அசலும் நகலும் தொடர் 2
பொன் மேனி தழுவாமல், பெண் இன்பம் அடையாமல் ?
வெரோனா ஷர்மிளாவுடன் இணைந்து, பேசாலைதாஸ் வழங்கும் அசலும் நகலும், தொடர் 2 ,
இந்த தொடரில் தேன் தமிழ் ஓசை வானொலி நேயர்களுக் கும், தேன் தமிழ் தடாக தொலைக்காட்சி நேயர்களுக்கும் நாம் தரும் பாடல், 1966 இல் வெளிவந்த, பி எஸ் வீரப்பாவின் தயாரிப்பில் வேதாவின் இசையில் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில்,சத்யம் இயக்கத்தில் வெளிவந்த யார் நீ திரைப்படத்தில் இடம் பெற்ற பொன் மேனி தழுவாமல், பெண் இன்பம் அடையாமல் என்ற பாடலை சிலாகிக்கப்போகின்றோம்.
இசைக்கு மொழி கிடையாது என்பார்கள் எனினும், பாடல்கள் குறிப்பிட்ட மொழியைச் சார்ந்தே புனையப்படுகிறது. யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல், இனிதாவது எங்கும் காணோம், என்ற பாரதியே, சுந்தர தெலுங் கினில் பாட்டிசைத்து என்று தெலுங்கின் சுவையை எடுத்தியம்பினான். அனைத்து மொழிகளும் தனிதன்மையான சுவை, மணம், குணம் கொண்டு மிளிர்கிறது. பலதரப்பட்ட மொழி பேசும் மக்களின் வாழ்வுடன் நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் பல மொழிகளின் தழுவல்கள் ஏராள மானவை.
இப்படிப்பட்ட ஒரு மொழியின் கவிஞர்களை, பாடல்களை அறியதரவேண்டும் என்பதே இந்தத் தொடரின் நோக்கம். தெளிவான புரிதலும் ரசனையும் இருக் கும் போது இந்த நுட்பமான வேறுபாட்டை அறிய முடியும். மொழியையும் கடந்து எம் ரசனையை கவர்ந்த ஒரு திரைப்படம் 1964 -ல் ராஜ் கோஸ்லா இயக்கத்தில் வெளியான ‘வோ கோன் தீ’ (அவள் யாராக இருந்தாள்) என்ற இந்தித் திரைப்படம்.
‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம் ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழிலும் ‘ஆமெ எவரு’ என்ற பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ‘உளவியல் திகில்’ வகை சார்ந்த கதைக்களத்தை கொண்டது இப் படம், நடிகை சாதனா, இசை அமைப்பாளர் மதன்மோகன், பாடகி லதா மங்கேஷ்கர், பாடலாசிரியர் ராஜா மெஹதி அலி கான் ஆகிய அனைவரையும் அகில இந்திய நட்சத்திரங்களாக உயர்த்தியது.
‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’, வித்தியாசமான பாணியில் அமைந்த, ‘ஜோ ஹம்னே தாஸ்த்தான் அப்னே சுனாயீ தோ ஆப் கியோன் ரோயீ’, இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும் ‘ பர்ஸே நயனே ரிம்ஜிம் ரிம்ஜிம்’ ஆகிய மூன்று பாடல்களையும் பாடியவர் லதா மங்கேஷ்கர்.
மெஹதியின் மிகச் சிறந்த பாடல்களை, அதே உணர்வுடன், அச்சு மாறாமல், இசை, குரல் மட்டுமின்றி மொழியிலும் மாற்றம் நிகழாது அதே அழகுடன் தன் சிந்தையின் திறனால் கவிவடித்து அழகு சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.
படித்த மருத்துவரான நாயகன் ஒத்த உருவம் கொண்ட இரண்டு பெண்களை மர்மமான சூழலில் மாறிச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் குழப்பத்தில் தவிக்கிறான். அவன் குழப்பத்தை நீக்கி தன்வயப்படுத்தும் நாயகி பாடுவது போல் அமைந்த காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் இது.
‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’ என்று தொடங்கும் ஹிந்தி பாடலில் அருமையான அர்த்தம் உண்டு.‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’ என்றால் தமிழில், கழுத்தில் படர்ந்து கொண்டு என்னைக் கட்டிக்கொள் என்று பொருள். அந்த பாடல் தொடர்ந்து அழகாக செல்கின்றது.,,,,அணைத்துக்கொள் என்னை அன்பே, அழகான இந்த இரவு இனி வருமோ வராதோ, ஒருவேளை இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு, மீண்டும் ஏற்படுமோ ஏற்படாதோ,,,, இப்படியாக பாடல் நீட்சிகொள்கின்றது, இதோ ஹிந்தி பாடலை கேளுங்கள்
இந்தி நடிகை சாதனாவுக்கு இணையான அழகுடைய ஜெயலலிதா, மர்மமான, விட்டேத்தியான பார்வையை நன்றாக வெளிப்படுத்தும் மனோஜ் குமாருக்கு இணையான ஜெய்சங்கர் இப்படத்தின் தமிழ் வடிவான ‘யார் ‘நீ’ படத்தின் சிறப்பு அம்சங்கள். யார் நீ 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
தமிழில், இந்தப் பாடல், ‘பொன்மேனி தழுவாமல்’என்பதாக அமைந்தது. இந்திப் பாடலின் இசை, வயலின் பின்னணி உட்பட, முழுவதுமாகத் தமிழில் தக்க வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய இசையுடன் கண்ணதாசனின் எழில் கொஞ்சும் வரிகளும் சேர்ந்து இந்தப்பாடலை சாகா வரம்பெற்ற பாடலாக மாற்றிவிட்டது, காதல் தரும், இன்ப வலி, வேதனை இந்தப்பாடலில் விரவி நிற்கின்றது இதோ பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
நானே வருவேன் இங்கும் அங்கும் என்ற மெட்டில் அமைந்த ஹிந்தி பாடல் இதோ
நானே வருவேன் இங்கும் அங்கும் என்ற பாடல் வேதாவின் இசையில் பி சுசிலா பாடிய பாடல் இது. ஹிந்தியில் வரும் அதே கருத்து ஆழம் கொண்ட பாடலாக கண்ணதாசன் மிக அழகாக எழுதியுள்ளார் பாடல் இதோ
பார்வை ஒன்றே போதுமா பல்லாயிரம் சொல் தேவையா? என்ற மெட்டில் அமைந்த யார் நீ படத்தில் வரும் பாடல் இதோ
டீ எம் சௌந்தர ராஜன் பி சுசிலா இணைந்து பாடிய பாடல் பார்வை ஒன்றே போதுமா பல்லாயிரம் சொல் தேவையா? என்ற யார் நீ படத்தில் வரும் பாடல் கண்ணதாசனின் காதல் இரசம் சொட்டும் பாடல் இதோ
டிக்கி ரிக்கி த குறி, திக்கி ரிக்கி கும் என்ற ஹிந்தி பாடலை இப்பொழுது கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக