வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

0110 அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் பேசாலைதாஸ்


அசலும் நகலும் பாகம் 4 
 
                                                          இந்த பகுதியில் சகோதரி வெரோனா ஷர்மிளா, தேன் தமிழ் ஓசைக்கு அனுப்பியுள்ள பாடல்தான், அழகின் காலடியில் அமைதி காணவந்தேன் என்ற பாடல், இந்த பாடலின் அசல் நகல் இவை களை நாம் கவனிப்போம் வாருங்கள், தாவிப்பாயுங்கள் தேன் தமிழ் தடாகம் என்ற இசை இன்பத்தடாக த்தில்!  இந்தப்பாடல் இடம் பெற்ற படம் 1970  வெளிவந்த சிநேகிதி என்றபடம், ஜெமினி,ரவிச்சந்திரன் மற்றும் சரோஜாதேவி இவர்கள் நடிப்பில் வெளிவந்த படம். அந்த படத்தில் வெளி வந்த பாடல்தான் அழகின் காலடியில் அமைதி காணவந்தேன். இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு, வரிவடிவம் வாலி, பாடியவர் அபிமான பாடகர் சௌந்தரராஜன் 
இந்த பாடலை நீங்கள் யூடியூபில் காணமுடியாது, எமது பிரத்தியேக சேமிப்பு கிடங்கில் இருந்து, எடுத்து தருகின்றோம். முதலில் பாடலை எழுதிக் கொண்டு, பின்னர் பார்வை இடுங்கள்.

அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் 
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஒரு பொழுதேனும் துயரமில்லாத
உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும்
நினைவுகளாலே துடித்தவன் நெஞ்சை
மயங்கிட வைத்தால் நிம்மதி தோன்றும்
நிம்மதி தோன்றும் !நிம்மதி தோன்றும !
எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ
எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ
அந்தந்த இடத்தில் அடைக்கலம் வேண்டுகின்கிறேன்

அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்.....
இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை
கொடுத்தவன் கொடுத்தான் வேறொரு துணையை
மணவறைக் கோலம் தனியறைப்பாடல்
மறந்திட வந்தேன் மனம் விரும்பாமல்
மனம் விரும்பாமல் ! மனம் விரும்பாமல் !
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல
 ஊரென்ன பேச உறவென்ன சொல்ல
ஒரு நெஞ்சம் இங்கே எரிகின்ற நேரத்திலே
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்

இனி நேயர்களே இந்தப்பாடலைப்பற்றி கொஞ்சம சிலாகிப்போம்! இந்த பாடலுக்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவின் இந்த இசை மெட்டை, 1967  இல் வெளிவந்த ஹம்ராஸ் என்ற படத்தில் வெளிவந்த ,,, என்ற பாடலை அப்படியே தழுவி எடுத்துள்ளார். இந்த படம் Come September என்ற ஹாலிவுட் படத்தின் ஹிந்தி வடிவம் இதே படம் தான் தமிழில் அன்பே வா என்ற படமாக மருவி வந்தது, நாம் உருகி நின்றுபார்த்தோம் மற்றுமொரு அசலும் நகலிலும், சந்திக்கும் வரை, பாடல் தந்து உதவும் சகோதரி வெரோனா ஷர்மிளாவோடு விடை பெற்று செல்வது உங்கள் அபிமான பேசாலைதாஸ் நன்றி வணக்கம் நேயர்களே!

  

0109 வந்தால் என்னோடு வா தென்றலே!

 

அசலும் நகலும் 3 

                                 அசலும் நகலும் 3  தொடரில், நாம் பார்க்க இருப்பது,  சகோதரி வெரோனா ஷர்மிளா அனுப்பிவைத்த, வந்தால் என்னோடு வா தென்றலே என்ற அருமையான பாடல் பற்றி இங்கே சிலாகிக்க இருக்கின்றோம் , தென்றல் போல ஜெயலலிதா கச்சிதமாக வந்து, வில்லன் மனோகரனை அழை க்கும் அருமையான பாடல். எல் ஆர்  ஸ்வரியின் இசையில் பாடல் அருமையாக  பாடியுள்ளார்.பாடல்  இடம் பெற்ற படம் 1967  இல் வெளிவந்த, நான் என்ற திரைப்படம், ரவிச்சந்திரன் ஜெயலலிதா மனோகர் நடிப்பில் வெளிவந்த படம், கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத டி.கே. தட்ஷணாமூர்த்தி இசைமைத்த அருமையான பாடலை முதலில் கேளுங்க அப்புறமா விடயத்துக்கு வருவோம்  

                                         வந்தால் என்னோடு வா என்ற பாடல் ஹொலிவூட் திரைப்படமான  come September என்ற திரைப்படத்தில்  இடம் பெற்ற  இசையை வைத்துக்க்கொண்டு , தமிழிலே அப்படியே மாற்றி அமைத்து இருக்கின்றார்கள். இந்த படம் ஹம்ராஸ் என்று ஹிந்தி திரைப்படமாக வெளிவந்தது. தமிழில் அன்பேவா என்ற படமாக வெளிவந்தது




புதன், 19 ஆகஸ்ட், 2020

0109 பொன் மேனி தழுவாமல், பெண் இன்பம் அடையாமல் ? பேசாலைதாஸ்

அசலும் நகலும் தொடர் 2

பொன் மேனி தழுவாமல், பெண் இன்பம் அடையாமல் ?  

வெரோனா ஷர்மிளாவுடன் இணைந்து, பேசாலைதாஸ் வழங்கும் அசலும் நகலும், தொடர் 2 , 
                                                   


 இந்த தொடரில் தேன் தமிழ் ஓசை வானொலி நேயர்களுக் கும், தேன் தமிழ் தடாக தொலைக்காட்சி நேயர்களுக்கும் நாம் தரும் பாடல், 1966  இல் வெளிவந்த, பி எஸ் வீரப்பாவின் தயாரிப்பில்  வேதாவின் இசையில் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில்,சத்யம்  இயக்கத்தில்  வெளிவந்த யார் நீ திரைப்படத்தில் இடம் பெற்ற பொன் மேனி தழுவாமல், பெண் இன்பம் அடையாமல் என்ற பாடலை சிலாகிக்கப்போகின்றோம்.  

                                               இசைக்கு  மொழி கிடையாது என்பார்கள் எனினும், பாடல்கள் குறிப்பிட்ட மொழியைச் சார்ந்தே புனையப்படுகிறது. யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல், இனிதாவது எங்கும் காணோம், என்ற பாரதியே, சுந்தர தெலுங் கினில் பாட்டிசைத்து என்று தெலுங்கின் சுவையை எடுத்தியம்பினான். அனைத்து மொழிகளும் தனிதன்மையான சுவை, மணம், குணம் கொண்டு மிளிர்கிறது. பலதரப்பட்ட மொழி பேசும் மக்களின்  வாழ்வுடன்  நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில்  பல மொழிகளின் தழுவல்கள் ஏராள மானவை.

                                                           இப்படிப்பட்ட ஒரு மொழியின் கவிஞர்களை, பாடல்களை அறியதரவேண்டும் என்பதே இந்தத் தொடரின் நோக்கம். தெளிவான புரிதலும் ரசனையும் இருக் கும் போது இந்த நுட்பமான வேறுபாட்டை அறிய முடியும். மொழியையும்  கடந்து எம் ரசனையை கவர்ந்த  ஒரு திரைப்படம் 1964 -ல் ராஜ் கோஸ்லா இயக்கத்தில் வெளியான ‘வோ கோன் தீ’ (அவள் யாராக இருந்தாள்) என்ற இந்தித் திரைப்படம்.
‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம் ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழிலும் ‘ஆமெ எவரு’ என்ற பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ‘உளவியல் திகில்’ வகை சார்ந்த கதைக்களத்தை கொண்டது இப் படம், நடிகை சாதனா, இசை அமைப்பாளர் மதன்மோகன், பாடகி லதா மங்கேஷ்கர், பாடலாசிரியர் ராஜா மெஹதி அலி கான் ஆகிய அனைவரையும் அகில இந்திய நட்சத்திரங்களாக உயர்த்தியது.

                        ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’, வித்தியாசமான பாணியில் அமைந்த, ‘ஜோ ஹம்னே தாஸ்த்தான் அப்னே சுனாயீ தோ ஆப் கியோன் ரோயீ’, இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும் ‘ பர்ஸே நயனே ரிம்ஜிம் ரிம்ஜிம்’ ஆகிய மூன்று பாடல்களையும் பாடியவர் லதா மங்கேஷ்கர்.
மெஹதியின் மிகச் சிறந்த பாடல்களை, அதே உணர்வுடன், அச்சு மாறாமல், இசை, குரல் மட்டுமின்றி மொழியிலும் மாற்றம் நிகழாது அதே அழகுடன் தன் சிந்தையின் திறனால் கவிவடித்து அழகு சேர்த்தவர்  கவியரசர் கண்ணதாசன்.
படித்த மருத்துவரான நாயகன் ஒத்த உருவம் கொண்ட இரண்டு பெண்களை மர்மமான சூழலில் மாறிச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில்   குழப்பத்தில் தவிக்கிறான். அவன் குழப்பத்தை நீக்கி தன்வயப்படுத்தும் நாயகி பாடுவது போல் அமைந்த  காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் இது.
‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’ என்று தொடங்கும் ஹிந்தி பாடலில் அருமையான அர்த்தம் உண்டு.‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’  என்றால்  தமிழில், கழுத்தில் படர்ந்து கொண்டு  என்னைக் கட்டிக்கொள் என்று பொருள். அந்த பாடல் தொடர்ந்து அழகாக செல்கின்றது.,,,,அணைத்துக்கொள் என்னை அன்பே, அழகான இந்த இரவு இனி வருமோ வராதோ, ஒருவேளை இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு, மீண்டும் ஏற்படுமோ ஏற்படாதோ,,,, இப்படியாக பாடல் நீட்சிகொள்கின்றது, இதோ ஹிந்தி பாடலை கேளுங்கள் 

இந்தி நடிகை சாதனாவுக்கு இணையான அழகுடைய ஜெயலலிதா, மர்மமான, விட்டேத்தியான பார்வையை நன்றாக வெளிப்படுத்தும் மனோஜ் குமாருக்கு இணையான ஜெய்சங்கர்  இப்படத்தின் தமிழ் வடிவான ‘யார் ‘நீ’ படத்தின் சிறப்பு அம்சங்கள். யார் நீ  1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 
தமிழில், இந்தப் பாடல், ‘பொன்மேனி தழுவாமல்’என்பதாக அமைந்தது. இந்திப் பாடலின் இசை, வயலின் பின்னணி உட்பட, முழுவதுமாகத் தமிழில் தக்க வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய இசையுடன் கண்ணதாசனின் எழில் கொஞ்சும் வரிகளும் சேர்ந்து இந்தப்பாடலை சாகா வரம்பெற்ற பாடலாக மாற்றிவிட்டது, காதல் தரும், இன்ப வலி, வேதனை இந்தப்பாடலில் விரவி நிற்கின்றது இதோ பாடலை கேளுங்கள்   அன்புடன் பேசாலைதாஸ்   


நானே வருவேன் இங்கும் அங்கும் என்ற மெட்டில்  அமைந்த  ஹிந்தி பாடல் இதோ

நானே வருவேன் இங்கும் அங்கும் என்ற பாடல் வேதாவின் இசையில் பி சுசிலா பாடிய பாடல் இது. ஹிந்தியில் வரும் அதே கருத்து ஆழம்  கொண்ட பாடலாக   கண்ணதாசன் மிக அழகாக எழுதியுள்ளார் பாடல் இதோ 


பார்வை ஒன்றே போதுமா பல்லாயிரம் சொல் தேவையா? என்ற மெட்டில் அமைந்த   யார் நீ படத்தில் வரும் பாடல் இதோ 

டீ எம் சௌந்தர ராஜன் பி சுசிலா இணைந்து பாடிய பாடல் பார்வை ஒன்றே போதுமா பல்லாயிரம் சொல் தேவையா? என்ற யார் நீ படத்தில் வரும் பாடல் கண்ணதாசனின் காதல் இரசம் சொட்டும் பாடல் இதோ  
டிக்கி ரிக்கி த குறி, திக்கி ரிக்கி கும் என்ற ஹிந்தி பாடலை இப்பொழுது கேளுங்கள்   

























திங்கள், 17 ஆகஸ்ட், 2020

0108 ஓ ஓ ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே,

 அசலும் நகலும்

ஓ ஓ ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே,

இசை என்ற இன்ப வெள்ளத்தில், நீராடும் நெஞ்சங்களுக்கு,  வெவ்வேறு  மொழி  இசை சோலைக்குள் போராடி, வெவ்வேறு காலகட்டத்தில், திரை இசையில் மலர்ந்த மெட்டுக்களை, சுரம் பிரித்து, அசல் நகல் என்று தரம் பிரித்து,  இந்த இசைக்கோலத்தை தொடராக,  அன்புத்தோழி திருமதி வெரோனா ஷர்மிலி அவர்கள்,   தேன் தமிழ் ஓசை இணைய வானொலியிலும், தேன் தமிழ் தடாகம் என்ற இணைய தொலைக்காட்சியிலும், தொடராக வெளியிட முன்வந்துள்ளார்கள், உண்மையில் இது, ஜவ்வாது மேடையிட்டு, சக்கரையில் பந்தலிட்டு, செம்மாதுளை பிளந்து தரும் அன்பு படையல் , இசை பிரியர்களே பார்த்தும் கேட்டும் பரவசமடையுங்கள்.

தமிழ் இசை, தெய்வங்களினாலும், பொய்யாமொழிப்புலவர்களாலும், இசைஞ்சானிகளாலும்  வளர்க்கப்பட்டது உண்மை என்றாலும், தமிழ் திரை இசையில், காலம் காலமாக, வட இந்திய சாஸ்திர சங்கீத திண்டலும், தொடுகையும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது.

சினிமாவின் வருகை, இந்தியில் இருந்து இழுத்துவரப்பட்டதினால், சினிமாத்தொழில் நுட்பங்கள், சினிமா இசை நுட்பங்கள், அப்படிய தமிழுக்கும் மருவியது வியப்பில்லை. ஹிந்தி இசை பாடல்கள் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ந்தது போலவே, ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு பாடல்கள் அமைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே வந்தது.. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ! 

1951 இல் இந்தியில் , திலீப் குமார்,நர்கிஸ்தாத், அசோக் குமார் நடிப்பில் வெளிவந்த தீதார் படத்தில், Bachpan Ke Din Bhula Na பாச்பன் கி  டின் புகுலஹா  நா என்ற முகமத் ராபி பாடிய பாடல் தான், தமிழில், ஓ ஓ ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே, சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே என்ற பாடலாக மலர்ந்தது,

இந்த பாடல் இரண்டு கட்டங்களாக காட்சி படுத்தப்பட்டிருக்கும், பால்ய பருவத்தில் பாடுவதும், பின்னர் வளர்ந்து பெரியவர்களாக மாறியபோது  பாடுவதாக இது அமைக்கப்பட்டிருக்கும். இந்த கட்சி இடம் பெற்ற படம், 1963 இல் வெளிவந்த நீங்காத நினைவு நிற படமாகும். சிறுவர்களாக இருந்த பொழுது, பி.சுசீலா. எல் ஆர் ஈஸ்வரி குரலில் இரு குழந்தைகள் காட்சியில் தோன்றும் பாடலைப் பார்த்தும், கேட்டும்...நம் பால்ய வயது நினைவுகளை பலர் அசைப்போட்டு இருப்போம். எஸ்.எஸ்.ஆர், புஷ்பலதா, கல்யாண்குமார் இவர்களின் அழகான நடிப்பில்  பெரியவர்கள் ஆனதும் பாடும் அதே பாடல் தான் வாலியின் வரிகளில்..கே.வி மகாதேவன் இசையில்,பாடகர் திலகம் TMS  பாடுவார்..பாடலின் முடிவில் ஹை பிட்ச்சில் பின்னி எடுப்பார்.. இதோ பாடலை கேளுங்கள்  தொகுத்தளிப்பவர் உங்கள் அன்பின் பேசாலைதாஸ் 






வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

இசைக்கு ஏது மொழி !

 இசைக்கு ஏது மொழி !

ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! மொழி கடந்த ரசனை
இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைஏராளமானவை.
ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது.
ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது …அதிகமாக இசை கேட்டுக்கொண்டிருப்பதன் பலனாக எனக்குத் தெரிந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரே ஒரு மெட்டு பல பாடல்களாக சில தொகுப்பை தரவிழைகிறேன்
ஒரே இசையில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பாடக பாடகிகள் பாடிய பாடல்கள் கேட்டிருக்கிறோம் ஏன் சில படங்களில் ஒரு பாடல் இரண்டு தடவை இடம்பெற்றிருப்பதையும் கேட்டிருக்கிறோம். அவ்வாறான பாடல்கள் ஒரே மெட்டில் வேறு வரிகளை கொண்டதாகவோ அல்லது பாடக பாடகிகள் வேறுபட்டதாகவோ இருக்கும்...
ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் . இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். https://www.youtube.com/watch?v=IO3D-JfItCU
வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டது ‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம். ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்ட இந்தப் படத்தில் ஜோ ஹம்னே தாஸ்தான் அப்னே சுனாயீ தோ, ஆப் கியோன் ரோயே’ என்று தொடங்கும் இந்திப் பாடலின் இதற்கு இணயாண வரிகளாக அமைந்த, ‘என் வேதனையில் உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா’ என்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் தொடக்க வரிகள், தமிழ்த் திரையில் பொதுவாக நாயகி, நாயகனிடம் வெளிப்படுத்தாத உணர்வின் அடையாளமாக அமைந்தன. https://www.youtube.com/watch?v=mdvlh0E7mYk
குறிப்பாக, ‘வோ கோன் தி’ (யார் நீ என்ற பெயரில் தமிழில் வந்த படம்) என்ற படத்தில், ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத்’ (‘பொன் மேனி தழுவாமலே’ என்ற கண்ணதாசனின் பொருத்தமான மொழிபெயர்ப்புப் பாடல்) ‘நயனா பர்ஸே ரிம் ஜிம்’ (நானே வருவேன் அங்கும் இங்கும்) ஆகிய பாடல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கேட்டு மட்டுமே உணர முடியும்.
ஆப் கீ பர்ச்சாயியான்’(உங்களுடைய நிழல்) என்ற படத்தின் ‘அகர் முஜ் ஸே முகபத் ஹை’முஜ்ஜே ஸப் அப்னே கம் தே தோ’ என்று தொடங்கும் இப்பாடல் லதா மங்கேஷ்கரின் அமரத்துவமான பாடல்களில் ஒன்று.
‘ஆலயமணி’ திரைப்படத்துக்காகக் கண்ணதாசன் எழுதிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’என்று தொடங்கும் பாடலின், “அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையாக” என்ற ஆழமான கவித்துவ வரிகளை நினைவுபடுத்தும் https://www.youtube.com/watch?v=gfDf-IrA5oQ
‘மூக மனசுலு’ (ஊமை மனம்) என்ற தெலுங்குப் படம் 1964-ல் வந்தது. மறுபிறப்புக் கருத்தை மையமாகக் கொண்டு, நாகேஸ்வர ராவ், சாவித்திரி, ஜமுனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 1967-ல் தெலுங்குப் படத்தின் இயக்குநரான அடுருத்தி சுப்பா ராவ் இயக்கத்தில் ‘மிலன்’ (சந்திப்பு) என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது.
சென்ற பிறவியில் படகோட்டியாக இருந்த நாயகனின் காதல் கதையை, பிளாஷ்-பேக் உத்தியில் வெளிப்படுத்துகிறது இப்படம். மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா, பவன் கரே சோர், ஜியாரா ரே ஜூமே ஜைஸ்ஸே, பன் மே நாச்சே மோர்’ என்ற பாடல், மொழி, பொருள் கடந்த உணர்வின் அழகான வெளிப்பாடாகத் திகழ்கிறது.
பிராப்தம்’என்ற பெயரில், சிவாஜி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளிவந்த இப்படம் தமிழில் தோல்வி அடைந்தது. ஆனால் இப்படத்தில் ‘சந்தனத்தின் நல்ல வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்றல் காத்து,’ என்ற புகழ் பெற்ற பாடலிலும், ‘காத்து இல்லை, காற்று’ என்று திருத்தும் உத்தியும் தக்கவைக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=aSqwfhYAoxs
மலரே குறிஞ்சி மலரே – தமிழில் பாடகர் ஜேசுதாசை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்களில் முக்கியமானதொன்றாகும்.அவர் ஏற்கனவே பாடிய மலையாள திரைப்பாடலான ” அகலே அகலே நீலாகாசம் ” என்ற பாடலின் அழுத்தமான பாதிப்பு நிறைந்த பாடல்.. https://www.youtube.com/watch?v=PYiKWrha-40
‘ “ஷர்மிலி : என்ற படத்துக்காக ‘கில்..... தே ஹைன் குல்யாஹான்’ கிஷோர் குமாரின் வசீகரக் குரலில் பாடிய பாடல் என்னை மயக்கியது. ராதையின் நெஞ்சமே’ பாடல்..அத்தனை ஈர்ப்பான இசையின் மூலம் இந்தி இந்தியில் … https://www.youtube.com/watch?v=ZTqz4JIN7UM
நீலமாம் கடலலையில் கோலமிடும் மீன் இனங்கள் சொல்லுவதென்ன ? .. Originally the song was composed by RK Sekhar...father of A.R.Rehman.
இந்த பாடலின் பல மெட்டுக்கள் மலையாளம், கன்னடம் மொழிகளில் வலம் வருகின்றன .. https://www.youtube.com/watch?v=aFWdNIF6QRc
தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல். https://www.youtube.com/watch?v=ZwVqqIofVXQ
‘அனார்கலி’ படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ‘ஜாக் ஜாக் தர்தே இஷ்க்’ (விழித்தெழு விழித்தெழு காதலே) என்ற மற்றுமொரு பாடல் பின்னர் தெலுங்கு மொழியிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ‘அனார்கலி’ படப் பாடலுக்கு மூலப் பாடலாக அமைந்தது.
காதலின் வீச்சை, தாபத்தை தனக்கே உரிய வசீகரக் குரலில் எழுச்சியுடன் ஹேமந்த் குமார் வெளிப்படுத்தினார். ஹேமந்த் குமார் போன்றே தனித்துவமான குரல் வளம் கொண்ட கண்டசாலா ஜிக்கியுடன் இணைந்து ‘அனார்கலி’யில் பாடினார். ‘ராஜசேகரா என் மேல் மோடி (வசியம்) செய்யலாகுமா’ என்ற அப்பாடல் ராஜேந்திர கிஷன் கவி வரிகளுக்கு இணையாக தஞ்சை ராமய்யாதாஸ் எழுதிய புகழ் பெற்ற பாடல்.
‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’ என்று தொடங்கும் ‘கண்கண்ட தெய்வம்’ படத்தின் அப்பாடல் கின்னஸ் சாதனைக்கு பி.சுசிலாவை இட்டுச் சென்ற பாடல்களில் ஒன்று. ஆதி நாரயண ராவ் இசையில் லலிதா ஆடி நடித்த அப்பாடல், இந்தியில் வைஜெயந்திமாலா நாட்டியமாடிய ‘ஊச்சி ஊச்சி, துனியா கீ திவாரே சய்யான் தோடுக்கே’ என்ற பாடலின் மெட்டில் உருவாக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=fkZlDCz8Bvc
பெண்ணியச் சிந்தனையை மையப்படுத்தித் தமிழில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்த ‘நானும் ஒரு பெண்’ என்ற படம் இந்திக்குப் போனது., தயாரிப்பாளர், இயக்குநர், முக்கிய நடிகர்கள், பாடல் வரிகள், மெட்டுக்கள் ஆகிய அனைத்தும் அப்படியே தக்க வைக்கப்பட்டு அதே காலகட்டத்தில் இந்தியில் ‘மே பீ லடுக்கி ஹூம்’ (நானும் பெண்தான்) என்னும் படமாக மொழிமாற்றம் செய்யப்பட்டது.. “கிருஷ்ணா ஓ காலி கிருஷ்ணா துனே ஏ க்யா கியா கைஸே பதலா லியே” என்ற, தமிழ்ப் பாடலின் அதே மீட்டரில் அமைந்த இந்திப் பாடலின் பொருள்:
தெளிவான புரிதலும் ரசனையும் இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்துகொண்டு பாடல்களை நாம் ரசிக்கும்பொழுது அதை இயற்றிய கவிஞர்களின் ஆற்றல் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.
. இந்த வேறுபாட்டை உணர்ந்துகொண்டு அதனை ரசிக்கும்போது அந்த ரசனையே அலாதியானதாக மாறிவிடுகிறது.
இவை அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதே இந்தத் தொடரின் நோக்கம்.
இது போல் நான் இங்கு சொல்லாத பல பாடல்களின் கரையோரம் சென்று அந்தக் கடல் நீரில் கொஞ்சம் கால் நனைப்போம்...
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம், , ’ஆப் கீ பர்ச்சாயியான் ஆலயமணி’ எனச்சொல்லும் உரை
Verona Sharmila மற்றும் 35 பேர்
61 கருத்துக்கள்
விரும்பு
கருத்துத் தெரிவி

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...