இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் பேசாலைதாஸ்
இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்ப வனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித் தார் அசோகன். ஒரு வில்ல னாக, கதாநாயகனாக, குண சித்திர நடிகனாக, நகைச்சுவை நடிகனாக பல்வேறு பாத்திரங் களில், பரினாமித்தவர் தான் அசோகன். அவருடைய சொந்த பெயரான "அந்தோணி" ஐ இயக்குனர் T .R . ராமண்ணா தான் அவருடைய மணப்பந்தல் என்ற திரைப்படத்தில் "அசோகன்" என்று பெயரை மாற்றினார்.
. அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். தனது பட்ட படிப்பை முடித்து சிறு சிறு நாடங்களின் நடித்துக்கொண்டிருந்தார்
முதன்முதலில் ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் சோழமன்னர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று நடித்திருந்தார்.
1960 மற்றும் 1970 களில் அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், பாத காணிக்கை , ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.
1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) “காட்டு ராணி”.
இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன்- வசந்தா நடித்திருந்தனர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.
அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படம் தயாரித்து வெளியிட்டார்
.
இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
இவர் குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி,கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அசோகனை னினைவுபடுத்தும் பாடல்கள் இதோ! அன்புடன் பேசாலைதாஸ்
-
இறந்தவனை சுமந்தவனும்
உடலுக்கு உயிர் காவல்
கன்னிபருவமவள்
ஆடிய ஆட்டமென்ன
பாரடி கண்ணே கொஞ்சம்
ஓராயிரம் பார்வையிலே
எண்ணபறவை சிறகடித்து
மனம் என்னும் மேடையின் மேலே
மனம் கனிவான
சத்தியம் இது சத்தியம்
வா அருகில் வா
என்னென்னவோ நான் நினைத்தேன்
புன்னகையில் ஒரு பொருள்
மல்லிகை ஹோய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக