சனி, 19 டிசம்பர், 2020

0027சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்! பேசாலைதாஸ்

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்! பேசாலைதாஸ்


என் கவி ஆசானின் கவித்திறனை சொல்லிக்கொண்டே போகலாம், அது ஒரு அலாதியான தனிச்சுவை, சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய், என்றபாடல் என் வாழ்வில் மறக்கமுடி யாதா பாடல், அந்த பாடல் உருவான சூழ்நிலை கவிஞர் கண்ணதாஸனுக்கு ஏற்பட்டது போலவே எனக்கும் ஏற்பட் டது, முதலில் கவிஞருக்கு நிகழ்ந்ததை கூறிக்கொண்டு எனது சமாச்சாரத்து வருகின்றேன். 


மக்கள் திலகம் எம்ஜீயாருக்கும் கண்ணதாசனுக்கும், நட்பு சுமுகமாய் இரு ந்த காலம்; கண்ணதாசன் கொஞ்சம் பிஸியான நேரம். MGR க்கு பாட்டு எழுத உண் மையாகவே நேரம் இல்லை என்று தவிர்த்து வந்தார். அப்போது கவிஞரை காண வந்த MGR . தனக்கு பாட்டு எழுதித்தராது ,கவிஞர் அங்கி ருந்து போகமுடி யாது என்று சொல்லி, அவர் இருந்த அறைக்கதவை பூட்டி விட்டாராம். ஜன்னல் வெளிப்பக்கம் இருந்து காவிக்கொத்தை காட்டி, பாடல் எழுதித்தராது இங்கிரு ந்து நீங்கள் போக முடியாது என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார். 

கவிஞரும்  சிரித்துக்கொண்டே உடனே  இரண்டு வரிகள் எழுதினாராம் . அது "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய், (MGR பொன்னிற வண்ணம் உள்ள வர் ) கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்.." என்று ... இதை வெளிப்பு றம் இருந்து பார்த்த MGR உள்ளேவந்து, தான் கதவை பூட்டவில்லை, சும்மா சாத்திவிட்டுத்தான் சென்றேன் என்று சமாதானம் சொன்னாராம். 


கவிஞரும் பாடலை திரைப்படத்திற்கு என்று எழுதித் தந்தாலும், பல வரிகள், இந்தப் பாட லில் கவிஞருக்கு, MGR க்கும் பொருந்தும்படிதான் இருந்தது   ."இன்பம் ,துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையம் ஒன்றே, எளிமை ,பெருமை எதுவந்தாலும் இருவரும் வழியும் ஒன்றே .."  போன்ற வரிகளை  குறிப்பாக சொல்லலாம் . அவர்  எழுதிய வரிகள் இதுபோல வேறு வேறு சூழலுக்கும் பொருந்தும் வண் ணம் பாடல் புனைந்து கொடுத்ததுதான் அவரின் தனித்தி றமை. காலங்கள் பல கடந்தும்  இன்றும் அந்தப் பாடல்கள் எல்லாம் நம் உதடு களில் ,எண்ணங்களில் இருப்பதே இதற்கு சாட்சி!


இனி சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்,,, என்ற பாடலுக்கும் எனக் கும் இடையில் உள்ள தொடர்பை சொல்லாம் என நினைக்கின்றேன். தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு தளபதியாகவும், மன்னார் தளபதியாகவும் இரு ந்த விக்டர் அவர்கள், 1983 இல். திருநெல்வேலியில் புலிகள் நடத்திய  குண்டுத் தாக்குதலில், விக்டர் அவர்களும் பங்குபற்றியது, எப்படியோ இராணுவத்துக்கு கசிந்து விட்டது, அந்த காலகட்டத்தில், விக்டரின் தம்பி சுதாகர் பேராதனை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார், அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள், நான் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்துக் கொண்டிருந்தேன், 


ஒரு நாள் இராணுவம் திட்டமிட்ட படி விக்டரின் குடுபத்துக்கு நெருக்கமான மன் னார் பல்கலைகழக மாணவர்களை இரவோடு இரவாக கைது செய்து, தள்ளாடி இராணுவமுகாமில் அடைத்தது. சிறையில் பல நாட்கள் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, இதற்குள் எங்களை காவல் செய்த இராணுவவீரன் சுதாருடன் நட்பாகிவிட்டான். எப்போதும் அவன் எங்களை பார்த்து சிரிப்பான், இந்த நேரத் தில் சுதாகர், சிரித்து சிரித்து என்னை சிறையில் வைத்தாய் என்று பாடுவார், அவனுக்கு பயம் என்றதே கிடையாது, ஆனால் எனக்கோ எப்போதும் மரணபய மாக இருந்தது, இன்றுவரை இந்த பாடலையும், மாவீரன் சுதாகரையும் மறக் கவே முடியாது.

சூழலுக்கு ஏற்ப கவிதை வடிப்பதிலும், அந்த கவிவரிகளுக்குள், கதாபாத்திர த்தை திணிப்பதும், கவிஞருக்கு கைவந்த கலை, வாலி வருவதற்கு முன்னும், அரசியலில் MGR அவர்களோடு   முரண்பாடு வருவதற்கு முற்பட்ட கால கட்டத் தில் , கண்ணதாசன், MGR அவர்களுக்கு  எழுதியது போல திரைப்பாடல் யாரும் எழுதியதில்லை .


"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் " என்ற பாடலும்  "நான்கு பேர்கள் போற்ற வும் நாடு உன்னை வாழ்த்தவும் " இரண்டும் வேட்டைக்காரன் படத்தில் 

"உலகம் பிறந்தது எனக்காக -அதில் -குயில்கள் பாடும் கலைக்கூடம் 

கொண்டது எனது அரசாங்கம் '- படம்  பாசம் 'அச்சம் என்பது மடமையடா ' படம் மன்னாதி மன்னன் MGR க்கு கண்ணதாசன் மேல் அளப்பரிய அன்பும் , மரியா தையும் உண்டு. அரசவைக்கவிஞர் ஆக்கி அழகு பார்த்தது  இதனால்தான்.  கண்ணதாசனை ரசிப்போம்  மகிழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்  


செவ்வாய், 15 டிசம்பர், 2020

ஆசையே அலைபோல,,,,,,,, பேசாலைதாஸ்

 ஆசையே அலைபோல,,,,,,,, பேசாலைதாஸ் 


தமிழில் 1958ஆம் ஆண்டு கே.வி. மகாதேவன் இசையமைப்பில் வெளியான "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஏகே வேலன் இயக்கிய முதல் படம்.  அதே படம், இந்தியில் ஏவிஎம்  தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சித்ர குப்தா இசையில் Barkha (1960) என்று இந்தியில் வெளியானது, வெளியான அதே வருடமே தெலுங்கில் கண்ட சாலா இசையில் Manchi Manasuku Manchi Rojulu என்று வெளியாகி அசத்தியது. இந்த மும்மொழி தகவல் எதற்கென் றால் படத்தின் கதை ஒருமிக்கையில் பாடல்க ளும் அவற்றுக்கான situation சிச்சுவேஷன்களும் மாறாமல் அப்படியே நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் தான். அந்த வகையில் தமிழில் இருந்த பெருவாரிப் பாடல் சூழல்கள் அப்ப டியே தெலுங்கு இந்தி என மொழிகள் கடந்தன. இந்த பாடல் தமிழில் அமை ந்தது போல் குரல், இசை, எடுத்தவிதம் எல்லாமல் சற்றும் பிசகாமல், அப்ப டியே மாற்று மொழிகளிலும் எடுக்கப்பட்டதே இந்த பாடல், அதுதான் " ஆசையே அலைபோல" என்ற பாடல்!

திருச்சி லோகநாதனின் குரல் இப்பாடலுக்கு மெருகூட்டுகின்றது. தற் போது கானா பாலாவின் பாடல்களில் ஊடுருவும் தனித்துவமான் சோக இராகம் இதற்குள்ளும் சுரம் பிரிக்கின்றது. திருச்சி லோகநாதனின் அளவு க்குள் அடங்காத மேற்சுரக் குரல் எப்போதும் திமிறி அடிக்கிற காற்றை போல அந்தந்த பாடலுக்கு உள்ளேயும் வெளியேயுமாக தன் குரலால் ஒரு உலகம் செய்து பழகும் கனகாத்திர குரல் லோகநாதனுடையது. தன் குரல் என்னவாக ஒலிக்க வேண்டும் என்பதை தனது ஆழ்மனதில் இருந்தே தீர் மானத்தின்படி, பாடத்தெரிந்த பெருங்கலைஞர் அவர். அவரது பொன்வை ரக் குரலுக்கு இந்த பாடல் ஒரு சகலகால சாட்சியம். கேவி மகாதேவன் தன் ஜென்மஜென்ம மனங்களிலிருந்தெல்லாம் அகழ்ந்தெடுத்த மாய இசை தோரணமாக இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் கவி ஆசான் கவியரசர் கண்ணதாசன்! 1958 ஆம் ஆண்டு வெளியான படம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், 62 வருடங்க ளுக்கு முன் எழுதப்பட்ட பாடல், சட்சாத் நான் பிறந்ததும் அதே வருடம் தான்! இதில் எழுதுகிற பல வரிகள் அந்த காலகட்டத்தில் உலக அளவில் ஏதாவதொரு மொழியில் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியாது. எழுதப்பட்டிருக்கவில்லை என்று சொல்லவே ப்ரியம். இந்தஒரு வரிக்கு வயது 62. இன்றளவும் புத்தம் புதியதாக இருக்கிறது. இன்னும் இருக்க போகிறது. ஒரு புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு சிந்தித்தால் அதன் பொருள் வானளவு விரிந்து செல்வது வெறும் புகழ்ச்சியல்ல.

"இருப்பது கனவு" இந்த ஒரு வரியை எடுத்து வைத்து கொண்டு எத்தனை பேசினா லும் பேச்சும் தீரலாம் பொழுதும் தீரலாம் பொருள் தீராது.இதன் மேலான கிறக்கமய க்கம் தீரவே தீராது. ஆசையே அலைபோலே நாமெல் லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே... போலே என்ற உருவகத்தை வைத்து கொண்டு எத்தனை பெரிய கலை கலவரம் செய்கிறார் கவிஞர்? பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! அதிசயம் என்ற சொல்லின் அபூர்வம் அத்தனையையும் நீக்கி விட்டு அதனை ஒரு புழக்கச் சொல்லாக மாற்றிவைக்கும் வல்லமை கவிஞருக்கு மாத்திரமே உண்டு.

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்..?இதில் வரக் கூடிய பாதையை என்ற சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான இன்னொ ன்றை வரவழைத்து பார்த்தால் தெரியவரும் அந்தச் சொல்லின் ஓர்மை பெருமிதம். இன்னொன்று இல்லாத ஒற்றையின் ஜாலவருகை அது. வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் என்ற ஒரு வரி மனித வாழ்வின் நிலையாமையை உருவமாற்றத்தை நித்தம் நித்தம் ஒரே ஒரு திசையிருளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கக் கூடிய பல்வேறு கதைகளை உடல் என்னும் ஒரு பண்டம் வாழ்வென்னும் கலய நீர் தன் மீது பட்டுப் பட்டு தன் உரு அழிந்து இன்னொன்றான வண்ணம் தன் பயணத்தை தொடர்ந்து வருவதை எல்லாம் ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்திருக்கிறது எத்தனை வளம்? இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா எனும் போது மிஞ்சுவது அதே இருளின் இன்னொரு அடர்வடிவம் தான் இல்லையா..? முதுமையே சுகமா என்று விளிப்பது ஆளற்ற வனாந்திர வெளியையா அல்லது அதற்கு தான் பதில் இருக்கிறதா..?

இங்கே இரண்டாம் சரணத்தை இப்படி முடிப்பது இன்னும் பேரழகல்லவா...

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

இந்த முறை பாதை என்ற சொல் அல்ல போகும் என்ற சொல்லை உற்று நோக்கலாம்... காலத்தின் பாதையில் போவது தான் வாழ்வது அதுவே ஆழ்வது அழிவது முடிவது எல்லாமே இல்லையா..?

இந்தப் பாடலின் சித்து வேலை இதன் மூன்றாம் சரணம் தான்.

சூறைக் காற்று வீசினால் தோணி ஓட்டம் மேவுமோ

வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்..?

இந்தப் பாடல் கையாண்டிருக்கிற வரவு செலவு இரண்டும் தெரிவதற்குள் கனவு நிறைந்துவிடும். காலம் கலைந்து விடும் கணக்கு புரிந்து விடும் அவ்வளவையும் யார் காணுவாரோ அவர் காணுவார், அவர்தான் இறைவன். தத்துவம், லெளகீகம், நிலையாமை,  மாயம், கனவு, அதற்குள் ஒரு சோகம் இப்படியே மன விசாலம் விரிந்து கொண்டே செல்கின்றது. இந்த பாடலை நான் கேட்கும் ஒவ்வொரு தடவை வையும், மாயமான இந்த உலகம், நிரந்தரமற்ற வாழ்வு, அதன் உணர்வு வடிவம் எல்லாமே அர்த்தமற்றதாக தோன்றும், இளமை மீண்டும் வருமா? ஏக்கம் மனதை வாட்டும். கிடைக்கின்ற இன்பத்தை அப்போதே அனுபவித்துவிடவேண்டும் போல தோன்றும், அவை திரும்பி வருமா? என்ற கவலை மனதை ஆட்கொள்ளும்! மொத்தத்தில் இது பாடலல்ல, வாழ்வே மாயம் சுத்த சூனியம் என்று போதனை தருகிற வாழ்க்கை பாடம்! அன்புடன் பேசாலைதாஸ் 


வெள்ளி, 4 டிசம்பர், 2020

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? பேசாலைதாஸ்

 


                      நம் மனதை கேட்ட மாத்திரத்திலே அது நம்மை தொட்டுவிட்டது என்றால் அந்த பாடலை முதன்முறை கேட்கும் போது நம் மனது க்குள் என்ன நிகழ்கிறது? பாடலை முதன் முறை கேட்பது ஒரு வினோத மான அனுபவம் அடுத்து அந்த பாடல் என்னவாய் திரு ம்பும் என்பது யூகித்து யோசித்தபடி அப்படியே நிகழ்ந்தால் ஒரு ஆன ந்தம். மனது துள்ளிகுதிக்கத்தொடங்கும், ஒருவேளை எண் ணியது போல் இல்லாமல் வேறு புது மாதிரியாக  அமைந்துவிட் டால் ஒரு சலிப்பு தற்காலிகமாக ஏர்படும், பின்னர் அந்தபாடலில் இருக்கும் இசை னுட்பம் கருத்தாழம் போகப்போக பூவின் வாசம் புரிவ தைப்போல, அந்த பாடலும் மனதுக்குள் நிலைத்துவிடும்.   

ஸ்ரீதரின் போலீஸ்காரன் மகள் திரைப்படம்  இன்றளவும் காதலை அன்பை மனித மனதின் நுட்பமான உணர்வுகளை பின்னிய கதையாய் பலரது நெஞ்சங்களிலும் தேங்கி நிரந்தரித்திருக்கும் கலைநதி! கண்ணதாசனின் எழுத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் டிகே.ராமமூர்த்தி இருவரது இசையில்  எல்லாப் பாடல்களும் தேனாய் இனித்தன. பிபி.ஸ்ரீனிவாஸ் எனும் மாயக்குரலோனின் நிகரில்லா பொற்பாடல் இது.

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 

நெருப்பாய் எரிகிறது,

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் 

முள்ளாய் மாறியது,

கனிமொழிக்கென் மேல் என்னடி கோபம் 

கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கு என் மேல்  என்னடி கோபம்  கணையாய் பாய்கிறது"

இது ஒரு சுழல் இசை பாடல். மிக அழகாக முடிந்து முடிந்து தொடங்கி ஒன்று மற்றொன்றை தொட்டபடி கலந்து, தனித்து இசையாகவும் வரிகளாகும் மனதை மயக்கும் கானம்!

மெல்லிசை மன்னர்கள் யாராலும் யூகிக்க முடியாத நல்லிசை ஒன்று கொண்டு, இந்த பாடலை தொடங்கினார்கள் பிபி ஸ்ரீனிவாஸின்  குரல் இயல்பாகவே மானசீக நடுக்கம் ஒன்றை தன்னகத்தே கொண்டிருக்கும் அது, ஒவ்வொரு இழையாக இசையும் ஆன்மாவும் குரலும் பாடல் வரிகளும் கலந்து மலரின் இதழ் நுனியில் துளிர்க்கும் பனி  தொட்டெடுத்த தொனி கொண்டு கேட்பவர் மனங்கொல்லும்! இந்த பாடலின் பல்லவி முடிந்து சரணம் நுழையும் இசைக்கோர்வை தொன்மமும் கலந்து ஒலிக்கும் புது நதி பாய்ச்சல் என கிறங்கடிக்கும். பிபி ஸ்ரீநிவாஸ் பேச்சுவார்த்தை நிகழ்த்துகிற பெரியமனுஷ மத்தியஸ்தரின் பொறுமை கலந்த தியான ஒழுங்குடன் காதலை முள்ளற்ற மலராக தன் குரலால் மலர்த்தி இருப்பார்!

"குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுதல் ஏனடியோ

உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு 

வந்து கொல்வதுமேனடியோ,

திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் 

நான் தானே,

என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே" 

இந்த வரிகளை பாடுவதற்குள் உலகில் உள்ள அத்தனை அன்பையும் குரல்வழி பெயர்த்து பாடி, பிறகு இன்னும் கூடுதலாய் சர்க்கரைப்ரியம் கலந்து உருகியிருப்பார் ஸ்ரீனிவாஸ்.அதற்கேற்ப குரலால் ஆகாததும் குழலால் ஆகும் என்ற இசைமொழிக்கேற்ப இணைப்பிசையாக ஒரு குழலிசை வரும்..மயங்காத மாமனமும் மயக்கமுறும்.மொத்த பாடலின் பொழுதும் பின்னால் தூர ஆழத்தில் ஒரு வயலின் கோர்வை தொடர்ந்து தவழ்ந்து பெருக்கெடுத்து சிறந்து முடிவுவரை ஒலிக்கும் அந்த இழையின் அலைகளாய் காலத்தின் திசைகள் மனம் கலைக்கும்!

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு,

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு,

கண்ணதாசன்  கனிமொழி கனலாய் கண்களின் கணையாய் கொடியிடை படையாய் கவிவழி மனம் திறந்து மனுவெழுதி மனம் கலைத்து பார்வையை திறந்து விடு என்று புதியகாதல் செய்த வகையில் போலீஸ்காரன் மகள் படத்தில் எல்லா பாடல்களுமே சிறந்தாலும் இந்த பாடல் தியானகால காற்று உதிர்த்து தரும் கூடுதற்கனி மேலதிக சுவையொடு மனமினிக்கும் பாடற்சுளை...! சுவைத்தவன் பேசாலைதாஸ் 



சனி, 21 நவம்பர், 2020

பால் வண்ணம், பருவம் கண்டேன்.

 பால் வண்ணம், பருவம் கண்டேன். வேல் வண்ணம் விழியில் கண்டேன் பேசாலைதாஸ்


இறைவனின் சாயல்பற்றி விவிலியம் சொல்கின்றபோது, இறைவனின் சாயலாக மனிதன் படைக்கப்பட்டான் என விபரிக்கின்றது. கம்பராமாயணத்திலும் இறைவனின் குணம் பற்றி விபரிக்கப்படுகின்றது, விஸ்வாமித்திரர் என்ற பெரும் துறவி, இராமனை சந்திக்கின்றார். "இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. அது போல இராமா,  இதுவரை எப்படியோ தெரியாது, ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன். எங்கே இந்த உரையாடல் நடக்கின்றது? இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.கம்பன் அதனை மிக அழகாக, அழகு தமிழில் எழுதுகின்றார்.

‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி. இந்த உலகுக்கு எல்லாம்   உய்வண்ணம் அன்றி. மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?  மை வண்ணத்து அரக்கி போரில்.  மழை வண்ணத்து அண்ணலே! உன் கை வண்ணம் அங்குக் கண்டேன்;  கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’                                                                                                                                                                                                                                                                                                                                                                       

இந்த செய்யுளில் எத்தனை வண்ணம் கலந்திருக்கின்றது என்று பாருங்கள்?

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்  உய்வண்ணம்   துயர் வண்ணம்    மை வண்ணம்  மழை வண்ணம் கை வண்ணம்  கால் வண்ணம்   மொத்தம் எட்டு வண்ணம். இறைவனை எண் குணத்தான் (எட்டு குணம் உள்ளவன் என்று சொல்வது மரபு).                                                  எனக்கு இராமயணத்தில் நம்பிக்கை இல்லை, ஆனால் கம்பரின் கொஞ்சு தமிழில் என்னையே நான் மறப்பதுண்டு. என்னைவிட என் கவி ஆசான் கண்ணதாஸன் தமிழ் கம்பனை விட விஞ்சு தமிழாக எனக்கு தெரிகின்றது. கவியரசு இந்த செய்யுளை அழகிய ஒரு சினிமா பாடலாக தந்திருக்கின்றார்.

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?


ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்


மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?

மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பெண்: பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்  

வாடிநிற்கும் பேசாலைதாஸ்

வெள்ளி, 13 நவம்பர், 2020

இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்

இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்  பேசாலைதாஸ்

இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்ப வனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித் தார் அசோகன். ஒரு வில்ல னாக, கதாநாயகனாக, குண சித்திர நடிகனாக, நகைச்சுவை நடிகனாக பல்வேறு பாத்திரங் களில், பரினாமித்தவர் தான் அசோகன். அவருடைய சொந்த பெயரான "அந்தோணி" ஐ இயக்குனர் T .R . ராமண்ணா தான் அவருடைய மணப்பந்தல் என்ற திரைப்படத்தில் "அசோகன்" என்று பெயரை மாற்றினார்.

. அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். தனது பட்ட படிப்பை முடித்து சிறு சிறு நாடங்களின் நடித்துக்கொண்டிருந்தார்

முதன்முதலில் ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் சோழமன்னர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று நடித்திருந்தார்.

1960 மற்றும் 1970 களில் அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், பாத காணிக்கை , ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.

1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) “காட்டு ராணி”.

இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன்- வசந்தா நடித்திருந்தனர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.

அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படம் தயாரித்து வெளியிட்டார்

.

இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.

இவர் குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி,கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அசோகனை னினைவுபடுத்தும் பாடல்கள் இதோ!  அன்புடன் பேசாலைதாஸ்


-

இறந்தவனை சுமந்தவனும்

உடலுக்கு உயிர் காவல்

கன்னிபருவமவள்

ஆடிய ஆட்டமென்ன

பாரடி கண்ணே கொஞ்சம்

ஓராயிரம் பார்வையிலே

எண்ணபறவை சிறகடித்து

மனம் என்னும் மேடையின் மேலே

மனம் கனிவான

சத்தியம் இது சத்தியம்

வா அருகில் வா

என்னென்னவோ நான் நினைத்தேன்

புன்னகையில் ஒரு பொருள்

மல்லிகை ஹோய்

தேவிகா பற்றி கண்ணதாசன்

தேவிகா பற்றி கண்ணதாசன் பேசாலைதாஸ்



சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ,

நடத்தை கெட்டவர்களோ அல்ல;
அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார்.
வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார்.
இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
“பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.
கவியரசர்
கண்ணதாசன்


சனி, 24 அக்டோபர், 2020

நானாக நான் இல்லை

 நானாக நான் இல்லை   பேசாலைதாஸ்

                      நானாக நான் இல்லை தாயே என்ற பாடல் கமலஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் வருகி ன்றது, ஒரு தாய்க்காக பாடும் பாடல் அது, அந்தபாடலை கொஞ்சம் சிலா கிப்போமா? கவிஞர் எடுத்த எடுப்பிலே நானாக நான் இல்லை என்று தொடங் குகின்றார். வாலியின் வரிகள் சில வேளை நம்மை அசரவைக்கின்றது, சில கனம் நம்மை தத்துவ தேடலுக்கு திசை காட்டி செல்கின்றது. நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா? இல்லை என் பிள்ளை என்னைக்கேட்டு பிறந்தானா? என்று நம்மை நாமே கேள்வி கேட்கும் பொழுது விடையாகவருவது, நான் ஆக, நான் காரனம் இல்லை என்பதை சொல் சுருக்க சித்து விளையாட்டில் நானாக நான் இல்லை தாயே! என்று வருகின்றது.


இந்த பாடலைப்பற்றி கவிஞர் யுகபாரதி சொன்ன சில விடயங்கள் மனதில் வந்து போகின்றது. ஒருபாடலைப் பாடும்போது கிடைக்கும் உந்துதலும் உணர்வெ ழுச்சியும் ஏன் தொழில்முறைப் பாடகர்கள் பாடும்போது கிடைப்பதில்லை என்பது யோசனைக்குரியது. “நானாக நானில்லை தாயே” என்ற “தூங்காதே தம்பி தூங் காதே” பாடலை இளையராஜாவும் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் தனித்தனியே பாடியிருக்கின்றனர். இரண்டுபேர் பாடியதில் இளையராஜாவின் உச்சரிப்பில் வெளிப்படும் மென்சோகம் ஈர்ப்புடையது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் தவறாக உச்சரித்துப் பாடுபவரல்லர். இளையராஜா வழங்கிய ஸ்வரக் குறிப்புகளை வாங்கிப் பாடுபவர். வாங்கிப் பாடுவதற்கும் உள்ளிருந்து பாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தைத்தான் மென்சோகம் என்று சொல்லியிருக்கிறேன். என்கின்றார் யுகபாரதி,


உண்மைதான், படைப்புகள் ஒரு மனிதனின் உள்ளத்து உணர்வோடு இணைந்து வரும் போது, அதன் கணம் சற்று வித்தியாசமானது. அது இசையாக இருந்தல் என்ன சாதாரண உரையாடல்களாக இருந்தால் என்ன, உள்ளத்தின் உணர்வுகளோடு வெளிவரும் போது, அதன் ஈப்பும் காந்தமாக மனித மனங்களை கவரும், இனி பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்


திங்கள், 19 அக்டோபர், 2020

ஸ்ரீவித்யா அவர்களது நினைவு தினம்(19 ஐப்பசி)

 ஸ்ரீவித்யா அவர்களது நினைவு தினம்(19 ஐப்பசி) பேசாலைதாஸ்


தன் ஜி4 காந்த கண்விழி வீச்சில் என் உள் ளத்தையும், பலரது இதையைத்தையும் தன்னோடு இணைத்துக்கொண்ட விழிய ழகி நடிகை ஸ்ரீவித்யா! இன்று திரைப்பட த்துறையில் தனது அழகிய முகத்தாலும், , கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா அவர்களது நினைவு தினமாகும்
1970 தொட்டு 2000 வரை சுமார் 30 ஆண்டுகளாக தனது மிகத் துல்லியமான தேர்ந்த நடிப்பாலும், அழகு வதனத்தாலும், பேசும் விழிகளாலும், தென்னகத்திரை உலகையே தன் வசப்படுத்தி ரசிகர்களை மெய் மறக்க வைத்திருந்த நடிகை ஸ்ரீவித்யா, கர்னாடக இசையை தன் தேன் குரலால் உலகம் முழுவதும் பரப்பிய தேவகானக் குயில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரிக்கும், பல குரல் வேந்தனாய்த் திகழ்ந்த திரு விகடம் கிருஷ்ன மூர்த்திக்கும் 1953ல் செல்வ மகளாய்ப் பிறந்து. செல்ல மகளாயும் திகழ்ந்தவர்
.தாயைப் போலவே நல்ல குரல் வளம் கொண்டவரான ஸ்ரீவித்யா நடனத்திலும் சிறந்து விளங்கினார். தனது 13வது வயதில் நடிப்புக் களத்தில் இறங்கினார் ஸ்ரீவித்யா.
சகல கலைகளிலும் பயிற்சியும் தேற்சியும் பெற்று கலைமகளின் திருவருட்ச் செல்வியாகத் திகழ்ந்த இவருக்கு பக்தி இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய #திருவருள் செல்வர் என்ற அற்புதப் படைப்பே சிறப்பாக நாட்டியமாடி நடிக்கும் வாய்ப்பை முதல் முதலாக வழங்கியது.
அதன்மூலம் வெற்றி என்ற மூன்றெழுத்தைப் பெற்ற இவருக்கு அடுத்ததாக அமைந்த வாய்ப்போ நடிகர் ரவிச்சந்திரன் செல்வி ஜெயலலிதாவுடனான #மூன்றெழுத்து திரைப்படம். பிறகு தொடங்கியது திரைப்படத் துறையிலான இவரது புலிப் பாய்ச்சலான வேகம்.
நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் இவருக்குமுண்டு. தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர்.
ஒரு சராசரி கதாநாயகியைவிட குறைவான வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா. அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில்.
பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.
கமல், ஜெய்சங்கர், விஜயக்குமார் உள்ளிட்ட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன்ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார் . இவர் நடித்ததில் புகழ் பெற்றவை: அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், இமயம், என பல படங்கள் . தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ளார் . பேசாலைதாஸ்


வெள்ளி, 16 அக்டோபர், 2020

மானிடர் ஆன்மா மரணமெய்தாது பேசாலைதாஸ்

மானிடர் ஆன்மா மரணமெய்தாது     பேசாலைதாஸ்

                     
ஜென் மதம், பெளத்த மதம், கிறிஸ்த வம், இஸ்லாம், யூத மதங்கள் மறுபிற ப்பில் நம்பிக்கை அற்றவை  கள், ஆனாலும் மானிடர் ஆன்மா மரணம் எய்தாது என்பதில், ஆணி த்தரமாக நம்புகின்றார்கள். வாழ்வு மாறுபடு கின்றதே அன்றி அழிக்கப்படுவதி ல்லை என வேதம் சொல்கின் றது. உயிர் உடலை விட்ட அடுத்தக ணமே, வாழ்வு ஆன்மா என்ற ஸ்தூல வடிவத் துக்கு மாறுபடுகின்றது. இது எல்லா மதங்களும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.மறு பிறப்பு என்பதை கிறிஸ்தவம் வேறு ஒரு கோனத்தில் நோக்குகின்றது. கிறிஸ்துவுக்குள் மரித்தால், கிறிஸ்துவோடு மீண்டும் வாழ்வோம் அதுவும் இந்த மானுட உடலோடு. எனவே மரணத்தையிட்டு கலங்கதேவையில்லை, மரணத்தை ஜெயம் கொண்ட கிறிஸ்து இப்படி கேட்கின்றார், மரணமே உன் கூர் எங்கே?

                                                    "கர்ணன்"படத்தில் யுத்த காலத்தில் எதிரிகள் சேனையில் இருக்கும் பீஷ்மர் போன்றோரை கண்டதும், அவர்கள் தன் உறவினர்கள் அவர்களை கொல்ல  மனம் வரவில்லை என்று அர்ஜுனன் மனம் தளர்ந்து தனது வில்லை கீழே போட்டதும், பகவான் கண்ணன் அவ னுக்கு உபதேசம் செய்கிறார். அப்போது பாடப்படும் பாடல் இது. "மரண த்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா"...இப்பாடலை பாடியவர் - டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன். இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பாடலை இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன். இப்பாடல் ராகமாலிகையில் அமைந்துள்ளது.

                                   மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திரு க்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் 
ஓ அர்ஜுனா, மரணத்தை எண்ணி மனம் கலங்கிடும் உனக்கு மரணம் என் றால் என்னவென்று சொல்கிறேன் கேள்; மானிடரின் ஆன்மா ஒருபோதும் மரணம் எய்துவதில்லை. மறுபடி மறுபடி பிறந்து வரும். இங்கு உனது கடமை உயிர்களை (எதிரிகளின்) கொல்வது. ஒவ்வொரு எதிரியையும் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்றுதான் என்று அறிவுறுத்துகிறார் கண்ணன். இந்த வரிகள் நாட்டை இராகத்தில் அமைந்துள்ளன.

                                                     என்னை அறிவாய்  எல்லா உயிரும் எனதென்றும் அறிவாய் கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணி ந்து நில் தர்மம் வாழ என்னை நீ அறிந்து கொண்டால் எல்லா உயிர்களும் எனதே என்பதும் உனக்கு புரியும். நீ இந்தக் கண்ணனின்  மனது கல்மனது என்றெண்ணி உனது காண்டீபத்தை நழுவ விட்டாயோ! சகல உயிர்களும் நானே ஆவேன், மன்னரானாலும், மக்களானாலும், மரம் செடி கொடி போன்ற ஜீவராசிகளானாலும் அனைத்தும் நானே. இதை சொன்னவனும் சொல்பவனும் கண்ணனாகிய நானே. தர்மம் வாழ்வதற்கு நீ இப்போது துணிந்து நில் என்று அவனுக்கு தைரியமூட்டுகிறார் பகவான் கண்ணன். இந்த வரிகள் சஹானா இராகத்தில் அமைந்துள்ளன.

                                                      புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

இதுதான் புண்ணியம் என்று இந்த உலகம் கூறினால் அந்த புண்ணியம் கண்ணனுக்கே சேரும்  போற்றுபவர்கள் போற்றுவதும் தூற்றுபவர்கள் தூற்றுவதும் கண்ணனையே அடையட்டும். இங்கு அனைத்தும் கண்ணனே. கண்ணனே வழி காட்டினான், கண்ணனே செய்யென்று உரைத்தான், கண்ணனே இங்கு கொலையும் செயகின்றான் (நீ செய்யும் கொலையை) ஆகையால்  நீதான் அவர்களைக் கொல்லப் போகிறாய் என்று மனம் கல ங்கி உனது கடமையை செய்யத் தவறாதே, காண்டீபத்தை கையிலேந்தி இப்போர்க்களமெல்லாம்  சிவக்கும் வண்ணம் உன் கடமையை செய்வா யாக என்று கடமையை போதிக்கிறார் கண்ணன். 
 
                                  இந்த வரிகள் மத்யமாவதி இராகத்தில் அமைந்துள்ளன.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
இதுவும் மத்தியமாவதி இராகத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள்: 
நல்லோர்களின் முன்னேற்றத்திற்கும், தீய சக்திகளை அழிப்பதற்கும்,
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், நான் எல்லா யுகங்களிலும் வருவேன்.
என்று கூறுகிறார் பகவான் கண்ணன்.

இப்பாடலை தனது கணீர் குரலில் மிகவும் உணர்வு பூர்வமாகவும் ஆணி த்தரமாகவும் பாடியிருக்கிறார் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன். அவர் ஒருவரால் மட்டுமே பாட முடியும் இது போன்ற பாடல்களை.  கவியரசர் இப்பாடலிலேயே  கீதையின் பொருள் முழுவதையும் நமக்கு உணர்த்தி விடுகிறார். இவர் வால்மீகி, வியாசர் போன்றோரது காலத்தில் பிறந்திருந் தால் இன்னொரு இதிகாசம் நமக்கு கிடைத்திருக்கும். மெல்லிசை மன்னர் களோ காலத்தை கடந்து நிற்கும் அருமையான இசையை நமக்கு வழங்கி யிருக்கிறார்கள். அது நாம் செய்த பாக்கியம். இப்பாடலை கேட்டதும் அனைவரும் வாழ்க்கை என்றால் என்ன என்று நிச்சயம் சிந்திப்பார்கள் சிறிதேனும். அவ்வளவு பொருள் நிறைந்த பாடல் இது!கீதையின் சாரத்தை எளிய தமிழில் கவியரசர் வடித்துக் கொடுக்க, அதற்கு உயிரூட்டியிருக்கி றார்கள் மெல்லிசை மன்னர்கள். அன்புடன் பேசாலைதாஸ்

சனி, 10 அக்டோபர், 2020

காதலுக்கு முதல் மரியாதை

 காதலுக்கு  முதல் மரியாதை  பேசாலைதாஸ்

 


தமிழ் திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு படம், மன உணர்வுகளின் வித்தியாசமான ஒரு படம். கிட்டதட்ட தமிழ் கலாச்சார சிக்க லின் இன்னொரு பிரதிபிம்பம். தமிழ் சமூக த்தில் நடக்கும் திருமணங்கள் உண்மை யான இதய ஆசைகளை பிரதிபலித்து, நடப்பதில்லை. தமிழ் சமூகத்தில் நடக்கும் காதலும் அப்படித்தான் என்பது எனது கரு த்து. காதல், திருமணங்களில், சாதி சமயம், ஊர்,உறவு,பந்தம்,பாசம்,கலாச்சரம்,மொழி இப்படியான சிக்கல்களை ஊடறுத்து வருவ தால். இந்த காதல்,கல்யாணம் எல்லாம் இத யங்கள் மொழி உணர்வுகளினால் இயல்பாக வருவதில்லை. எல்லோருடைய திருமணங்க ளில் இந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கின் றது. அப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை யால் ஒருத்திக்கு வாழ்க்கைப்பட்டு, பொருத்தமான துணையின்றி ஏக்கத்தில் வாழும்  ஒரு நடுத்தர ஆணின் ஏக்க உணர்வுகள் தான் முதல் மரியாதை, அது காதலி ராதாவின் மரியா தையாக திரையில் பளிச்சிடுகின்றது," எனக்கொரு தாய்மடி கிடைக் குமா?" என்ற சிவாஜியின் ஏக்கப்பாடலாக, வைரமுத்துவின் வரிகளாக காதில் நுழைந்து, இதயத்தை நெருடவைக்கின்றது. 

                                            உலகத்தின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான தஸ்தாவெஸ்கி !  இவர் கதையை வைத்து முதல் மரியாதை படத்திற்கான கரு கதாசிரியர் ஆர்‌. செல்வராஜ் மூளையில் உதித்திருக்கி ன்றது என என்னை சிந்திக்கவைக்கின்றது. தஸ்தாவெஸ்கி பற்றி இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். 'குற்றமும் தண்டனையும்', 'கரமசோவ் சகோதர ர்கள்’ என்று தஸ்தாவெஸ்கி எழுதிய எல்லாம் இன்றும் கொண்டாடப்படும் ஆகச் சிறந்த படைப்புகள் . அரசைக் கடுமையாக எதிர்த்துஎழுதக் கூடியவர் தஸ்தாவெஸ்கி . அவர் வறுமையில் வாடினாலும் அரசை எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் . எனவே அவருக்கு மரண தண்டனையை விதித்து அரசு உத்தரவிட்டது.

                                        தூக்குமேடைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட இன்னும் மூன்று நாட்களே இருந்தன . அவருடைய எழுத்தை வாசிக்கும் ஆதரவாளர்கள் சிலர் அதிகார மையங்களில் இருந்தனர் .எனவே, அரசிடம் 'அவரை ஒருமுறை மன்னித்துவிடலாம்’ என்று  கோரிக்கை வைத்தார்கள் . அது ஏற்கப்படவில்லை .பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கெனச் சில விதிமுறைகள் இருந்தன . அதில் முக்கியமானது கைதியின் உடல் எடை குறையக் கூடாது.. எடை குறைந்தால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிடும் .அப்படியாக , தூக்கிலிடும் நாளுக்கு முன்பாக தஸ்தாவெஸ்கியின் எடையைப் பார்த்தபோது , அவர் எடை குறைந்திருந்தார் . அதனால் , அவர் தூக்கிலிடப்படவில்லை . பின்னர் , அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலையானார் .

                                      அதன் பிறகு மீண்டும் அவர் கடனால் கைதாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார் . கடனால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க ...... மூன்று மாதங்களுக்குள் அவர் ஒரு நாவலை எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றத் தரப்பில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது . தஸ்தாவெஸ்கி அப்போது ஓர் உதவியாளர் மட்டும் தேவை என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் . அவருக்கு அன்னா என்கிற இளம்பெண்ணை உதவியாளராக அனுப்பி வைத்தனர் .

                                 அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியை தொடக்கத்தில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை .  'என்னடா ஒரு கிழவன்கிட்டே வந்து மாட்டி க்கிட்டோமே ..’ என்று நொந்து போனார் இளம்பெண் அன்னா . வேறு வேலைக் குச் செல்லவும் முயற்சி செய்துகொண்டிருந்தார் . இந்தச் சூழலில் தஸ்தா வெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல .... அந்தப் பெண் டைப் செய்து கொண்டே வந்தார் . மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப் போகிறது . காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள் .

                                                      குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால் , அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார் .அந்த நாவல்தான் `குற்றமும் தண் டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார் ; கடனை யும் அடைத்துவிடுகிறார் . அதன்பின் , அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது . அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள் . அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள் .

                                                            தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப் போக , அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார் . அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும் . ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை . அவள் இல்லாமல் வாழ முடிய வில்லை . தஸ்தாவெஸ்கி இறந்து , 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே இருக்கிறாள் . அந்த இருவரின் களங்கமில்லா அன்புதான் , `முதல் மரியாதை' படத்தின் அடிநாதம் . அன்பு என்பது உடலால் வருவதல்ல , மனதால் வருவது .

                                         இந்த உண்மைச் சம்பவம் கதாசிரியர் ஆர். செல்வராஜ் மனதைப் பாதித்தது . அதுதான் அவருடைய எழுத்தில் `முதல் மரியாதை’ படமாக உருவானது ! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் . இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!

                                                         இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்து க்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது . ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜி யையும் ராதாவையும் சிறந்த நடிகர் , நடிகையாகத் தேர்வு செய்தது .கல்யாண மான ஒரு நடுத்தர வயது, ஆள் , இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி !அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு .

                                                        திருப்பிய பக்கமெல்லாம், சிவாஜியின் நடையும் , ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு ! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல் கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது . காதல் தோல்வியடைந்த இளசுகள், மைக் செட் போடும் அண்ண ன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக் கெஞ்சுவார்கள் . ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் பாரதிராஜாவை அண்ணாந்து  பார்க்க வைத்தது . இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த வரலாற்றுச் சுவடு . ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா பட்டபாடு சொல்லி மாளாது ! எல்லோர்வாழ்விலும் காதல் வெற்றி கொள்வதில்லை, எல்லோருக்கும் மனதுக்கேற்ற மணைவி வாய்ப்பதில்லை. சிலர் சில நேரங்களில் இன்னொரு தேவதாஸாக மாறுவதும் உண்டு. என்றும் உங்கள் அன்பில் பேசாலைதாஸ் 




வில்லாதி வில்லன் நம்பியார்!

வில்லாதி வில்லன் நம்பியார்,   பேசாலைதாஸ்  


அப்பாடா, 7 தலைமுறை, 70 ஆண்டுகள்! சினிமா துறையில் வில்லாதி வில்ல னாக வலம் வந்தவர் நம்பியார், யாருமே இவரின் சாதனைகளை னினைத்துக் கூட பார்க்கமுடியாது, உண்மையில் கதாநாயகன், ஒழுக்க சீலர், உத்தமபுத் திரன், மறக்கமுடியாத மாமனிதர் திரையில் பொது மக்கள் அதாவது பெண்கள் இரண்டு பேரை திட்டுவார்கள் ஒன்று வில்லன் நடிகர் நம்பியார் மற்றவர் கவர்ச்சி புயல் காந்த கண் அழகி சில்க் ஸ்மிதா!  அந்த அளவு நம்பியாரை நிஜமாகவே வெறுத் தனர், அந்த அளவுக்கு நம்பியாரின் வில்லத்தனம். யாராவது முன்பு முறைத்துப் பார்த்தால் என்னடா நம்பியார் மாதிரி முறைக்கிறாய் என்று கேட்பதுண்டு. அந்த அளவு வில்லன் பார்வை...

                                                   


எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது, பேசாலை சிறீ பரதன் தியேட்டரில் கலரியில் இருந்து பார்க் கும் போது, மூட்டைக்கடிகளின் தொந் தரவு வேதனைகளை எல்லாம் இந்த நம்பியாரின் சண்டைகளில், மறந்து போய் விடும். நடிக்க வந்து ஐந்து ஆண்டுகளை முடித்து விட்டாலே 'எங்கெங்கோ' போய் விடும் இக்கால த்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத் தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வி்ல்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்கிறார்கள், மரியாதை செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.

அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்தவர்.

மஞ்சேரியிலிருந்து ஊட்டிக்கு ..

கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறன்தவர்தான் நம்பியார். இவருடைய இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப் பெயரையும் சேர்த்து எம்.என். நம்பியார் ஆகி விட்டார்.8 வயதில் ஊட்டியி்ல டீ கடை நடத்தி வந்த தனது அக்காள் கணவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் நம்பியார். அங்கு தங்கி பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். 5ம் வகுப்பு வரை படித்தார்.சகோதரியின் குடும்பம் கஷ்டமான நிலையில் இருப்பதைப் பார்த்த அவர் அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல், 13வது வயதில் சென்னைக்கு வந்தார்.

ஊட்டியலிருந்து நாடகத்திற்கு .. 

சென்னைக்கு வந்த நம்பியாருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது. இதனால், நவாப் ராஜமாணிக்கம் நடத்தி வந்த நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடம்தான் கிடைத்தது. பின்னர் அந்த நிறுவனத்தின் பக்த ராமதாஸ் நாடகம் திரைப்படமாக உருவாகியது.

1935ம் ஆண்டு அந்த நாடகம் தமிழிலும், இந்தியிலும் திரைப்படமானது. நாடக அனுபவத்தை கருத்தில் கொண்டு நம்பியாருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு ..

இப்படித்தான் சினிமாவுக்கு வந்து சேர்ந்தார் நம்பியார். அவருக்கு முதல் படத்தில் கிடைத்த சம்பளம் ரூ. 40.

எத்தனை படங்களில் ஒரு நட்சத்திரம் நடித்திருக்கிறார் என்பது எண்ணிக்கையில் நிகழ்த்தப்படும் சாதனை. அதைப் போலவே ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசம் காட்டி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முதல் சாதனையைப் படைத்தவர், தமிழ் ரசிகர்களின் நித்திரையிலும் பயமுறுத்திய முத்திரை வில்லன் எம்.என்.நம்பியார்.

ஆனால் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்ததும், அதேபோல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்ததும்தான் நினைவுக்கு வரும். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், அந்த நிறுவனத்தின் அதிபரும் இயக்குநருமான டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1950-ல் வெளியாகிப் பெரிய வெற்றிபெற்ற ‘திகம்பரச் சாமியார்’ படத்தில் 12 வேடங்களில் கலக்கினார் நம்பியார்.

சிறு சிறு வேடங்களாக நடிக்கத் தொடங்கிய நம்பியாருக்கு ஆரம்பத்தில் ஹீரோ வேடங்களும் கூட கிடைத்தன. ஆனால் வில்லன் வேடத்தில்தான் அவர் பரிமளித்தார்.இது, எம்.ஜி.ஆருடன் இணைந்த பிறகு பன்மடங்கா பிரகாசிக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் படத்தில் வில்லனா, கூப்பிடு நம்பியாரை என்று கூப்பிடும் அளவுக்கு இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக அமைந்தது.

இருவரும் இணைந்து நடிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு இந்த ஹீரோவும் - வில்லனும் இணைந்தே நடித்து வந்தனர்.

சர்வாதிகாரி படத்தில் நம்பியாரின் வி்ல்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரும், எம்.ஜி.ஆரும் போட்ட கத்திச் சண்டை அப்போது வெகு பிரசித்தம்.தொடர்ந்து தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம் என இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

வெறுக்க வைத்த வில்லத்தனம் .. 

இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக - அதி பயங்கர வில்லனாக - தொடர்ந்து நடித்ததால் நம்பியாரை நிஜமாகவே வில்லனாக நினைத்து விட்டனர் அந்தக் காலத்துப் பெண்கள்.

படம் பார்க்கும்போது நம்பியாரை, எம்.ஜி.ஆர். அடிக்கும் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்குமாம். அதிலிருந்தே மக்கள் எந்த அளவுக்கு நம்பியாரை பார்த்து பயந்தார்கள், கோபமாக இருந்தார்கள் என்பதை உணரலாம்.

இதைத்தான் பின்னாளில் இயக்குநர் வி.சேகர் தயாரித்த நீங்களும் ஹீரோதான் படத்தி்ல ஒரு காட்சியாகவே வைத்தார். அதில், நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும் ஒரு படப்பிடிப்புக்காக கிராமத்திற்கு வருவார்கள்.

அவர்களுக்கு தங்க வீடு கிடைக்காது. ஒவ்வொரு வீடாக ஏறி, இறங்கி வீடு கேட்பார்கள். ஆனால் இவர்தான் எம்.ஜி.ஆருக்கு எதிராக சதி செய்தவர், எனவே வீடு கிடையாது என்று ஒவ்வொருவரும் கூறுவது போல காட்சி அமைத்திருப்பார்கள்.இப்படி தனது வில்லத்தன நடிப்பால் அந்தக் கேரக்டருக்கே ஒரு தனி முத்திரையை உருவாக்கி விட்டவர் நம்பியார். அவரைத் தவிர வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இப்படி ஒரு இமேஜ் இதுவரையிலும் அமையவில்லை, இதற்கு முன்பும் அப்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக எம்.ஜி.ஆருடன், 75 படங்களில் இணைந்து நடித்துள்ளார் நம்பியார்.

சிவாஜிக்கும் வில்லன் ..

எம்.ஜி.ஆரைப் போலவே, சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடித்தவர் நம்பியார். இருவரும் இணைந்து அம்பிகாபதி, உத்தமபுத்திரன், தில்லானா மோகானாம்பாள், திரிசூலம், சிவந்த மண், லட்சுமி கல்யாணம் என ஏராளமான படங்களில் நடித்தனர். சிவாஜிக்குத் தம்பியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நம்பியார். 

அந்தக் காலத்து மும்மூர்த்திகளில் ஒருவரான ஜெமினி கணேசனுடனும் நிறையப் படங்களில் நடித்தவர் நம்பியார்.இந்த மூன்று நடிகர்களின் படங்களிலும் தவறாமல் நம்பியார் இடம் பெறுவது அப்போது வழக்கமாக இருந்தது.

7 தலைமுறையினருடன் .. 

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், அடுத்த தலைமுறையான ரஜினி, கமல், விஜயகாந்த், அவர்களுக்கு அடுத்த தலைமுறையான விஜய் உள்ளிட்டோருடன் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார். மொத்தம் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த படங்கள் ஆயிரத்தைத் தாண்டும். நடிப்பனுபவமோ 70 ஆண்டுகள்.

வில்லத்தனத்தில் கலக்கிய நம்பியார் பின்னர் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களிலும் அசத்த ஆரம்பித்தார்.தூறல் நின்னு போச்சு படம் மூலம் இப்படி டிராக் மாறிய நம்பியார் காமெடியிலும் கலக்கியவர்.நம்பியாரின் மருமகன் தான் நடிகர் சரத் பாபு ஆவார்.

சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தராகவும் மிளிர்ந்தவர். தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் போய் வந்த சாதனை படைத்தவர். இவரைத்தான் சபரிமலைக்குச் செல்லும் திரையுலகினர் குருசாமியாக ஏற்று செயல்பட்டு வந்தனர்.எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, நம்பியார் இருமுடி கட்டிச் செல்லும்போது, எம்.ஜி.ஆர். அனுப்பி வைக்கும் மாலைதான், அவருக்கு முதலில் அணிவிக்கப்படுமாம். அன்புடன் பேசாலைதாஸ்









இயக்குநர் ஸ்ரீதர் முக்கோணக் காதல் கதைகளின் மன்னன்

 முக்கோணக் காதல் கதைகளின் மன்னன் இயக்குநர் ஸ்ரீதர்  பேசாலைதாஸ்




திரைப்பட இயக்குணர் ஸ்ரீதர் பற்றி சினிமா இரசிகர்கள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்கவேண்டும், என் நான் ஆசைப்படுகின்றேன், எனது கிராமம் பேசாலையில் நான்  சிறுவனாக இருந்த போது, பாடசாலை நிதியுதவி காட்சிக்காக ஸ்ரீபரதன் திரை அரங்கில், பாடசாலையில் இருந்தே அழைத்து செல்வார்கள், அதிகமாக ஸ்ரீதரின் படங்களே கண்பிக்கப்பட்டது. இவரின் முதல் படம் 1954 இல் வெளிவந்த இரத்தபாசம், இதுவே இவரது முதல் படம், அன்று தொட்டு இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் காதல் படங்களை தந்து கொண்டு இருந்தவர் இவர். 1991 விக்கரம் நடித்த தந்துவிட்டேன் என்னை வரை சொல்லலாம்!

                                                                     


தமிழ்த் திரைப்படங்களின் பாதையில் திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் C.V. ஸ்ரீதர். பதினேழு பதினெட்டு வயதில், பலருக்கும் திரைப்படத்தை எப்படிப் பார்ப்பது என்ற பயிற்சியே ஏற்பட்டிரு க்காது. அந்தப் பருவத்தில், ஒரு திரைப்படத்துக்கான கதையையே எழுதி முடித்தவர் ஸ்ரீதர். லட்சியவாதி என்னும் பெயரில் கதை ஒன்றை எழுதிய ஸ்ரீதர் அதை எடுத்துக் கொண்டு ஏவிஎம் ஸ்டுடியோ சென்றிருக்கிறார். அப்போதைய திரைப்பட இயக்குநர் ப. நீலகண்டன் அந்தக் கதையை நிராகரித்துவிட்டார். என்றாலும், நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் அதை மேடை நாடகமாக்கினார். பின்னரே, அது ‘ரத்தபாசம்’ (1954) என்னும் பெயரில் திரைப்படமானது. இப்படித்தான் ஸ்ரீதருக்கு முதல் திரை வாய்ப்புக் கிடைத்தது. நாடகம் வழியே சினிமாவுக்கு வந்தபோதும் சினிமா என்னும் ஊடகத்தின் மொழி, காட்சியே என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது. அதுமட்டுமல்ல; நாடகத்தனமான வசனங்களைப் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைச் சாதாரண மனிதர்கள் பேசிக்கொள்ளும் இயல்பான வசன நடைக்கு நகர்த்தினார் அவர்.

AMP

தன் குருவான இயக்குநர் ஸ்ரீதர் பற்றிப் பிரபல இயக்குநர் P.வாசு, “எங்க டைரக்டர் ஸ்ரீதர் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முதல் டிரெண்ட் செட்டர். ஸ்டேட்டிக்காக இருந்த சினிமாவை மூவியாக மாற்றிய அவர் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். முதன்முதலில் புதுமுகங்களை வைத்து முழுப் படம் எடுத்தவர் அவர்தான். முதன்முதலில் காஷ்மீருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் (‘தேன்நிலவு’) சென்றவர் அவர்தான். முதலில் வெளிநாட்டுக்குச் சென்று படமெடுத்ததும் அவர்தான் (‘சிவந்த மண்’). ஒப்பனையே இல்லாமல் அனைவரையும் அப்படியே நடிக்கவைத்தவர் அவர்தான் (’நெஞ்சிருக்கும் வரை’). அவருக்கு நிகராக என்னால் யாரையும் சொல்லிட முடியாது. ஏனெனில், தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்திராத காலத்திலேயே பல வித்தைகளைக் காட்டியிருக்கிறார். 28 நாட்களில் படமெடுத்திருக்கிறார். ஒரே செட்டில் படமெடுத்திருக்கிறார் (’நெஞ்சில் ஓர் ஆலயம்’). இயக்கம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு இளைஞரும் ஸ்ரீதரின் படங்களைப் பார்த்தால் போதும், இயக்கம் என்றால் என்பது பற்றித் தெரிந்துகொள்வார்கள்” என்றெல்லாம் பெருமையாகச் சொல்கிறார். ’மீனவ நண்பன்’ தொடங்கி (பட டைட்டிலில் P. வாசுதேவன்) பல படங்களில் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக P. வாசு பணியாற்றியுள்ளார்.

பி.வாசு எதையும் மிகைபடக் கூறவில்லை. ஏனெனில், ஸ்ரீதரின் தனித்துவம் அதுதான். அவர் எதையும் புதுமையாகக் கையாள ஆசைப்பட்டிருக்கிறார். திரைத்துறைக்குப் பலரை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டுள்ளார். அவர் இயக்கிய முதல் படமான ’கல்யாண பரிசு’ (1959) தொடங்கி இறுதியாக இயக்கிய ’தந்துவிட்டேன் என்னை’ வரை அவர் பரிசோதனை முயற்சிகளை நிறுத்தவேயில்லை. முக்கோணக் காதல் கதையான, வெள்ளிவிழா கண்ட ’கல்யாண பரிசு’ படத்தில் நாயகியான வசந்தி, சைக்கிளில் சென்று கல்லூரியில் படித்துவருவாள். நாயகியை அழகுப் பதுமையாக மட்டும் பயன்படுத்தாத போக்கை முதல் படத்திலேயே வெளிப்படுத்தியவர் ஸ்ரீதர். எழுத்தாளர் பைரவனாக வேடமேற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றுவரை மக்கள் மனத்தில் நிலைத்துள்ளன. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட’ பாடல் தமிழ்நாட்டின் முக்கியமான தீபாவளிப் பாடலாக இன்றுவரை உள்ளது. ‘காதலிலே தோல்வியுற்றான்’ பாடல் தமிழ் தேவதாஸ்களின் ஒருமித்த குரலாகவே வெளிப்பட்டது. இவ்வளவுக்கும் அதுவரை வெறுமனே பாடகராக மட்டுமே இருந்த வந்த ஏ.எம்.ராஜா முதன்முதலில் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

கல்யாண பரிசு’ படத்தைத் தனது பத்து வயதில் பார்த்ததாக நினைவுகூரும் நடிகர் ராஜேஷ், ”நான் அவரது இயக்கத்தில் ’ஆலய தீபம்’, யாரோ எழுதிய கவிதை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் அவரிடம் விவாதிக்கலாம். தான் ஒரு பெரிய இயக்குநர் என்பதுபோல் நடந்துகொள்ள மாட்டார். அவரது கடைசிக் காலம் வரை அவருடன் பழகியிருக்கிறேன். மிக நல்ல மனிதர். அவரது புகழ் தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரையிலும் இருக்கும்” என்று ஸ்ரீதர் குறித்துப் பெருமிதத்துடன் பேசுகிறார்.

ஸ்ரீதர் உருவாக்கிய ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ (1962) படத்தில் பிரபல ஹாலிவுட் படமான ’காசாப்ளாங்கா’வின் சாயல் தென்படும். ஆனாலும், ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ முழுமையான தமிழ்ப் படம். இதுவும் ஒரு முக்கோணக் காதல் கதையே. கணவன் உயிருக்குப் போராடுகிறான். அவனுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர் அவளுடைய முன்னாள் காதலன். ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்கிறார். அதுதான் படத்தின் உச்சகட்டக் காட்சி. யாருமே எதிர்பார்த்திராத முடிவைக் கொடுத்து ஸ்ரீதர் தான் யார் என்பதை நிரூபித்திருப்பார். ஏ.எல்.ராகவன் குரலில் ஒலிக்கும் இப்படத்தின் ’எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் சாகாவரம் பெற்றது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவை நாயகியாக அறிமுகப்படுத்திய ’வெண்ணிற ஆடை’ (1965) படமும் ஒரு முக்கோணக் காதல் கதைதான். மனோதத்துவ நிபுணரான சந்த்ரு, கீதாவைக் காதலிக்கிறார். கீதாவும் சந்த்ருவும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளனர். அப்போது, கொடைக்கானலில் வாழும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள பணக்காரப் பெண்ணான ஷோபாவைக் குணப்படுத்தும் பணிக்காக சந்த்ரு அங்கே செல்கிறான். குணமடைந்த ஷோபா சந்த்ருவைக் காதலிக்கிறாள். இப்போது சந்த்ரு அந்தக் காதலை மறுத்தால் அவளது மனநிலை மீண்டும் பாதிக்கப்பட்டுவிடும், ஆனால் காதலை ஏற்றுக்கொண்டாலோ அவருடைய காதலி கீதாவுக்குப் பித்துப் பிடித்துவிடும். இதற்கான முடிவை ஸ்ரீதர் தன் பாணியில் தந்திருப்பார், அதுதான் 'வெண்ணிற ஆடை'. 1962-ல் வெளியான டேவிட் அண்ட் லிசா எனும் அமெரிக்கப் படத்தின் தாக்கத்தில் இந்தப் படத்தை ஸ்ரீதர் உருவாக்கியுள்ளார்.

இதற்கு அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலத்தில் ஸ்ரீதர் உருவாக்கிய ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ (1978) படமும்கூட முக்கோணக் காதல் கதைதான். பத்மாவும் பிரபுவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். பத்மாவின் தோழி கைம்பெண்ணான ஜெயந்தி. பிரபுவின் நண்பன் முரளி. முரளியின் அலுவலகத்தில் பத்மா பணிசெய்கிறாள். கைம்பெண்ணான ஜெயந்திக்கும் இளம்வயதுதான். இவர்களது இளமை ஊஞ்சலாடியதால் ஏற்படும் உணர்ச்சிக் குழப்பங்களும் உறவுச் சிக்கல்களுமே அந்தப் படம். இதற்கு அடுத்த ஆண்டே ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என ஒரு படமெடுத்தார் ஸ்ரீதர். இதில் முக்கோணக் காதல் கதைக்கு உலகப் புகழ்பெற்ற ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளின் தாக்கம் காணப்படும். இறுதியாக அவர் விக்ரம், ரோகிணி ஆகியோரை வைத்து உருவாக்கிய ’தந்துவிட்டேன் என்னை’யும் ஒரு முக்கோணக் காதல் கதைதான்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், மோகன் என இரண்டு தலைமுறையில் ஆதிக்கம் செலுத்திய நாயகர்களை வைத்தும் படம் எடுத்திருக்கிறார். அவற்றில் பல வெற்றிகளைக் குவித்துள்ளார் என்பதிலிருந்தே பொழுதுபோக்கு அம்சத்தில் அவர் எந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார் என்பது புலப்படும். பாடல்களுக்காகவே ஒரு வருடம் ஓடிய ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தின் அடிப்படைக் கதையை ஒரு வரிக்குள் அடக்கிவிடலாம். ஒரு படம் போல் மற்றொரு படம் அமைந்துவிடக் கூடாது என்று அவர் விரும்பினாலும் அவரது பெரும்பாலான படங்கள் வேலை, காதல், கல்யாணம் என்ற மூன்று தளத்திலேயே பரவிப் படர்ந்துள்ளன.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சாதனையாளர்களில் பலரைத் தமிழ் சினிமா உலகம் சரியாகக் கௌரவிக்கவில்லை. அதில் குறிப்பிடத் தகுந்த இயக்குநர் ஸ்ரீதர். நவீன சினிமாவை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு ஸ்ரீதருக்கு உண்டு. அப்படியான மாபெரும் திறமைசாலியை நாம் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன். அது உண்மையா என்பதைக் காலம்தான் கூற வேண்டும்.

1959-ல் அவர் உருவாக்கிய ‘கல்யாண பரிசு’ படத்தில் இறுதிக் காட்சி காதலன் ஒருவன் காதலியின் திருமணத்தைப் பார்ப்பது. 1991-ல் அவர் படமாக்கிய ‘தந்துவிட்டேன் என்னை’யிலும் இறுதிக் காட்சி காதலன் ஒருவன் தன் காதலியின் திருமணத்தைப் பார்ப்பதுதான். முதல் படத்தில் அட்சதையைப் பெறுபவர் ஜெமினி எனில் இறுதிப் படத்தில் அட்சதை பெறும் நாயகன் விக்ரம். இரண்டுக்குமிடையே முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. ஒரு முழு சுற்று ஓடி முடித்துவிட்டார் ஸ்ரீதர் அன்புடன் பேசாலைதாஸ்

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...