சனி, 23 ஜனவரி, 2021

0027 கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள்

கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள் பேசாலைதாஸ்

 

கையில் வைத்துக் காத்திரு ந்தால் காலடியில் காத்திருக் கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு, இது நோர்வே நாட்டு நாய்கள் என்ன, எல்லா நாட்டு நாய்களுக்கும் பொருந்தும், ஆனால் அந்த நாய்கள் எசமான் கையில் இருக்கும் உணவை உண்டு விட்டு, அவன் காலடியிலே கிடக்கும், ஆனால் மனித நாய்கள் அப்படியல்ல, உண்ட அடுத்த கனமே அடி யோடு மறக்கும் மனம் கொண்டவன், மனிதன் மட்டுமே, அதனால் தான் வள்ளுவன் சொன்னான், உய்வில்லை செய் நன்றி மறந்தவர்களுக்கு என்று. 

சுயநலம் குடிகொண்டவர்கள் கையிலெடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் அன்புதானே? ராஜபாட் ரங்கத்துறையில் ஒரு கட்டம், ஒரு ஜமிந்தாரின் அண்ணன் என்று வேசம் போடும் படி சொந்த அண்ணனையே கேட்கின் றான் தம்பி. ``உங்கள் தம்பி நன்றாக இருக்கவேண்டும் என்று உங்களுக்கு அக்கறை இல்லையா? எனக்காக இந்த சின்ன உதவியைக்கூட செய்யக்கூ டாதா'' என்று அண்ணனிடம் வாதிடுகிறான். எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும், நிஜமான தம்பிக்கு அண்ணனாக நடிக்கும் வேஷத்தை மட்டும்தான் நான் போட்டதில்லை. அதையும் உனக்காக போடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார் அண்ணன்.

இப்படி ஒரு சூழலுக்கு பாடல் எழுதவேண்டும் என்றால்.... கவியரசருக்குக் கசக்குமா என்ன? கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக் கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு  என்று எழுதுகிறார். கையில் நாம் எதை வைத்திருக்கிறோம் என்பது கூடத் தெரியத்தேவையில்லை. ஏதே னும் வைத்திருக்கிறோம் என்று தெரிந்தால் போதும். நம்மையே சுற்றிச் சுற்றி வரும் நாய்கள் போலத்தான் சில மனிதர்களும். ஆனால், ஒன்றுமி ல்லை என்று தெரிந்த அடுத்த கணம், அவர்களே உதறித்தள்ளியும் சென்று விடுவார்கள். 

ராமாயணத்தில் ராமனுக்கு மூன்று தம்பிகள். மகாபாரதத்தில் தருமனுக்கு நான்கு தம்பிகள். அண்ணன் சொல் தட்டாத தங்கக் கம்பிகள். தான் கேள்வி ப்பட்ட இதிகாசத்தில் வரும் தம்பிகள் அத்துணை அன்போடு இருந்தார் களே, நிஜத்தில் அப்படி இல்லையே.... அது நாடகமா? இது நாடகமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அர்த்தம் பொதிந்த கவியரசரின் பாடல் வரிகளும், `இந்த ராஜபார்ட்டு ரங்கதுரை ஏழையல்லவோ' என்று தழுதழுக்கும் டி.எம்.எஸ்.ஸின் குரலும், பாடல் முடியும் தருணத்தில் தாளம் போடப் பயன்படுத்திய டேபிள் டென் னிஸ் மட்டைகளை அருகிலிருந்த இருக்கையில் வைத்த கையோடு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாய் பொத்தியபடி வெளியேறும் சிவாஜிகணேசனின் நடிப்பும், இந்தப்பாடலை வேறு ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றது. இப்போதும் எங்கேயாவது எப்போதாவது நன்றி மறத்தல் என்ற உணர்வை சந்திக்கும்போது கண்களில் தானாக கண்ணீர் துளிர்க்கும். உள்ளுக்குள் இந்தப்பாடல் ஆற்றுப்படுத்துவதாய் ஒலிக்கும்.

மனிதனுக்கு இந்த சுயநலம் என்ற எண்ணம் மட்டும் தோன்றாமலே இருந் தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உண்மையில் சுயநலத்தை துறப்பது பெரிய காரியமே அல்ல. நமது சுயநலத்தின் வட்டத்தை கொஞ்சம் கொஞ்ச மாக விரிவுபடுத்தினால் போதும். நாம், நம் குடும்பம், நம் நண்பர்கள், நம் உறவுகள், நம் ஊர், நம் இனம், நம் நாடு, நம்முடைய உலகம்...சுயநலத்தை தொலைத்துவிட்டால் வெளிஉலகம் மட்டுமல்ல... நம் அக உலகமும் மகிழ்ச்சியால் பூத்துத் திளைக்கும்தானே? அன்பர்களே பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ் 


                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...