நான் யார், நான் யார், நீ யார்? பேசாலைதாஸ்
குடியிருந்த கோவில் திரைப் பட த்தில் வரும் பாடல் இது! சுயதரி சன கேள்வியில், தத்துவார்த்த மாக நம்மை நாமே கேட்கும் தத்துவ கேள்விகள், இந்தவரி களை வைத்தே புலமைப்பித்தன் தனது முதலாவது திரை இசைப் பாடலை எழுதினார். கோவை முனிசிபல் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபோது, ஒண்டிப்புதூரில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் இவர் வரவேற்புரை வாசித்த தற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தன்னைப்பாராட்டிய இயக்குனர் கே.சங்கரிடம், ‘பாட்டெழுத வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார் புலவர். இயக்குனர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்திருக்கிறார். முதலில் ஒரு வேலை தேடினார்,சாந்தோம் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. 125 ரூபாய் சம்பளத்தில், 25 ரூபாய் வாடகையில் வீடுபிடித்துக் குடியேறினார். பெரும்பாலும் நடைப்பயணம்தான்.
புலவரின் பாட்டுச்சாலைப் பயணத்துக்கான நாள் வந்தது. இவரை அழைத்துச்சென்று, ‘குடியிருந்த கோயில்’ படத்துக்கான ஒரு பாட்டுச்சூழலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.சங்கர். சில கவிஞர்கள் எழுதி, திருப்திவராத நிலையில் புலவருக்குக் கிடைத்த வாய்ப்பு அது. அன்று மழைக்காக ஒதுங்கிய பாண்டிபஜார் கடையொன்றில் நின்றபடியே முழுப்பாடலுக்கான வரிகளையும் முடிவுசெய்துவிட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘நான் யார் நான் யார் நீ யார்…’ என்று உருவான பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது. பேசாலைதாஸ்
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார் ஹாஹ…
உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ ?
எதிர்ப்பார் யார் யாரோ ?
இனியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் நாளை யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் முடிந்தார் யார் யாரோ ?
முடிந்தார் யார் யாரோ ?
நான் யார் நான் யார் நீ யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக