இசைக்கு ஏது மொழி !
ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! மொழி கடந்த ரசனை
இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைஏராளமானவை.
ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது.
ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது …அதிகமாக இசை கேட்டுக்கொண்டிருப்பதன் பலனாக எனக்குத் தெரிந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரே ஒரு மெட்டு பல பாடல்களாக சில தொகுப்பை தரவிழைகிறேன்
ஒரே இசையில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பாடக பாடகிகள் பாடிய பாடல்கள் கேட்டிருக்கிறோம் ஏன் சில படங்களில் ஒரு பாடல் இரண்டு தடவை இடம்பெற்றிருப்பதையும் கேட்டிருக்கிறோம். அவ்வாறான பாடல்கள் ஒரே மெட்டில் வேறு வரிகளை கொண்டதாகவோ அல்லது பாடக பாடகிகள் வேறுபட்டதாகவோ இருக்கும்...
ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் . இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். https://www.youtube.com/watch?v=IO3D-JfItCU
வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டது ‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம். ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்ட இந்தப் படத்தில் ஜோ ஹம்னே தாஸ்தான் அப்னே சுனாயீ தோ, ஆப் கியோன் ரோயே’ என்று தொடங்கும் இந்திப் பாடலின் இதற்கு இணயாண வரிகளாக அமைந்த, ‘என் வேதனையில் உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா’ என்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் தொடக்க வரிகள், தமிழ்த் திரையில் பொதுவாக நாயகி, நாயகனிடம் வெளிப்படுத்தாத உணர்வின் அடையாளமாக அமைந்தன. https://www.youtube.com/watch?v=mdvlh0E7mYk
குறிப்பாக, ‘வோ கோன் தி’ (யார் நீ என்ற பெயரில் தமிழில் வந்த படம்) என்ற படத்தில், ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத்’ (‘பொன் மேனி தழுவாமலே’ என்ற கண்ணதாசனின் பொருத்தமான மொழிபெயர்ப்புப் பாடல்) ‘நயனா பர்ஸே ரிம் ஜிம்’ (நானே வருவேன் அங்கும் இங்கும்) ஆகிய பாடல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கேட்டு மட்டுமே உணர முடியும்.
ஆப் கீ பர்ச்சாயியான்’(உங்களுடைய நிழல்) என்ற படத்தின் ‘அகர் முஜ் ஸே முகபத் ஹை’முஜ்ஜே ஸப் அப்னே கம் தே தோ’ என்று தொடங்கும் இப்பாடல் லதா மங்கேஷ்கரின் அமரத்துவமான பாடல்களில் ஒன்று.
‘ஆலயமணி’ திரைப்படத்துக்காகக் கண்ணதாசன் எழுதிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’என்று தொடங்கும் பாடலின், “அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையாக” என்ற ஆழமான கவித்துவ வரிகளை நினைவுபடுத்தும் https://www.youtube.com/watch?v=gfDf-IrA5oQ
‘மூக மனசுலு’ (ஊமை மனம்) என்ற தெலுங்குப் படம் 1964-ல் வந்தது. மறுபிறப்புக் கருத்தை மையமாகக் கொண்டு, நாகேஸ்வர ராவ், சாவித்திரி, ஜமுனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 1967-ல் தெலுங்குப் படத்தின் இயக்குநரான அடுருத்தி சுப்பா ராவ் இயக்கத்தில் ‘மிலன்’ (சந்திப்பு) என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது.
சென்ற பிறவியில் படகோட்டியாக இருந்த நாயகனின் காதல் கதையை, பிளாஷ்-பேக் உத்தியில் வெளிப்படுத்துகிறது இப்படம். மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா, பவன் கரே சோர், ஜியாரா ரே ஜூமே ஜைஸ்ஸே, பன் மே நாச்சே மோர்’ என்ற பாடல், மொழி, பொருள் கடந்த உணர்வின் அழகான வெளிப்பாடாகத் திகழ்கிறது.
பிராப்தம்’என்ற பெயரில், சிவாஜி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளிவந்த இப்படம் தமிழில் தோல்வி அடைந்தது. ஆனால் இப்படத்தில் ‘சந்தனத்தின் நல்ல வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்றல் காத்து,’ என்ற புகழ் பெற்ற பாடலிலும், ‘காத்து இல்லை, காற்று’ என்று திருத்தும் உத்தியும் தக்கவைக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=aSqwfhYAoxs
மலரே குறிஞ்சி மலரே – தமிழில் பாடகர் ஜேசுதாசை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்களில் முக்கியமானதொன்றாகும்.அவர் ஏற்கனவே பாடிய மலையாள திரைப்பாடலான ” அகலே அகலே நீலாகாசம் ” என்ற பாடலின் அழுத்தமான பாதிப்பு நிறைந்த பாடல்.. https://www.youtube.com/watch?v=PYiKWrha-40
‘ “ஷர்மிலி : என்ற படத்துக்காக ‘கில்..... தே ஹைன் குல்யாஹான்’ கிஷோர் குமாரின் வசீகரக் குரலில் பாடிய பாடல் என்னை மயக்கியது. ராதையின் நெஞ்சமே’ பாடல்..அத்தனை ஈர்ப்பான இசையின் மூலம் இந்தி இந்தியில் … https://www.youtube.com/watch?v=ZTqz4JIN7UM
நீலமாம் கடலலையில் கோலமிடும் மீன் இனங்கள் சொல்லுவதென்ன ? .. Originally the song was composed by RK Sekhar...father of A.R.Rehman.
இந்த பாடலின் பல மெட்டுக்கள் மலையாளம், கன்னடம் மொழிகளில் வலம் வருகின்றன .. https://www.youtube.com/watch?v=aFWdNIF6QRc
தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல். https://www.youtube.com/watch?v=ZwVqqIofVXQ
‘அனார்கலி’ படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ‘ஜாக் ஜாக் தர்தே இஷ்க்’ (விழித்தெழு விழித்தெழு காதலே) என்ற மற்றுமொரு பாடல் பின்னர் தெலுங்கு மொழியிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ‘அனார்கலி’ படப் பாடலுக்கு மூலப் பாடலாக அமைந்தது.
காதலின் வீச்சை, தாபத்தை தனக்கே உரிய வசீகரக் குரலில் எழுச்சியுடன் ஹேமந்த் குமார் வெளிப்படுத்தினார். ஹேமந்த் குமார் போன்றே தனித்துவமான குரல் வளம் கொண்ட கண்டசாலா ஜிக்கியுடன் இணைந்து ‘அனார்கலி’யில் பாடினார். ‘ராஜசேகரா என் மேல் மோடி (வசியம்) செய்யலாகுமா’ என்ற அப்பாடல் ராஜேந்திர கிஷன் கவி வரிகளுக்கு இணையாக தஞ்சை ராமய்யாதாஸ் எழுதிய புகழ் பெற்ற பாடல்.
‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’ என்று தொடங்கும் ‘கண்கண்ட தெய்வம்’ படத்தின் அப்பாடல் கின்னஸ் சாதனைக்கு பி.சுசிலாவை இட்டுச் சென்ற பாடல்களில் ஒன்று. ஆதி நாரயண ராவ் இசையில் லலிதா ஆடி நடித்த அப்பாடல், இந்தியில் வைஜெயந்திமாலா நாட்டியமாடிய ‘ஊச்சி ஊச்சி, துனியா கீ திவாரே சய்யான் தோடுக்கே’ என்ற பாடலின் மெட்டில் உருவாக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=fkZlDCz8Bvc
பெண்ணியச் சிந்தனையை மையப்படுத்தித் தமிழில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்த ‘நானும் ஒரு பெண்’ என்ற படம் இந்திக்குப் போனது., தயாரிப்பாளர், இயக்குநர், முக்கிய நடிகர்கள், பாடல் வரிகள், மெட்டுக்கள் ஆகிய அனைத்தும் அப்படியே தக்க வைக்கப்பட்டு அதே காலகட்டத்தில் இந்தியில் ‘மே பீ லடுக்கி ஹூம்’ (நானும் பெண்தான்) என்னும் படமாக மொழிமாற்றம் செய்யப்பட்டது.. “கிருஷ்ணா ஓ காலி கிருஷ்ணா துனே ஏ க்யா கியா கைஸே பதலா லியே” என்ற, தமிழ்ப் பாடலின் அதே மீட்டரில் அமைந்த இந்திப் பாடலின் பொருள்:
தெளிவான புரிதலும் ரசனையும் இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்துகொண்டு பாடல்களை நாம் ரசிக்கும்பொழுது அதை இயற்றிய கவிஞர்களின் ஆற்றல் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.
. இந்த வேறுபாட்டை உணர்ந்துகொண்டு அதனை ரசிக்கும்போது அந்த ரசனையே அலாதியானதாக மாறிவிடுகிறது.
இவை அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதே இந்தத் தொடரின் நோக்கம்.
இது போல் நான் இங்கு சொல்லாத பல பாடல்களின் கரையோரம் சென்று அந்தக் கடல் நீரில் கொஞ்சம் கால் நனைப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக