக்கின்றதே!
தர்பாரி கனடா ராகத்தில் அமைந்த இந்த பாடல், ராகத்தைப்போல மென்மையானதும், அமைதி நிரம்பிய பாடலாகும். மம்முட்டியின் அசத்தலான அமைதியான் நடிப்பும், அமலா வின் குளிர்ச்சியான அழகும் பாடலுக்கு மெரு கேற்றுகின்றது. தர்பாரி கனடா ராகம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் 'தர்பாரி' கனடா எனப் பெயர் பெற்றது போலும்., சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு
கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம், மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா, நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா, ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே. ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை, ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன் இப்படி நிறைய இருக்கின்றது. இந்த பாடலை ப்பார்த்தால் கண்ணதாஸனின் பாடல் போல் இருக்கும் ஆனால் எழுதி யது வாலி!
வெண்ணிலா உன் காதல், கண்னிலா, விண்ணிலா, மண்ணிலா என்ற சொற்சந்த கூட்டும், கூடாலா, தேவார பாடலா, தீராத ஊடலா, தேன் சிந்தும் தூரலா என்ற சொல் வரிகளை திரும்ப திரும்ப கேட்கும் போது, தேன் உண்ட வண்டைப்போல மாறிவிடுகின்றேன். உன் பார்வை தூண்டிலா? நான் கூண்டிலா? உன் தேகம் என்ன தேக்கிலா, சுவை என்ன நாக்கிலா? என்று சொற்களை கேகும் போது , தேனுக்குள் விழுந்த எறும்பாக நான் திளைக்கின்றேன், தவிக்கின்றேன்! அன்புடன் பேசாலைதாஸ்
எனக்கு பிடித்தபாடல்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கின்றீர்களா? அதில் ஏராளமான நிலா இருக்கின்றதே!
தர்பாரி கனடா ராகத்தில் அமைந்த இந்த பாடல், ராகத்தைப்போல மென்மையானதும், அமைதி நிரம்பிய பாடலாகும். மம்முட்டியின் அசத்தலான அமைதியான் நடிப்பும், அமலா வின் குளிர்ச்சியான அழகும் பாடலுக்கு மெரு கேற்றுகின்றது. தர்பாரி கனடா ராகம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் 'தர்பாரி' கனடா எனப் பெயர் பெற்றது போலும்., சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு
கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம், மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா, நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா, ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே. ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை, ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன் இப்படி நிறைய இருக்கின்றது. இந்த பாடலை ப்பார்த்தால் கண்ணதாஸனின் பாடல் போல் இருக்கும் ஆனால் எழுதி யது வாலி!
வெண்ணிலா உன் காதல், கண்னிலா, விண்ணிலா, மண்ணிலா என்ற சொற்சந்த கூட்டும், கூடாலா, தேவார பாடலா, தீராத ஊடலா, தேன் சிந்தும் தூரலா என்ற சொல் வரிகளை திரும்ப திரும்ப கேட்கும் போது, தேன் உண்ட வண்டைப்போல மாறிவிடுகின்றேன். உன் பார்வை தூண்டிலா? நான் கூண்டிலா? உன் தேகம் என்ன தேக்கிலா, சுவை என்ன நாக்கிலா? என்று சொற்களை கேகும் போது , தேனுக்குள் விழுந்த எறும்பாக நான் திளைக்கின்றேன், தவிக்கின்றேன்! அன்புடன் பேசாலைதாஸ்
ஞாயிறு, 1 ஜூலை, 2018
பாட்டும் பதமும் 61 ஒரு வெள்ளை மழை பொழிகின்றது
" ஒரு வெள்ளை மழை பொழிகின்றது" பேசாலைதாஸ்
ரோஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ரகுமான் இசை ஆக்கத்தில் வெளிவந்த பாடல் இது. பாடல் சுமாரான பாடல்தான். நான் ஏன் இந்த பாடலை இசை தேர்வுக்கு தெரிவு செய்தேன் என்றால் அத ற்கு ஒரு காரணம் உண்டு. அதனை நான் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்தாக வேண்டும் என எண்ணினேன்..
புலம்பெயர் தமிழர் வாழ்வில், கலாச்சார இணைவுகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. வெளிநாட்டுக்கார ர்கள் எங்கள் பெண்களை மணந்து, அவர்களின் பிள்ளை களைகளுக்கு தமிழ் கலை பணபாடுகளை ஊட்டுவது பாராட்டதக்கது. எங்கள் ஈழத் தமிழ் இனம், இது போன்ற திருமணங்களை ஊக்குவிப்பதன் மூலம், எங்கும்! தமிழ் எதிலும் தமிழ்! என்பதை சர்வதேச சமூகத்திலும் பதிவு செய்ய லாம், எமது ஈழத்தமிழ்னம் கடல் கடந்து போனாளும்ம், அங்கும் கிளை பரப்பவேண்டும் என்பது என் எண்ணம்! ஜேர்மன் நாட்டில் வசிக் கும் ஒரு தமிழ் பெண்மணி, ஒரு ஜேர்மன் நாட்டு பிரஜையை மணம் முடித்து, அதன் வழியாக பிறந்த ஜேர்மன் தமிழ் கலப்பு பெண்பிள்ளை, வெள்ளை மழை பொழிகின்றது என்றபாடலை பாடி அசத்துகின்றாள்! கூடவே, பரத நாட்டியம், மிருதங்கம், இசை என்பனவற்றை பயின்று கொண்டு இருக்கின்றாள்!
யாழ்பணத்தில் நடைபெற்ற ஒரு இசைத்தேர்வில், மனோ, சித்திர நாடுவர்களுக்கு முன்பாக தோன்றி பாடல்பாடி போட்டி யில் கலந்து கொண்டமை தமிழர் அனைவரும் வியந்து பாராட்டுகின்ற னர். இதுபோன்ற திருமணங்களை எம்மவர் இனிவரும் காலங்கலில் ஊக்குவிக்கவேண்டும், வரவேற்கவேண்டும் என்று கூறி எமது ஜெர்மன் தமிழ் பெண்ணின் பாடலையும் அதன் அசல் பிரதியையும் இங்கே உங்களுக்காக பதியவிடுகின்றேன் அன்புடன் பேசாலைதாஸ்
பாட்டும் பதமும் 60 நிலவு தூங்கும் நேரம்!
நிலவு தூங்கும் நேரம்! நினைவு தூங்கிடாது, இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது! பேசாலைதாஸ்
எனக்கு பிடித்தமான மோகன ராகத்தில் அமை ந்த அமைதியான அழகான பாடல் இது, இளவரசியும் மோகனும் பாட்டுக்கு அசத்துரா ங்க! அமைதியான இரவு, நிலாவொளியில் நுன்னிய காதலை வெகு அற்புதமாக மோகன ராகத்தில், சுரம் பிரிக்கின்றார் இளைய ராஜா! பாடல் இடம் பெற்ற திரைப்படம், குங்கு மச்சிமிழ்! இந்த படம் வெளிவந்த போது, நான் இந்தியாவில் ஒரு போராளியா, காடுகளுக்குள் போர்ப்பயிற்ச்சி எடுத்தகாலம் அது! எனக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போது இருந்ததில்லை, எல்லா தமிழ் பல்கலைக்கழக இளைஞர்கள் போல, கனவுகளையும், இலட்சியங்களையும், காதலையும், தொலைத்தவர்களில், நானும் ஒருவன்! கடைசியில் போராடப்போன இயக்கமும் கன்வு போல களைந்துபோனது, எல்லாமே கனவுகளாகி, விரக்தியுடன் வெளிநாடு போய் தொலைக்கலாம் என பம்பாய், தாராவியில் தங்கியிருந்து, விமானம் அண்ணாந்து பார்த்து, தவம் கிடந்து ஆகாய கப்பல் ஏறிய அந்த ஏக்கமான காலங்களில், இந்தபாடல் இதயத்துக்கு ஒரு ஒத்தடமாக அமைந்ததை மறக்கமுடியுமா? பாடல் காட்சிகள், நிலாக்காலத்தில் பேசாலை கடற்கரையை நினவுக்கு கொண்டுவருகின்றது. நள்ளிரவிலே ,இருளை தொலைத்த , கோடை கால துருவ நாட்டில் (நோர்வே) இருந்து கொண்டு, நிலாவையும் எனது பேசாலை கடற்கரையையும், காரிலே இருந்தபடி கற்பனை செய்வதில் ஒரு தனிச்சுகம்!
நிலவு என்றாலே கவிஞர்களுக்கும், காதலர்களுக்கும் தேனடை! எனக்கும் நிலாவிலே ஒரு மயக்கம்!
நிலவுக்காக இளையராஜா அழகான பாடலை மோகன ராகத்தில் நெசவாக, மிக நேர்த்தியாக நெய்திருகின்றார். இளையராஜாவின் இசையே.அவருடைய பாடல்களைப் பாடும் எந்த பாடகரோ பாடகியோ , அல்லது நடிகரோ யாராக இ ருந்தாலும் அங்கே இளையராஜா இசை என்றே அறியப்படும்..அந்த அளவுக்கு அவரது இசை அவரை அடையாளம் காட்டி இருக்கிறது. இளையராஜாவுக்கு முந்தைய இசைமேதைகள் எல்லோரும் மரபு வழி நின்றும் , மீறியும் மோகனத்தில் நல்ல பாடல்களைத் தந்தாலும் ,அவர்களை விட மேலைத்தேய ஹார்மொனி இசையை விஸ்தாரமாக நமது மரபு இசையுடன் இணைத்த பெருமை இளையராஜாவின் இசைச் சாதனை ஆகும். இம்மாதிரியான இசைக்கலவை இசை எனபது தமிழுக்கு மிகவும் புதியது.இப்படிப்பட்ட ஹார்மொனி கலந்த இசையை இந்தியாவில் வேறெங்குமே கேட்க முடியாது.இந்தவகை இசையை பெரும்பாலும் ஒவ்வொரு பாடலிலும் கேட்டு மிகிழலாம்.
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..
—
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான் …
வாழ்வோம் வா கண்ணே
—
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..
—
கீதை போல காதல் மிக புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்… ஏன் தயக்கம்…
கண்ணே வா இங்கே
—
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...