செவ்வாய், 14 ஜூலை, 2020

0107 பாட்டும் பதமும் எனக்கொரு காதலி இருக்கின்றாள்

                      எனக்கொரு காதலி இருக்கின்றாள்                                                                                                                      பேசாலைதாஸ் 

நான் இரசித்து மகிழும் இன்னொரு பாடல் இது, காமத்து பால் சுவை ததும்பும் பாடல் கள் எழுதுவதில் வாலிக்கு இணை யாரும் இல்லை என்பது எனது தனிப்படட கருத்து, அதுபோல மனதை வருடும் மெல்லிசைக்கு நிகர் விஸ்வநாதன் என்பது எனது தாழ்மை யான கருத்து! இந்த இருவரும் மனம்வைத்து ஒரு பாடலை தமது  காதலியாக நினைத்து செயல்படுதல் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு இந்த பாடல் நல்லதொரு சான்று. 

மெல்லிசை மன்னருக்கு இசையின் மேல் உள்ள காதலை, வாலி அவர்கள் கவிதை யாக எழுதி அவரிடமே இசை அமைக்க கொடுத்த பாடல் இது. இசையை காதலியாக கற்பனை செய்து அவளை வர்ணனை செய்யும் இந்த பாடலின் ஒவ் வொரு வரிகளும் சுகமானவை. மெல்லிசை மன்னரும், எஸ்.பி.பி. அவர்களும் சேர்ந்து பாடிய ஒரு அருமையான பாடல் இது.
'ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்' என்ற வரிகளை பாடியவுடன், இந்த வரிகளுக்கு விளக்கம் கொடுப்பது போல 'க,ம,ப,த,நி........என்று ஸ்வரங்களை பாடி சிரிப்பது மிகவும் அழகு. இந்த ஏழு ஸ்வரங்களுக்கும் பெயர்கள் உண்டு. அதில் 'ப' என்ற ஸ்வரதுக்கு பஞ்சமம், 'த' என்ற ஸ்வரதுக்கு 'தெய்வதம்' என்றும் பெயர். கவிஞர் இதையே தன் பாடல் வரிகளாக எவ்வளவு அழகாக எழுதி உள்ளார்.
"பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக"
"என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச கைவசமாகும் எதிர்காலம்"
இசை என்பவள் அதை ரசிக்கும் எல்லோருடனும் ஒரு ஜீவனாகவே வாழ்கிறாள். நம் மனதில் தோன்றும் பல வித உணர்ச்சிகளுக்கு ஏற்ப இந்த இசையானது எத்தனை வடிவங்களில் வந்து நம்முடன் நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. ஆறுதல் அளிக்கிறது. இந்த இசையை சுவாசிக்கும் அனைவருமே இதை உணர்திருப்பார்கள்.
"மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போல அவள் வந்தாள்"
அழகான கற்பனையில் வந்து நம்மை ஒரு தேவதையை கண்ட பரவசத்தை உண்டாக்கும் வரிகள் இவை.
நம் மனதில் உள்ளதையே நம் வார்த்தையில் கொண்டு வருவது கடினமாக உள்ளபோது, மெல்லிசை மன்னரின் மனதில் இசையாக உள்ள அவர் காதலியை கவிதையாக்கி இருப்பதை எப்படி பாராட்டுவது?
இந்தப் பாடல் பியானோவிலே ஆரம்பித்து அதிலேயே முடியும். ஒவ்வொரு சரணங்களின் இடையிலும் வரும் வயலினின் இசையும், பியானோவின் இசையும், பாடலின் இறுதியில் வரும் அந்த பியானோ மீட்டும் ராகத்தையே மறுபடி வயலினில் கேட்பதும் நம் மனதை உருக வைக்கும்.
இந்த பாடலின் இன்னொரு அழகு என்னவென்றால் மெல்லிசை மன்னர் அவர்கள் முதல் சரணத்தை எப்படி பாடி இருக்கிறாரோ, அதே பாணியில் இரண்டாவது சரணத்தை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருக்கிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து பாடும்போது நம் காதில் தேன் வந்து பாய்கிறது. இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத ஒரு விருந்துதான்.
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை நீங்களும் இந்த பாடலில் லாஜித்து உங்கள் மனைவியரை காதலியுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே! அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...