சனி, 24 அக்டோபர், 2020

நானாக நான் இல்லை

 நானாக நான் இல்லை   பேசாலைதாஸ்

                      நானாக நான் இல்லை தாயே என்ற பாடல் கமலஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் வருகி ன்றது, ஒரு தாய்க்காக பாடும் பாடல் அது, அந்தபாடலை கொஞ்சம் சிலா கிப்போமா? கவிஞர் எடுத்த எடுப்பிலே நானாக நான் இல்லை என்று தொடங் குகின்றார். வாலியின் வரிகள் சில வேளை நம்மை அசரவைக்கின்றது, சில கனம் நம்மை தத்துவ தேடலுக்கு திசை காட்டி செல்கின்றது. நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா? இல்லை என் பிள்ளை என்னைக்கேட்டு பிறந்தானா? என்று நம்மை நாமே கேள்வி கேட்கும் பொழுது விடையாகவருவது, நான் ஆக, நான் காரனம் இல்லை என்பதை சொல் சுருக்க சித்து விளையாட்டில் நானாக நான் இல்லை தாயே! என்று வருகின்றது.


இந்த பாடலைப்பற்றி கவிஞர் யுகபாரதி சொன்ன சில விடயங்கள் மனதில் வந்து போகின்றது. ஒருபாடலைப் பாடும்போது கிடைக்கும் உந்துதலும் உணர்வெ ழுச்சியும் ஏன் தொழில்முறைப் பாடகர்கள் பாடும்போது கிடைப்பதில்லை என்பது யோசனைக்குரியது. “நானாக நானில்லை தாயே” என்ற “தூங்காதே தம்பி தூங் காதே” பாடலை இளையராஜாவும் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் தனித்தனியே பாடியிருக்கின்றனர். இரண்டுபேர் பாடியதில் இளையராஜாவின் உச்சரிப்பில் வெளிப்படும் மென்சோகம் ஈர்ப்புடையது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் தவறாக உச்சரித்துப் பாடுபவரல்லர். இளையராஜா வழங்கிய ஸ்வரக் குறிப்புகளை வாங்கிப் பாடுபவர். வாங்கிப் பாடுவதற்கும் உள்ளிருந்து பாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தைத்தான் மென்சோகம் என்று சொல்லியிருக்கிறேன். என்கின்றார் யுகபாரதி,


உண்மைதான், படைப்புகள் ஒரு மனிதனின் உள்ளத்து உணர்வோடு இணைந்து வரும் போது, அதன் கணம் சற்று வித்தியாசமானது. அது இசையாக இருந்தல் என்ன சாதாரண உரையாடல்களாக இருந்தால் என்ன, உள்ளத்தின் உணர்வுகளோடு வெளிவரும் போது, அதன் ஈப்பும் காந்தமாக மனித மனங்களை கவரும், இனி பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...