செவ்வாய், 25 ஜூன், 2019
பாட்டும் பதமும் 101காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
"காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்" பேசாலைதாஸ்
1979 ஆண்டில் வெளிவந்த கல்யணராமன் படத்தில் கமலஹாசன் அற்புதமாக நடித்திருந்தார், இந்த பாடலை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசையில், மலேசிய வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடலை ஆஹா ஓகோ சொல்லும் அளவுக்கு இல்லை, ஆனாலும் இந்த பாடலில் வரும் கோரஸ் இசை அதாங்கா,,, ஆஹா ஹாஆ,,, இந்த முன்னணி இசையும் அதைத்தொடர்ந்து வரும் சரணத்திற்கான இசை மெட்டையும் கேட்டால் எனக்கு என்னவோ 1971 வெளிவந்த யூரியா ஹீப் Uriah Heep என்ற ஆங்கில பாடகர் வெளியிட்ட Lady In Black 1971என்ற மியூஸிக் ஆல்பத்தில் இந்த மெட்டு அப்படியே பளிச்சென்று தெரிகின்றது, எதற்கும் ஒருக்கால் இரண்டு பாட்டையும் கேட்டுவிட்டு, எனக்கு தலையாட்டினால் போதும்,,, அன்புடன் பேசாலைதாஸ்
பாட்டும் பதமும் 100 என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
"என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்" பேசாலைதாஸ்
தமிழ்நாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன், ராம மூர்த்தி, கே.வீ. மகாதேவன் போன்றோர் 70கள் வரை தமிழ் சினிமாவை கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். 'சிங்கார வேலனே தேவா', 'அச்சம் என்பது மடமையடா', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'காலங்களில் அவள் வசந்தம்', 'நான் மலரோடு தனியாக', 'ஒரு நாள் போதுமா?', போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் தமிழ் திரை உலகை புரட்டி எடுத்து பின் சற்று ஓய்ந்து இருந்த நேரம். அப்பொழுது ஹிந்தி சினிமாவில் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், லக்ஷிமிகாந்த் பியாரிலால் ஆகியோர் மிகவும் அற்புதமான இசையை தந்து கொண்டிருந்தனர். அடியேனையும் சேர்த்து தமிழ் மக்கள் எல்லோரையும் ஹிந்தி பாட்டுக்கள் கேட்க வைத்தப் பெருமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
'தம்மாரோ தம்', 'மேரே சப்னோக்கி ரானே கபு', 'ஜானே ஜா டூண்டுதா ஃ பிருரஹா', 'ரூபுத்தேரா மஸ்தானா', 'மேன் ஷாயர் தோ நஹின்' , ஓ மேரே தில் கே செயின்', மேரே தில் மேன் ஆஜ் கயா ஹை', போன்ற அற்புதமான பாடல்கள் ஹிந்தி துளியும் தெரியாத என் போன்றோரை பரவசப்படுத்தியது நிஜம். அதிலும் என்னை அதிகமாக பரவசப்படுத்திய பாடல், ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கம் பிரபலமாகி வந்த காலத்தில் வெளிவந்த படம் ஹரே ராமா ஹரே கிருஸ்னா. படத்தில் ‘ஹிப்பி’யாகத்தான் ஜீனத்தும் நடித்திருந்தார். ஆஷா போன்ஸ்லேவின் போதையூட்டும் குரலில் ஜீனத் ஆடிப் பாடியிருந்த ‘தம் மேரா தம்’ பாடலுக்கு அரங்கமே எழுந்து ஆட, படம் சூப்பர்ஹிட் என்பதை முதல் காட்சியிலேயே நாம் உணர்ந்துவிடலாம்,
தமேரே தம் பாடல் இசையும், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில்வெளிவ்ரும், என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடல் இசையும் சரியாக ஒத்துபோகின்றது என்று நான் சொல்கின்றென், நீங்கள் என்ன சொல்கின்றிர்கள்? முதலில் இரண்டு பாட்டையும் கேளுங்கள்,,, அன்புடன் பேசாலைதாஸ்
திங்கள், 24 ஜூன், 2019
பாட்டும் பதமும் 99 பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
" பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு" பேசாலைதாஸ்
கிழக்கே போகும் இரயில், இந்த திரைப்படம் பாரதிராஜா இயற்றிய ஒரு கிராமிய காதல் படம், அந்த படத்தில் இந்த பாடல் வரும், ராதிகாவின் முதல் படம் இந்த படம், மண்வாசனையை மூக்கில் ஒட்டவைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாரதிராஜா! பூவரசம் பூ பூத்தாச்சை என்ற பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்கௌ ஈழத்து நாட்டர் பாடலொன்று நினைவுக்கு வந்து போவதுண்டு! அந்த ஈழத்து நாட்டர் பாடல் இதுதான்! "ஆதங்காக்கா ஆதங்காக்கா அவரைக் கண்டால் சொல்லிடுகா, மாதுளங்கன்னி மடல் விரிந்து போச்சுதென்று."
எப்படி இந்த ஈழத்து நாட்டர் பாடலுக்கும், இளையராஜாவின் இந்த பாடலுக்கும் ஒற்றுமை வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அதைவிட இன்னொரு சமாச்சாரமும் இந்த பாடலில் சேர்ந்துள்ளது, உண்மையில் இந்த பாடலுக்கு இளையராஜா அமைத்த ட்யூன் அவருடைய சொந்த ட்யூன் அல்ல என்பது எனது வாதம், 1971 இல் ராஜ்கபூர் நடித்த Door Ka Rahi என்ற திரைப்படத்தில் வரும் பாடலின் இராகத்தை இளையராஜா 1986 இல் வெளிவந்த கிழக்கே போகும் இரல் படத்துக்கு சேர்த்துள்ளார். நான் இந்த இரண்டு பாடலையும் உங்களுக்கு தருகின்றேன் நீங்களே நான் சொல்வதை ஒத்துக்கொள்வீர்கள்,,, அன்புடன் பேசாலைதாஸ்
புதன், 19 ஜூன், 2019
பாட்டும் பதமும் 97 "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்" பேசாலைதாஸ்
"இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்" பேசாலைதாஸ்
வாழ்க்கை மாறுபடுவதேயன்றி, அது அழிக்கப்படுவ தில்லை இது பைபிள் வசனம்! மானிடர் ஆன்மா மரணமெ ய்தாது, அது மறுபடியும் பிறந்திருக்கும், இது கீதாஉபதேசம்! ஆக மொத்தத்தில், மரணம் என்பது மாறுபடுகின்ற ஒரு புது அனுபவம். அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதுவே இப் போதுள்ள கேள்வி? இறப்புக்கு பின் உள்ள அனுபவம் பேரி ன்பம் என்று ஞானிகள் சொல்கின்றார்கள். அந்த பேரின்ப த்தை அடைந்து கொள்ள இவ்வுலகில் நாம் முயற்ச்சிக்க வேண்டும். அவரவர்கள் இவ்வுலகத்தில் எதை விதைக்கின்றா ர்களோ அதையே அறுவடையாக, வாழ்வு மாறுபடுகின்ற போது, பெற்றுக்கொள்வார்கள்! அன்பை விதைத்து, அன்பாக வாழ்ந்து முடித்தால்,,,,! வாழ்வு மாறுபடுகின்றபோது அந்த ஆனந்த அனுபவத்தை ஆன்மா பெற்றுக்கொள்ளும், காரனம் இறப்புக்கு பின்னர் ஆன்மா மட்டுமே இருக்கும்.
நாம் இறக்கும்போது புது அனுபவமாக, நாம் செய்த தர்மம், புன்னியம் இவை மட்டுமே நம்மோடு கூட வரும் இதை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகின்றோம், இந்த கருத்தை ஒட்டிய இன்னொரு பாடல், நீர்க்குமிழி திரைப்படத் தில், ஆடி அடங்கும் வாழ்க்கையடா, என்ற பாடலில், "இருப் போம் என்று நினைப்பவர் கண்களை, இறந்தவனல்லவோ திறக்கின்றான்" என்கின்ற வரிகள், அழகாக எடுத்துக்காட்டு கின்றது.
இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருப்பார் என நான் நினைத்தேன், அது தவறு, ஆலங்குடி சோமு , 1965 இல் வெளிவந்த இரவும் பகலும் படத்திற்காக இந்த பாடலை எழுதினார். இசை அமைப்பாளர் T.R பாப்பா, இதில் என்ன விசேடம் என்றால் இந்த பாடலை நடிகர் அசோகன் தானே பாடி, தானே நடித்தும் இருந்தார், அசோகனின் மறைவு க்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இந்தபாடலை ஒலிபரப்பியது இன்னும் என் ஞாபத்தில் வருகின்றது, நீங்களும் இந்தபாடலை கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்
பாட்டும் பதமும் 96 எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச்சொல்லவா? பேசாலைதாஸ்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச்சொல்லவா? பேசாலைதாஸ்
என் கவி ஆசான், கண்ணதாசன் சொல்லுக்குள் சிலம்பாட்டம் ஆடும் வித்தை தெரிந்தவன் என்று பலதடவை நான் எழுதி வருகின்றேன், காய் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடல் எழுதினார், அது போல தேன் என்ற சொல்லைவைத்தும் ஒரு பாட்டை எழுதினார், வளை என்ற சொல்லைவைத்தும் ஒரு பாடல் எழுதினார் அந்த பாடல்கள் எல்லாவற்றிற்கும் இந்த வலைத்தளத்தில், ஏற்கனவே நான் பொழிப்பும், விழிப்பும் எழுதிவிட்டேன், இன்று நான் எடுத்துக் கொண்ட சொல், ஊர் என்ற சொல்! இந்த பாடலில் கவிஞர் வாழ்வின் தத்துவங்கள், வாழ்வின் வயது பருவங்கள் பற்றி அழகாக சொல்லி இருப்பார். கருவறை என்ற கருவூர் தொடங்கிய வாழ்க்கை, மண் ஊர் என்ற கல்லறை வரை முடிவடைகின்றது. இந்த பாடலில், ஒவ்வொரு வரியிலும் ஊர் என்ற சொல் இடம் பெறுகின்றது. இந்த பாடலுக்கு நான் அதிக விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.
963 இல் வெளிவந்த காட்டு ரோஜா என்ற படத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் வெளி வந்த இந்த பாடலை சீனிவாசன் பாட,இலட்ச்சிய நடிகர் எஸ்.எஸ்,ஆர் அதற்கு ஏற்றாற்போல நடிப்பார், பாடலை கேட்டுப்பாருங்கள்!
அன்புடன் பேசாலைதாஸ்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைகச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மன்னூரில் விழுந்துவிட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மன்னூரில் விழுந்துவிட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்துவந்தேன்
காளையூர் வந்துவிட்டேன் .....
வேலூரை பார்த்துவிட்டேன்
விடியூரில்; கலந்துவிட்டேன்
பாலூரும் பருவம் என்று
பட்டினத்தில் குடி புகுந்தேன்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்றுகொண்டாள்
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கும்
வேளை வரவில்லையடா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...