சனி, 19 டிசம்பர், 2020

0027சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்! பேசாலைதாஸ்

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்! பேசாலைதாஸ்


என் கவி ஆசானின் கவித்திறனை சொல்லிக்கொண்டே போகலாம், அது ஒரு அலாதியான தனிச்சுவை, சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய், என்றபாடல் என் வாழ்வில் மறக்கமுடி யாதா பாடல், அந்த பாடல் உருவான சூழ்நிலை கவிஞர் கண்ணதாஸனுக்கு ஏற்பட்டது போலவே எனக்கும் ஏற்பட் டது, முதலில் கவிஞருக்கு நிகழ்ந்ததை கூறிக்கொண்டு எனது சமாச்சாரத்து வருகின்றேன். 


மக்கள் திலகம் எம்ஜீயாருக்கும் கண்ணதாசனுக்கும், நட்பு சுமுகமாய் இரு ந்த காலம்; கண்ணதாசன் கொஞ்சம் பிஸியான நேரம். MGR க்கு பாட்டு எழுத உண் மையாகவே நேரம் இல்லை என்று தவிர்த்து வந்தார். அப்போது கவிஞரை காண வந்த MGR . தனக்கு பாட்டு எழுதித்தராது ,கவிஞர் அங்கி ருந்து போகமுடி யாது என்று சொல்லி, அவர் இருந்த அறைக்கதவை பூட்டி விட்டாராம். ஜன்னல் வெளிப்பக்கம் இருந்து காவிக்கொத்தை காட்டி, பாடல் எழுதித்தராது இங்கிரு ந்து நீங்கள் போக முடியாது என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார். 

கவிஞரும்  சிரித்துக்கொண்டே உடனே  இரண்டு வரிகள் எழுதினாராம் . அது "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய், (MGR பொன்னிற வண்ணம் உள்ள வர் ) கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்.." என்று ... இதை வெளிப்பு றம் இருந்து பார்த்த MGR உள்ளேவந்து, தான் கதவை பூட்டவில்லை, சும்மா சாத்திவிட்டுத்தான் சென்றேன் என்று சமாதானம் சொன்னாராம். 


கவிஞரும் பாடலை திரைப்படத்திற்கு என்று எழுதித் தந்தாலும், பல வரிகள், இந்தப் பாட லில் கவிஞருக்கு, MGR க்கும் பொருந்தும்படிதான் இருந்தது   ."இன்பம் ,துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையம் ஒன்றே, எளிமை ,பெருமை எதுவந்தாலும் இருவரும் வழியும் ஒன்றே .."  போன்ற வரிகளை  குறிப்பாக சொல்லலாம் . அவர்  எழுதிய வரிகள் இதுபோல வேறு வேறு சூழலுக்கும் பொருந்தும் வண் ணம் பாடல் புனைந்து கொடுத்ததுதான் அவரின் தனித்தி றமை. காலங்கள் பல கடந்தும்  இன்றும் அந்தப் பாடல்கள் எல்லாம் நம் உதடு களில் ,எண்ணங்களில் இருப்பதே இதற்கு சாட்சி!


இனி சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்,,, என்ற பாடலுக்கும் எனக் கும் இடையில் உள்ள தொடர்பை சொல்லாம் என நினைக்கின்றேன். தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு தளபதியாகவும், மன்னார் தளபதியாகவும் இரு ந்த விக்டர் அவர்கள், 1983 இல். திருநெல்வேலியில் புலிகள் நடத்திய  குண்டுத் தாக்குதலில், விக்டர் அவர்களும் பங்குபற்றியது, எப்படியோ இராணுவத்துக்கு கசிந்து விட்டது, அந்த காலகட்டத்தில், விக்டரின் தம்பி சுதாகர் பேராதனை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார், அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள், நான் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்துக் கொண்டிருந்தேன், 


ஒரு நாள் இராணுவம் திட்டமிட்ட படி விக்டரின் குடுபத்துக்கு நெருக்கமான மன் னார் பல்கலைகழக மாணவர்களை இரவோடு இரவாக கைது செய்து, தள்ளாடி இராணுவமுகாமில் அடைத்தது. சிறையில் பல நாட்கள் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, இதற்குள் எங்களை காவல் செய்த இராணுவவீரன் சுதாருடன் நட்பாகிவிட்டான். எப்போதும் அவன் எங்களை பார்த்து சிரிப்பான், இந்த நேரத் தில் சுதாகர், சிரித்து சிரித்து என்னை சிறையில் வைத்தாய் என்று பாடுவார், அவனுக்கு பயம் என்றதே கிடையாது, ஆனால் எனக்கோ எப்போதும் மரணபய மாக இருந்தது, இன்றுவரை இந்த பாடலையும், மாவீரன் சுதாகரையும் மறக் கவே முடியாது.

சூழலுக்கு ஏற்ப கவிதை வடிப்பதிலும், அந்த கவிவரிகளுக்குள், கதாபாத்திர த்தை திணிப்பதும், கவிஞருக்கு கைவந்த கலை, வாலி வருவதற்கு முன்னும், அரசியலில் MGR அவர்களோடு   முரண்பாடு வருவதற்கு முற்பட்ட கால கட்டத் தில் , கண்ணதாசன், MGR அவர்களுக்கு  எழுதியது போல திரைப்பாடல் யாரும் எழுதியதில்லை .


"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் " என்ற பாடலும்  "நான்கு பேர்கள் போற்ற வும் நாடு உன்னை வாழ்த்தவும் " இரண்டும் வேட்டைக்காரன் படத்தில் 

"உலகம் பிறந்தது எனக்காக -அதில் -குயில்கள் பாடும் கலைக்கூடம் 

கொண்டது எனது அரசாங்கம் '- படம்  பாசம் 'அச்சம் என்பது மடமையடா ' படம் மன்னாதி மன்னன் MGR க்கு கண்ணதாசன் மேல் அளப்பரிய அன்பும் , மரியா தையும் உண்டு. அரசவைக்கவிஞர் ஆக்கி அழகு பார்த்தது  இதனால்தான்.  கண்ணதாசனை ரசிப்போம்  மகிழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...