அசலும் நகலும் பாகம் 4
இந்த பகுதியில் சகோதரி வெரோனா ஷர்மிளா, தேன் தமிழ் ஓசைக்கு அனுப்பியுள்ள பாடல்தான், அழகின் காலடியில் அமைதி காணவந்தேன் என்ற பாடல், இந்த பாடலின் அசல் நகல் இவை களை நாம் கவனிப்போம் வாருங்கள், தாவிப்பாயுங்கள் தேன் தமிழ் தடாகம் என்ற இசை இன்பத்தடாக த்தில்! இந்தப்பாடல் இடம் பெற்ற படம் 1970 வெளிவந்த சிநேகிதி என்றபடம், ஜெமினி,ரவிச்சந்திரன் மற்றும் சரோஜாதேவி இவர்கள் நடிப்பில் வெளிவந்த படம். அந்த படத்தில் வெளி வந்த பாடல்தான் அழகின் காலடியில் அமைதி காணவந்தேன். இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு, வரிவடிவம் வாலி, பாடியவர் அபிமான பாடகர் சௌந்தரராஜன் இந்த பாடலை நீங்கள் யூடியூபில் காணமுடியாது, எமது பிரத்தியேக சேமிப்பு கிடங்கில் இருந்து, எடுத்து தருகின்றோம். முதலில் பாடலை எழுதிக் கொண்டு, பின்னர் பார்வை இடுங்கள்.
இந்த பகுதியில் சகோதரி வெரோனா ஷர்மிளா, தேன் தமிழ் ஓசைக்கு அனுப்பியுள்ள பாடல்தான், அழகின் காலடியில் அமைதி காணவந்தேன் என்ற பாடல், இந்த பாடலின் அசல் நகல் இவை களை நாம் கவனிப்போம் வாருங்கள், தாவிப்பாயுங்கள் தேன் தமிழ் தடாகம் என்ற இசை இன்பத்தடாக த்தில்! இந்தப்பாடல் இடம் பெற்ற படம் 1970 வெளிவந்த சிநேகிதி என்றபடம், ஜெமினி,ரவிச்சந்திரன் மற்றும் சரோஜாதேவி இவர்கள் நடிப்பில் வெளிவந்த படம். அந்த படத்தில் வெளி வந்த பாடல்தான் அழகின் காலடியில் அமைதி காணவந்தேன். இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு, வரிவடிவம் வாலி, பாடியவர் அபிமான பாடகர் சௌந்தரராஜன் இந்த பாடலை நீங்கள் யூடியூபில் காணமுடியாது, எமது பிரத்தியேக சேமிப்பு கிடங்கில் இருந்து, எடுத்து தருகின்றோம். முதலில் பாடலை எழுதிக் கொண்டு, பின்னர் பார்வை இடுங்கள்.
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஒரு பொழுதேனும் துயரமில்லாத
உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும்
நினைவுகளாலே துடித்தவன் நெஞ்சை
மயங்கிட வைத்தால் நிம்மதி தோன்றும்
நிம்மதி தோன்றும் !நிம்மதி தோன்றும !
எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ
எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ
அந்தந்த இடத்தில் அடைக்கலம் வேண்டுகின்கிறேன்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்.....
இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை
கொடுத்தவன் கொடுத்தான் வேறொரு துணையை
மணவறைக் கோலம் தனியறைப்பாடல்
மறந்திட வந்தேன் மனம் விரும்பாமல்
மனம் விரும்பாமல் ! மனம் விரும்பாமல் !
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல
ஒரு நெஞ்சம் இங்கே எரிகின்ற நேரத்திலே
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இனி நேயர்களே இந்தப்பாடலைப்பற்றி கொஞ்சம சிலாகிப்போம்! இந்த பாடலுக்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவின் இந்த இசை மெட்டை, 1967 இல் வெளிவந்த ஹம்ராஸ் என்ற படத்தில் வெளிவந்த ,,, என்ற பாடலை அப்படியே தழுவி எடுத்துள்ளார். இந்த படம் Come September என்ற ஹாலிவுட் படத்தின் ஹிந்தி வடிவம் இதே படம் தான் தமிழில் அன்பே வா என்ற படமாக மருவி வந்தது, நாம் உருகி நின்றுபார்த்தோம் மற்றுமொரு அசலும் நகலிலும், சந்திக்கும் வரை, பாடல் தந்து உதவும் சகோதரி வெரோனா ஷர்மிளாவோடு விடை பெற்று செல்வது உங்கள் அபிமான பேசாலைதாஸ் நன்றி வணக்கம் நேயர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக