புதன், 8 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 72 "மெய்யென்று மேனியை யார் சொன்னது? வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்"! பேசாலைதாஸ்


"மெய்யென்று மேனியை யார் சொன்னது? வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்"! 
பேசாலைதாஸ்
                                                                    பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர்கள் சொன்னார்கள், மானிட உடம்பு பொய் என்று, காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர்கள் சொன்னா ர்கள். பொய்யாகி, மாயமாகி, காற்றுடன், நீருடன், மண்னுடன், பஞ்ச பூதங்களுக்குள் மறைந்து, கலந்து போகும், இந்த உடல், பொய்யான தோற்றம் தான்! ஆனாலும் இந்த உடலை மெய்யென்று ஆணித்தரமாக சொன்னவர் இயேசு, அவர் சொன்னது மட்டுமல்ல, அதை நிரூபித்தும் காட்டினார். "மரித்தேன் ஆனாலும் சாதாகாலமும் உயிரோடிருக்க, உயிர்த்து, சதாகாலமும் உடலோடும் உயிரோடும் இருக்கின்றேன்" என்று சத்தியம் சொன்னவர் இயேசு. சினிமா பாடலை இரசிக்கும் போது, வெறும் காதல் நினைவுகளுடன் மட்டும் நின்றுவிடாது, மெய்யியல், இறையியல் தத்துவங்கள் அதற்குள் மறைந்து இருப்பதையும், உணர்ந்து இரசிக்கவேண்டும்!

                                          வாழ்வே மாயம் திரைப்படத்துக்காக வாலி பாடலை எழுத, அதற்கு கங்கை அமரன் இசை அமைக்க, ஜேசுதாஸ் அருமையாக பாடியுள்ளார். வாலியை கண்ணதாசனின் தரத்துக்கு உயர்த்தியது வாலி யின் இந்த பாடல்! வாலி பாலியல் கவர்ச்சியில் மட்டும் தான் தன் திறமை யை காட்டுவார் என நினைத்திருந்தேன், என் சிறுமதி தவ்று என்பதை வாலியின் இந்த பாடல் எனக்கு உணர்த்தியது. ஆடும் வரைக் கூட்டம் வரும்,,ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

                                     தாயாலே வந்தது தீயாலே வெந்தது!,தாயாலே வந்தது தீயாலே வெந்தது! மெய் என்று மேனியை யார் சொன்னது? இந்த வரி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது! ஆடும் வரை ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம், கூடுவது கூட்டம், கொள்ளிவரை வருமா?  என்ற கண்ணதாசன் மனக்கண் முன் வருகின்றார். அடுத்த அடியை பாருங்கள், அதுவும் வாழ்வு நிரந்தரமில்லை, இரண்டு உடல், ஒன்றாக கூடியதால், நாலுபேர் இறப்புக்கு தேவையாகின்றது! கருவோடு வந்தது, தெருவோடு போகி றது? இதற்கு மேல் என்னால் தத்துவ பொழிவு சொல்லமுடியாது பாடலை கேளுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,

நோய் கொண்டு போகும் நேரமம்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...