சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை? பேசாலைதாஸ்
“Speech is silver, but silence is golden.” என்று ஆங்கிலத்தில் முதுமொழி உண்டு. சொல்லாத சொல்லின் பெறுமதி தெரிந்தவன் என் கவி ஆசான் கண்ணதாசன். இந்த பாடல் சிவ ரஞ்சனி ராகத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தாலும் பெரும்பா லான இடங்களில் அந்த ராகத்திற்கு உரிய ஸ்வரங்கள் மீறப்பட்டு ஒரு இனிய காதல் பாடலாக உள்ளது என இசை விற்பணர்கள் சொல்லவ்வர் கள். ஒரு கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்று, வரிகளில் கவிஞரும், காட்சியில் சிவாஜி மற்றும் சரோஜாதேவியும் இலக்கணம் வகுத்த பாடல். மெல்லிசை மன்னர்கள் எப்போதுமே ராகத்தை பட்டை தீட்டுவதில்லை. பாடலின் உணர்ச்சிகளை பட்டை தீட்ட இராகங்களை வளைத்தும், நெளித்தும் உபயோகிக்கிறார்கள் என்பது என் கருத்து.
இந்த பாடலை பொறுத்தவரை காதல் உணர்ச்சியோடு ஒரு மன நெகிழ்வும் பாடலில் பிரதிபலிக்கும். பாடிய இருவரும் பாடும் பாவத்திலும் ஆமோதித்து கொடுக்கும் அந்த ஹம்மிங்கிலும் உணர்ச் சியை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு பக்க பலமாக குழல், வயலின், சிதார். பாடல் முழுவ தும் குழல் கூடவே பாடுவது போல் தோன்றும். தபலாவின் தாளம் ட்யூனின் ரிதத்தை நிலை நிறுத்தும் முத்தி ரையாக ஒலிக்கும்.
இப்பாடலை குறித்து திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் ஒரு சுவாரசியமான தகவலை தினத்தந்தி மின் இதழில் எழுதியி ருந்தார். அதாவது கவியரசு, கதை – வசனம் – பாடல்கள் எழுதி தொடங்கிய ஒரு படம், படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது. அந்தக்கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இர ண்டு வீடுகள். ஒரு கணவன்-மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.
பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான். பக்கத்து வீட் டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தன் பெற்றோ ரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை.
திருமணம் நடக்கிறது.
முதலிரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது. உண்மை என்ன வென்றால், அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள். மனைவியை பிரிய நினைக் கிறான். தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகி றாள். “உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்து கொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண் டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன் அன்று அவன் சொல்லி விடுகிறான்.
வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது. அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.
கவிஞர் எழுதிய பாட்டின் பல்லவி இது-
“தாய் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
தாய் தூங்கத் தாலாட்டு
நீ பாட வேண்டும்
நீ பாடும் தாலாட்டை
தாய் கேட்க வேண்டும்
தன் நிலை மாறி அவள்கூட
மொழி பேச வேண்டும்”
பின்னாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டபோது, முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை மாற்றி, காதல் பாடலாக எழுதி தந்தாராம் கவியரசு.
திருக்குறளிலே 'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் '- குறள் என்ற குறள் இந்த பாடலில் விரவி நிற்கின்றது
கண்ணதாசன் படிக்காத நூலகளே இல்லை எனலாம் . படித்ததை உள்வாங்கி எளிமை படுத்தி சூழலுக்கு ஏற்ப தந்ததில் அவருக்கு இணை யாரும் இல்லை .
கோவத்தில் சிதறும் வார்த்தைகள், நிரந்தர பிரிவை தந்திடும் . அங்கே சொல்லப்படாத சொற்கள் விலை மதிப்பற்றது குடும்ப சூழலில் இது மிக அவசியம் . கோவம் வரும்போது சொற்கள் சிந்திவிட்டால், கண்ணீர் சிந்த வேண்டி வரும் .கொட்டிய வார்த்தை, உடைந்த கண்ணாடி ,கொட்டிய தண்ணீர் மீண்டும் கிடைக்காது .
ஆறுதலான வார்த்தை, அன்பான வார்த்தை ,புரிதலுக்கு வழி வகுக்கும் .
மௌனம், அன்பாய் கைபிடித்து எதுவும் சொல்லாத நிலை இவைகள் கூட போதும் - பல அற்புதங்கள் சாதிக்கும்
சொல், மொழி, பொருள் இப்படி எதுவும் கிடையாது . அவைகள் சொல்லப்படும் இடம் தான் முக்கியம் . எங்கே பேசக்கூடாதோ அங்கே மௌனம் ஒரு பெரிய மொழி . அதற்கு விலையே கிடையாது .
அதனால் தான் இப்படி எழுதினாரோ ?
'சொல்லென்றும் ,மொழியென்றும்,
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலையேதுமில்லை ' என்றும்
-மௌனமே பார்வையால் என்றும்
-பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அந்தப் பெண்ணின் நிலை ...?
-மௌனம் - என்றும்
பேச மறந்து இருக்கும் நிலை
தெய்வத்தின் சன்னதி - என்றும்
அற்புதமாய் பல பாடல்களில் பதிவு செய்திருப்பார் .
ரசிப்போம் மகிழ்வோம் ! அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக