செவ்வாய், 15 டிசம்பர், 2020

ஆசையே அலைபோல,,,,,,,, பேசாலைதாஸ்

 ஆசையே அலைபோல,,,,,,,, பேசாலைதாஸ் 


தமிழில் 1958ஆம் ஆண்டு கே.வி. மகாதேவன் இசையமைப்பில் வெளியான "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஏகே வேலன் இயக்கிய முதல் படம்.  அதே படம், இந்தியில் ஏவிஎம்  தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சித்ர குப்தா இசையில் Barkha (1960) என்று இந்தியில் வெளியானது, வெளியான அதே வருடமே தெலுங்கில் கண்ட சாலா இசையில் Manchi Manasuku Manchi Rojulu என்று வெளியாகி அசத்தியது. இந்த மும்மொழி தகவல் எதற்கென் றால் படத்தின் கதை ஒருமிக்கையில் பாடல்க ளும் அவற்றுக்கான situation சிச்சுவேஷன்களும் மாறாமல் அப்படியே நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் தான். அந்த வகையில் தமிழில் இருந்த பெருவாரிப் பாடல் சூழல்கள் அப்ப டியே தெலுங்கு இந்தி என மொழிகள் கடந்தன. இந்த பாடல் தமிழில் அமை ந்தது போல் குரல், இசை, எடுத்தவிதம் எல்லாமல் சற்றும் பிசகாமல், அப்ப டியே மாற்று மொழிகளிலும் எடுக்கப்பட்டதே இந்த பாடல், அதுதான் " ஆசையே அலைபோல" என்ற பாடல்!

திருச்சி லோகநாதனின் குரல் இப்பாடலுக்கு மெருகூட்டுகின்றது. தற் போது கானா பாலாவின் பாடல்களில் ஊடுருவும் தனித்துவமான் சோக இராகம் இதற்குள்ளும் சுரம் பிரிக்கின்றது. திருச்சி லோகநாதனின் அளவு க்குள் அடங்காத மேற்சுரக் குரல் எப்போதும் திமிறி அடிக்கிற காற்றை போல அந்தந்த பாடலுக்கு உள்ளேயும் வெளியேயுமாக தன் குரலால் ஒரு உலகம் செய்து பழகும் கனகாத்திர குரல் லோகநாதனுடையது. தன் குரல் என்னவாக ஒலிக்க வேண்டும் என்பதை தனது ஆழ்மனதில் இருந்தே தீர் மானத்தின்படி, பாடத்தெரிந்த பெருங்கலைஞர் அவர். அவரது பொன்வை ரக் குரலுக்கு இந்த பாடல் ஒரு சகலகால சாட்சியம். கேவி மகாதேவன் தன் ஜென்மஜென்ம மனங்களிலிருந்தெல்லாம் அகழ்ந்தெடுத்த மாய இசை தோரணமாக இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் கவி ஆசான் கவியரசர் கண்ணதாசன்! 1958 ஆம் ஆண்டு வெளியான படம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், 62 வருடங்க ளுக்கு முன் எழுதப்பட்ட பாடல், சட்சாத் நான் பிறந்ததும் அதே வருடம் தான்! இதில் எழுதுகிற பல வரிகள் அந்த காலகட்டத்தில் உலக அளவில் ஏதாவதொரு மொழியில் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியாது. எழுதப்பட்டிருக்கவில்லை என்று சொல்லவே ப்ரியம். இந்தஒரு வரிக்கு வயது 62. இன்றளவும் புத்தம் புதியதாக இருக்கிறது. இன்னும் இருக்க போகிறது. ஒரு புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு சிந்தித்தால் அதன் பொருள் வானளவு விரிந்து செல்வது வெறும் புகழ்ச்சியல்ல.

"இருப்பது கனவு" இந்த ஒரு வரியை எடுத்து வைத்து கொண்டு எத்தனை பேசினா லும் பேச்சும் தீரலாம் பொழுதும் தீரலாம் பொருள் தீராது.இதன் மேலான கிறக்கமய க்கம் தீரவே தீராது. ஆசையே அலைபோலே நாமெல் லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே... போலே என்ற உருவகத்தை வைத்து கொண்டு எத்தனை பெரிய கலை கலவரம் செய்கிறார் கவிஞர்? பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! அதிசயம் என்ற சொல்லின் அபூர்வம் அத்தனையையும் நீக்கி விட்டு அதனை ஒரு புழக்கச் சொல்லாக மாற்றிவைக்கும் வல்லமை கவிஞருக்கு மாத்திரமே உண்டு.

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்..?இதில் வரக் கூடிய பாதையை என்ற சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான இன்னொ ன்றை வரவழைத்து பார்த்தால் தெரியவரும் அந்தச் சொல்லின் ஓர்மை பெருமிதம். இன்னொன்று இல்லாத ஒற்றையின் ஜாலவருகை அது. வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் என்ற ஒரு வரி மனித வாழ்வின் நிலையாமையை உருவமாற்றத்தை நித்தம் நித்தம் ஒரே ஒரு திசையிருளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கக் கூடிய பல்வேறு கதைகளை உடல் என்னும் ஒரு பண்டம் வாழ்வென்னும் கலய நீர் தன் மீது பட்டுப் பட்டு தன் உரு அழிந்து இன்னொன்றான வண்ணம் தன் பயணத்தை தொடர்ந்து வருவதை எல்லாம் ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்திருக்கிறது எத்தனை வளம்? இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா எனும் போது மிஞ்சுவது அதே இருளின் இன்னொரு அடர்வடிவம் தான் இல்லையா..? முதுமையே சுகமா என்று விளிப்பது ஆளற்ற வனாந்திர வெளியையா அல்லது அதற்கு தான் பதில் இருக்கிறதா..?

இங்கே இரண்டாம் சரணத்தை இப்படி முடிப்பது இன்னும் பேரழகல்லவா...

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

இந்த முறை பாதை என்ற சொல் அல்ல போகும் என்ற சொல்லை உற்று நோக்கலாம்... காலத்தின் பாதையில் போவது தான் வாழ்வது அதுவே ஆழ்வது அழிவது முடிவது எல்லாமே இல்லையா..?

இந்தப் பாடலின் சித்து வேலை இதன் மூன்றாம் சரணம் தான்.

சூறைக் காற்று வீசினால் தோணி ஓட்டம் மேவுமோ

வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்..?

இந்தப் பாடல் கையாண்டிருக்கிற வரவு செலவு இரண்டும் தெரிவதற்குள் கனவு நிறைந்துவிடும். காலம் கலைந்து விடும் கணக்கு புரிந்து விடும் அவ்வளவையும் யார் காணுவாரோ அவர் காணுவார், அவர்தான் இறைவன். தத்துவம், லெளகீகம், நிலையாமை,  மாயம், கனவு, அதற்குள் ஒரு சோகம் இப்படியே மன விசாலம் விரிந்து கொண்டே செல்கின்றது. இந்த பாடலை நான் கேட்கும் ஒவ்வொரு தடவை வையும், மாயமான இந்த உலகம், நிரந்தரமற்ற வாழ்வு, அதன் உணர்வு வடிவம் எல்லாமே அர்த்தமற்றதாக தோன்றும், இளமை மீண்டும் வருமா? ஏக்கம் மனதை வாட்டும். கிடைக்கின்ற இன்பத்தை அப்போதே அனுபவித்துவிடவேண்டும் போல தோன்றும், அவை திரும்பி வருமா? என்ற கவலை மனதை ஆட்கொள்ளும்! மொத்தத்தில் இது பாடலல்ல, வாழ்வே மாயம் சுத்த சூனியம் என்று போதனை தருகிற வாழ்க்கை பாடம்! அன்புடன் பேசாலைதாஸ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...