திங்கள், 19 அக்டோபர், 2020

ஸ்ரீவித்யா அவர்களது நினைவு தினம்(19 ஐப்பசி)

 ஸ்ரீவித்யா அவர்களது நினைவு தினம்(19 ஐப்பசி) பேசாலைதாஸ்


தன் ஜி4 காந்த கண்விழி வீச்சில் என் உள் ளத்தையும், பலரது இதையைத்தையும் தன்னோடு இணைத்துக்கொண்ட விழிய ழகி நடிகை ஸ்ரீவித்யா! இன்று திரைப்பட த்துறையில் தனது அழகிய முகத்தாலும், , கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா அவர்களது நினைவு தினமாகும்
1970 தொட்டு 2000 வரை சுமார் 30 ஆண்டுகளாக தனது மிகத் துல்லியமான தேர்ந்த நடிப்பாலும், அழகு வதனத்தாலும், பேசும் விழிகளாலும், தென்னகத்திரை உலகையே தன் வசப்படுத்தி ரசிகர்களை மெய் மறக்க வைத்திருந்த நடிகை ஸ்ரீவித்யா, கர்னாடக இசையை தன் தேன் குரலால் உலகம் முழுவதும் பரப்பிய தேவகானக் குயில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரிக்கும், பல குரல் வேந்தனாய்த் திகழ்ந்த திரு விகடம் கிருஷ்ன மூர்த்திக்கும் 1953ல் செல்வ மகளாய்ப் பிறந்து. செல்ல மகளாயும் திகழ்ந்தவர்
.தாயைப் போலவே நல்ல குரல் வளம் கொண்டவரான ஸ்ரீவித்யா நடனத்திலும் சிறந்து விளங்கினார். தனது 13வது வயதில் நடிப்புக் களத்தில் இறங்கினார் ஸ்ரீவித்யா.
சகல கலைகளிலும் பயிற்சியும் தேற்சியும் பெற்று கலைமகளின் திருவருட்ச் செல்வியாகத் திகழ்ந்த இவருக்கு பக்தி இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய #திருவருள் செல்வர் என்ற அற்புதப் படைப்பே சிறப்பாக நாட்டியமாடி நடிக்கும் வாய்ப்பை முதல் முதலாக வழங்கியது.
அதன்மூலம் வெற்றி என்ற மூன்றெழுத்தைப் பெற்ற இவருக்கு அடுத்ததாக அமைந்த வாய்ப்போ நடிகர் ரவிச்சந்திரன் செல்வி ஜெயலலிதாவுடனான #மூன்றெழுத்து திரைப்படம். பிறகு தொடங்கியது திரைப்படத் துறையிலான இவரது புலிப் பாய்ச்சலான வேகம்.
நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் இவருக்குமுண்டு. தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர்.
ஒரு சராசரி கதாநாயகியைவிட குறைவான வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா. அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில்.
பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.
கமல், ஜெய்சங்கர், விஜயக்குமார் உள்ளிட்ட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன்ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார் . இவர் நடித்ததில் புகழ் பெற்றவை: அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், இமயம், என பல படங்கள் . தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ளார் . பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...