காதலுக்கு முதல் மரியாதை பேசாலைதாஸ்
தமிழ் திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு படம், மன உணர்வுகளின் வித்தியாசமான ஒரு படம். கிட்டதட்ட தமிழ் கலாச்சார சிக்க லின் இன்னொரு பிரதிபிம்பம். தமிழ் சமூக த்தில் நடக்கும் திருமணங்கள் உண்மை யான இதய ஆசைகளை பிரதிபலித்து, நடப்பதில்லை. தமிழ் சமூகத்தில் நடக்கும் காதலும் அப்படித்தான் என்பது எனது கரு த்து. காதல், திருமணங்களில், சாதி சமயம், ஊர்,உறவு,பந்தம்,பாசம்,கலாச்சரம்,மொழி இப்படியான சிக்கல்களை ஊடறுத்து வருவ தால். இந்த காதல்,கல்யாணம் எல்லாம் இத யங்கள் மொழி உணர்வுகளினால் இயல்பாக வருவதில்லை. எல்லோருடைய திருமணங்க ளில் இந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கின் றது. அப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை யால் ஒருத்திக்கு வாழ்க்கைப்பட்டு, பொருத்தமான துணையின்றி ஏக்கத்தில் வாழும் ஒரு நடுத்தர ஆணின் ஏக்க உணர்வுகள் தான் முதல் மரியாதை, அது காதலி ராதாவின் மரியா தையாக திரையில் பளிச்சிடுகின்றது," எனக்கொரு தாய்மடி கிடைக் குமா?" என்ற சிவாஜியின் ஏக்கப்பாடலாக, வைரமுத்துவின் வரிகளாக காதில் நுழைந்து, இதயத்தை நெருடவைக்கின்றது.
உலகத்தின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான தஸ்தாவெஸ்கி ! இவர் கதையை வைத்து முதல் மரியாதை படத்திற்கான கரு கதாசிரியர் ஆர். செல்வராஜ் மூளையில் உதித்திருக்கி ன்றது என என்னை சிந்திக்கவைக்கின்றது. தஸ்தாவெஸ்கி பற்றி இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். 'குற்றமும் தண்டனையும்', 'கரமசோவ் சகோதர ர்கள்’ என்று தஸ்தாவெஸ்கி எழுதிய எல்லாம் இன்றும் கொண்டாடப்படும் ஆகச் சிறந்த படைப்புகள் . அரசைக் கடுமையாக எதிர்த்துஎழுதக் கூடியவர் தஸ்தாவெஸ்கி . அவர் வறுமையில் வாடினாலும் அரசை எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் . எனவே அவருக்கு மரண தண்டனையை விதித்து அரசு உத்தரவிட்டது.
தூக்குமேடைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட இன்னும் மூன்று நாட்களே இருந்தன . அவருடைய எழுத்தை வாசிக்கும் ஆதரவாளர்கள் சிலர் அதிகார மையங்களில் இருந்தனர் .எனவே, அரசிடம் 'அவரை ஒருமுறை மன்னித்துவிடலாம்’ என்று கோரிக்கை வைத்தார்கள் . அது ஏற்கப்படவில்லை .பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கெனச் சில விதிமுறைகள் இருந்தன . அதில் முக்கியமானது கைதியின் உடல் எடை குறையக் கூடாது.. எடை குறைந்தால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிடும் .அப்படியாக , தூக்கிலிடும் நாளுக்கு முன்பாக தஸ்தாவெஸ்கியின் எடையைப் பார்த்தபோது , அவர் எடை குறைந்திருந்தார் . அதனால் , அவர் தூக்கிலிடப்படவில்லை . பின்னர் , அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலையானார் .
அதன் பிறகு மீண்டும் அவர் கடனால் கைதாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார் . கடனால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க ...... மூன்று மாதங்களுக்குள் அவர் ஒரு நாவலை எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றத் தரப்பில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது . தஸ்தாவெஸ்கி அப்போது ஓர் உதவியாளர் மட்டும் தேவை என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் . அவருக்கு அன்னா என்கிற இளம்பெண்ணை உதவியாளராக அனுப்பி வைத்தனர் .
அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியை தொடக்கத்தில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை . 'என்னடா ஒரு கிழவன்கிட்டே வந்து மாட்டி க்கிட்டோமே ..’ என்று நொந்து போனார் இளம்பெண் அன்னா . வேறு வேலைக் குச் செல்லவும் முயற்சி செய்துகொண்டிருந்தார் . இந்தச் சூழலில் தஸ்தா வெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல .... அந்தப் பெண் டைப் செய்து கொண்டே வந்தார் . மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப் போகிறது . காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள் .
குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால் , அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார் .அந்த நாவல்தான் `குற்றமும் தண் டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார் ; கடனை யும் அடைத்துவிடுகிறார் . அதன்பின் , அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது . அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள் . அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள் .
தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப் போக , அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார் . அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும் . ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை . அவள் இல்லாமல் வாழ முடிய வில்லை . தஸ்தாவெஸ்கி இறந்து , 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே இருக்கிறாள் . அந்த இருவரின் களங்கமில்லா அன்புதான் , `முதல் மரியாதை' படத்தின் அடிநாதம் . அன்பு என்பது உடலால் வருவதல்ல , மனதால் வருவது .
இந்த உண்மைச் சம்பவம் கதாசிரியர் ஆர். செல்வராஜ் மனதைப் பாதித்தது . அதுதான் அவருடைய எழுத்தில் `முதல் மரியாதை’ படமாக உருவானது ! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் . இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!
இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்து க்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது . ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜி யையும் ராதாவையும் சிறந்த நடிகர் , நடிகையாகத் தேர்வு செய்தது .கல்யாண மான ஒரு நடுத்தர வயது, ஆள் , இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி !அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு .
திருப்பிய பக்கமெல்லாம், சிவாஜியின் நடையும் , ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு ! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல் கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது . காதல் தோல்வியடைந்த இளசுகள், மைக் செட் போடும் அண்ண ன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக் கெஞ்சுவார்கள் . ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் பாரதிராஜாவை அண்ணாந்து பார்க்க வைத்தது . இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த வரலாற்றுச் சுவடு . ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா பட்டபாடு சொல்லி மாளாது ! எல்லோர்வாழ்விலும் காதல் வெற்றி கொள்வதில்லை, எல்லோருக்கும் மனதுக்கேற்ற மணைவி வாய்ப்பதில்லை. சிலர் சில நேரங்களில் இன்னொரு தேவதாஸாக மாறுவதும் உண்டு. என்றும் உங்கள் அன்பில் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக