திங்கள், 28 செப்டம்பர், 2020

0114 பாட்டும் பதமும் இன்றொருநாள் போதுமா?

 இன்றொரு நாள் போதுமா?  பேசாலைதாஸ் 


 எஸ்பி பாலசுப்ரமணியத்தை சொல்லவேண்டுமென்றால் கர்நாடக ஆஸ்தான பாடகனாக இருந்த பாலமுரளி கிறுஸ்ணாவை பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது ஏனெனினில் “பாலமுரளிகிருஷ்ணா” சரஸ்வதியின் பூலோக அவதாரம் என எஸ்.பி.பி எல்லா மேடைகளிலும் சொல்வார். அவரது ஆதர்ச குருநாதர் அவர். அவர் பாடியதில் நான் எல்லாம் ஒரு சதவீதம் கூட பாடவில்லை என பெருந்தன்மையுடன் பாராட்டுவார் பாலு! பாலமுரளிகிருஷ்ணா பற்றி பேசும் போதெல்லாம் சட்டென் று ஒரு ஞாபகம் என் மனதுக்கு வந்துவிடும், அதை இந்த வலைப்பூங்காவில் முன்னொருமுறை சொல்லி இருப்பேன் என நினைக்கின்றேன். பாலமுரளி அவர்களுக்கு ஆஸ்தான கவிஞர் விருது கிடைத்தவுடன், யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை, இராமநாதன் மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது, அந்த நிகழ்வில், பாலமுரளி அவர்களை பார்த்து, எங்களுக்காக  சின்னக்கண்ணன் அழைக்கின்றான் என்ற பாடலை பாடும்படி சந்தோச உச்சத்தில், என்னையறியாமல் கத்திவிட்டேன், என் நண்பர்களும் என்னோடு சேர்ந்து குரல் எழுப்ப வேறு வழி இன்றி அந்த பாடலை அவர் பாடினார், அதுபோலவே இன்றொரு நாள் போதுமா என்ற பாடலையும் பாடினார்.

                                                                                         பாலமுரளிகிருஷ்ணா திரைப்படங் களில் பாடிய..சில பாடல்களில் சாகாவரம் பெற்ற பாடல் திருவிளையாடல் படத்தில் வரும் “ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா” பாடல் இந்தப்பாடலில் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் ஒரு சங்கீத சாம்ராஜ்யமே நடத்தியிருப்பார் என்பது கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். 

தோடி என்ற வார்த்தையை தோடி ராகத்திலும், தர்பார் எனும் வார்த்தையை தர்பாரி ராகத்திலும், கானடா எனும் வார்த்தையை கானடா ராகத்திலும் பாடியிருப்பார்! நிச்சயம் அது ஒரு சங்கீத தலைவாழை விருந்து! தன் குரு மேல் உள்ள அபிமானத்தில் இந்தப் பாடலை எஸ்பிபியும் பாடினார், 

அதைக் கேட்ட பாலமுரளிகிருஷ்ணா அடேய் என்னைவிட நீ தான் இதை பிரமாதமா பாடியிருக்கே என்றாராம்! அவரது அந்தப்பாராட்டு எனக்குக் கிடைத்த ஆயிரம் ஆஸ்கார் விருதுகளுக்கும் மேல் என்பார் நன்றியுடன் பாலு அண்ணா! 

பாலமுரளி பாடிய பாடலையும்,அந்தப் பாடலை பாலு அண்ணாவின் குரலிலும் நீங்கள் கேட்கலாம்,  

                                                                           அன்புடன் பேசாலைதாஸ் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...