செவ்வாய், 30 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 87 "நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது" பேசாலைதாஸ்


"நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது" பேசாலைதாஸ்
                                               


                                                   இந்த பாடல், மற்றும் கண்ணுக்கு மையழகு என்ற அருமையான பாடல்கள் அடங்கிய புதிய முகம் என்ற திரைப்படம் 1993 இல் வெளிவந்தது, படத்தை இயக்கியவர் சுரேஸ் சந்திரமேனன், இவரே படத்தின் கதாநாயகனாக வருகின்றார். இவர் ரேவதி என்பவரின் முன் னாள் கணவன், இந்த படத்தில் ரேவதி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் நேற்று இல்லாத மாற்றம் என்னது என்பது, பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் நம்ம சர்ச்சைக்குரிய வைரமுத்து, பாடலுக்கு இசை அமைத்தவர் இசைப்புயல் ஏ ரஹ்மான், என்னைப்பொறுத்தவரை, ரஹ்மானுக்கு உய‌ர் அந்தஸ்த்து கிடைப்பதற்கு இந்தபாடலும் ஒரு காரனம் என்பதே! 

                                                                               இனி பாடல் வரிகளுக்கு வருவோம், நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது, இதுதான் காதல் என்பதாஇளமை பொங்கி விட்டதா, இதயம் சிந்தி விட்டதா, சொல் மனமே.. பல்லவியாக வரும் இந்த பாடல் வரிகளில் என் இதயம் சிந்தவில்லை கிடந்து துடிக்கின்றது! கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை,,, என்னே அற்புதமான வைரவரிகள்! 

                                                                                         கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை,,,, உண்மைதான், ஆனால் நான் இன்றுவரை அப்படி ப்பட்ட ஆசைக்காக ஏங்குகின்றேன் வைரமுத்து அவர்களே!  காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை,,,  அந்த கண்கள் கொடுத்துவைத்தவை! கவிதை வரியின் சுவை,  அர்த்தம் புரியும் வரை,,,,, இந்த இந்த ஒற்றை வரியில் தான் வைரமுத்து அவர்களே நீங்கள் எழும்பி நிற்கின்றீர்கள்! கவிதையின் அர்த்தம், புரியாமல் இசைக்காக தலை ஆட்டும் மாந்தர்கள் மத்தியில் கவிதை வரிகள் உயிர்துடிப்பாகின் றது.இந்த பாடல் இசை உருவாகம் பெறும் ஒரு காணொளியையும் உங்களுக்காக இணைத்து வெளியிடுகின்றேன், அனுபவியுங்கள், அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்



                                    

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)

படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

புதன், 24 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 86 "குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா" பேசாலைதாஸ்


"குவா குவா பாப்பா இவ  குளிக்க காசு கேப்பா" பேசாலைதாஸ்

                                                           

                                                                   1960 களில் வெளிவந்த இரு வல்லவர்கள் திரைப்படத்தில் வெளிவந்த பாடல் இது; குடுமபத்தில் அம்மா அப்பா இவருக்கும் இடையில் ஏர்படுகின்ற கருத்துவேறுபாடுகள், சண்டைகள் , ஒரு பிஞ்சு மனதில் எத்தகைய உளவியல் தாக்கத்தை, ஏக்கத்தை ஏற்படு த்தும் என்பதை இப்பாடல் மிக அழகாக சித்தரிக்கின்றது ,இந்த பாடலை யும், களத்தூர் கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பிரபல பாடலையும் 'மியாவ் மியாவ் பூனைக் குட்டி', 'கோழி ஒரு கூட்டிலே', உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் மூலம் குழந்தை குரலில் பாடி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் எம்.எஸ். ராஜேஸ்வரி, கமலஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படத்தில் மிக பிர பலமான 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடலையும் பாடியுள்ளார். 

                                                                                        சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரியை, காரைக்குடி ஏவி.எம். கலையகத்தில் அப்போதைய பிரபல இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரி யை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டி யார் ராஜேஸ்வரியை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார்.
                                                           இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 'ராமராஜ்யா' திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார் ஏவி.எம். செட்டியார். இந்தப் படத்தில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடி னார். இதன் பின்பு ஏவி.எம். பட நிறுவனம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறியபோது ராஜேசுவரியும் சென்னைக்கு வந்தார்.

                                                     'நாம் இருவர்' திரைப்படத்தில் 'கருணாமூர்த்தி காந்தி மகாத்மா', 'மகான் காந்தி மகான்' ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றி கரமாக ஓடியது.

                                                                 அடுத்து 'வேதாள உலகம்' திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 'ஆகா ஆனந்தமானேன்' என்ற பாட லைப் பாடினார். 'வாழ்க்கை' படத்தில் 'உன் கண் உன்னை ஏமாற் றினால்' என்ற பாடலை டி..ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து பாடி யுள்ளார்.

                                     1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இதனால் இவர் 'மழலைக் குரல் பாடகி' என அழைக்கப்பட்டார். கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான 'களத் தூர் கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற 'அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே' என்ற பாடலை பாடியது இவர்தான். மேலும், இவர் பாடிய 'மியாவ் மியாவ் பூனைக் குட்டி', 'ஓ ரசிக்கும் சீமானே', 'கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே' போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை . எம் எஸ் இராஜேஸ்வரி தனது குழந்தை குரலால் பாடிய அத்தனை பாடலக்ளும் எனக்கு பிடிக்கும், அதிலும் சிறப்பாக குவா குவா பாப்பா எப்பொழுதும் எனக்கு பிடிக்கும், இந்த பாட்லை நான் கேட்கும் போதெ ல்லாம், இப்பொழுது வளர்ந்து குமரிகளாகி, வைத்தியர்களாக இருக்கும் எனது முதல் பெண்குட்டியும், எனது கடை பெண்குட்டியும், பாப்பா க்களாக இருந்த அந்த காலம், என் நினைவுச்சுழியில் வந்து போகும்,   ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா,அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா  இந்தவரிகளை கேட்கும்போதெல்லாம் ஒரு அப்பாவாக என் கண்களில் கண்ணீர் பணிக்கும்,   நீங்களும் பாட்டை இரசியுங்கள்  அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


"குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல

குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா

குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு
கூடுமில்ல துணையுமில்ல வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு

குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

வியாழன், 18 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 85 "அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா" பேசாலைதாஸ்


"அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா" பேசாலைதாஸ்
                    

நான் இரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ் பி முத்துராமனின் கைவண்ணத்தில் 1974 இல் வெளிவந்த, எங்கம்மா சபத்ம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! பாடல் ஆசிரியர் என் கவி ஆசான் கண்ணதாசன், இசை அமைப்பு விஜய்பாஸ்கர், பாடலை பாடியவர்கள் வாணி ஜெயராம், எஸ் பாலா. சங்ககாலத்தில் அன்னத்தை புறாவை பூவை தூது விட்டது போல, மேகத்தையும் காதலர்கள் தூதுவிட்டார்கள், மேகவிடு தூது என்ற ஒரு சங்க இலக்கிய படையலே இருக்கின்றது. இந்த பாடலில் வாணியின் குரல் அமுதமாக நெஞ்சிலே கொட்டுகின்றது, அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா!, கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது, கண்ணதாசின் வரிகள், வரிகள் அல்ல தேன் துளிகள்; நான் நீயன்றோ நீ நான்அன்றோ எனது மயக்கம் தெளிந்ததா என்று காதலி கேட்பதாக கவிஞர் வரிகளை கொட்டும் போது, வரிகள் சிந்தியதேன்? என  பேசாலைதாஸ் சிந்தித்தான்! ஆம் ,சிந்தியது தேன் தான்! பாடலை கேளுங்கள் உங்கள் மனதில் கட்டாயம் தேன் சிந்தும்!  அன்புடன் பேசாலைதாஸ்


அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா


கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நான்அன்றோ

எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா


ணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு

வா மஞ்சமே பார் நெஞ்சமே

புதிய உலகம் திறந்தது

பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

சனி, 13 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 84 " களங்கம் வந்தால் என்ன பாரு, அதற்கும் நிலா என்று பேரு, அட சந்தையிலே நின்றாலும் நீ, வீர பாண்டி தேரு" பேசாலைதாஸ்.


" களங்கம் வந்தால் என்ன பாரு, அதற்கும் நிலா என்று பேரு, அட சந்தையிலே நின்றாலும் நீ, வீர பாண்டி தேரு" பேசாலைதாஸ்.
                                                    


                                                                                என் கவித்தலைவன், கருவாச்சியின் கைக்குழந்தை, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிராக, சின்மயி என்ற பாட்டுக்காரி களங்கம் கற்பிக்க முயல்கின்றாள்! இதை நான் செவிமடு த்தபோது, நான் சினம் கொண்டேன், கூடவே எனக்கு வைரமுத்து எழுதிய பாடல் வரி என் சிந்தனையில் வலம் வந்தது!

                                                        என் கவித்தலைவா! நீ களங்காதே, நீயே எழுதிய பாடல்வரிகளை, உனக்கே உரிமையோடு எடுத்தியம்புகின்றேன், கள ங்கம் வந்தால் என்ன? நிலா, நிலாதான்! செந்தமிழ் கவி உலகின், எங்கள் அடையா ளம் நீ! நீ பெரும் கவிஞன், காமத்தை கடவுளாக பார்க்கும் திறன் கொண் டான்! மங்கையின் இடுப்பைப்பார்த்து, குறுக்கு சிறுத்த வளே! என்னை சந்தனத்தில் அரைத்தவளே! என்று மங்கையின் இடுப் பைப்பார்த்து, சந்தனம் என்றாயே உண்மையில் நீ கவிப்பொய்யன் தான்! சந்தேகமே இல்லை, 

                                                                                                       நீ இரசிப்பதற்கு எம் தமிழ் மங்கையர்கள் கொடுத்து, வைத்திருக்கவேண்டும், உன் பார்வையே தனி ரகம்! என் அப்பன் சிவன் பாடினானே, சங்க கால குறுந்தொகை செய்யு ளாக‌,  இறையனார் அகப்பொருளில்,  கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி,  காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ,  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின், நறியவு முளவோநீ யறியும் பூவே. 

                                                                  எம் தமிழ் குலப்பெண்களின் தலைமயில் கூட, காமம் கொப்பளிக்கும் என்றானே என் கொப்பாட்டான் சிவ பெருமான்! அவன் என்ன பாலியல் தொந்தரவு செய்தானா? கங்கை கரைத்தோட்டத்தில், பெண்களின் சீலையை களவாடி, பெண்மையை இரசித்தானே, மதுசூதன் கண்ண பரமார்த்தா! அவன் என்ன பாலியல் தொந்தரவு செய்தானா? ஏன் தமிழ் கடவுள் சிவன் மீதும், பாடகி சின்மயின் இந்து கடவுள் மீதும், பாலியல் தொந்தரவு குற்றசாட்டு எழவில்லை? வெறும் சதைப்புணர்ச்சியில் இன்பம் காண்பவர் எம் தமிழ் புலவர் இல்லை என்பதை சின்மயி உணர்ந்திருக்க வேண்டும்!  

                                                                    என் கவி ஆசான் கண்ணதாசன் பாடினானே " ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும், ஒரு கோல மயில் என் துணை இருப்பு" அப்படியானால் பெண்களை இரசுத்து, அனுபவித்து, கவிதை தந்த காவியத்தாயின் இளைய மகன் மீது, பாலியல் தொந்தரவை வழக்கை பதிவு செய்யுங்கள் சின்மயி அவர்களே! ஈழத்து உறவுகள் செத்து மாண்ட போது,  கவிதை பாடி, இதயங்களை ஈரமாக்கிய என் கவித்தலைவனுக்கு, உன் உடலை நக்கி, தன் நாக்கை ஈரமாக்க நினைத்திருப்பானோ சொல், வளர்த்த கடா பார்பில் பாய்ந் ததுபோல, உன்னை வளர்த்து ஆளாக்கிய வைரமுத்துவை வசைபாட துணிந்தாயோ நன்றி கெட்ட தெலுங்குகாரியே! உனக்கு முகவரி தந்த முகத்திலே காறி துப்புகின்றயே! உன் பார்ப்பன குனமே அப்படித்தான்! ஏய் சின்மயி உன்னை எச்சரிக்கின்றோம், உன் தவறை உணர்ந்து, மன்னிப்புக்கேள்! அன்புடன் பேசாலைதாஸ்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 83 "தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும், நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்" பேசாலைதாஸ்

"தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும், நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்"  பேசாலைதாஸ்
                            


                                                                 பாண்டவர் பூமி என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் இது, பாடலாசிரியர் மிக இளவயது கொண்ட சினேகன் இசை அமைத்தவர் பரத்வாஜ் பாடியவர்கள் ரேஸ்மி  யுகேந்திரன் எல்லோருமே புதியவர்கள் என்றாலும் பாடல் அசத்துகிறது. பாடலின் நட்பு என்ற கருத்து அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அழகான, உண்மையான நட்பை காணமுடியாது, உயர்வான நட்பு, காதலாக மாறும் போது அதன் சுவையே தனி! வெறும் உதவிக ளுக்காகவும், பணத்திற்காகவும் நட்பை பயண்படுத்துவதும், பின்னர் மெளனமாக விலகிச் செல்வதும், வாடிக்கையாகிவிட்டது, நட்பு என்றால் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காமல், பிரச்சனைகளை அவ்வப்போது சண்டைபோட்டு தீர்த்துகொள்வதும், நட்பை ஆழப்படுத்தும், அந்த நட்பு க்குள் பாலியல் உணர்வும் கலந்துவிட்டால்! சர்க்கரை கலந்த பாலாக உறவு மாறிவிடும்! 

                                  அற்ற குளத்து அறுநீர் பறவை போல, வற்றிய குளத்தை விட்டோடும் பறவைகள் போல, சிலர் நட்பை பயண்படுத்துவார்கள். நட்புக்கும் கற்பு உண்டு என்பதை சிலர் மறந்து விடுகின்றார்கள், எங்கே தமது பலவீனம், தவறுகள் தெரிந்துவிடும் என்பதற்காக ஒரு சிலர் மெள்னமாகிவிடுவார்கள், இந்த மெளனத்தை புரிந்து கொண்டு, நணப்ர் களாய் வந்தவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள் என்பதற்காக மெளன த்தை ஒரு சிலர் ஆயுதமாக பாவிப்பார்கள், காரணம் கேட்டால்,,,, இதய த்தில் பூஜிப்பதாக கதை பல அளப்பார்கள், இவர்களுக்கு நட்பு என்றால் என்னவென்று புரிவதில்லை, காதலையும் தெரிந்து கொளவதில்லை, மனதில் வரும் கவலைகள், பிரச்சனைகளை பேசிப்பபறிமாற நட்பை விட வேறு என்ன உறவு இருக்கமுடியும்! மனைவி, கணவன் இவர்களிடம் கூட பகிரமுடியா பல சிக்கல்களை நண்பர்களிடம் சொல்லி ஆருதல் அடையாலாம், தோள் கொடுப்பவர்களே தோழர், அவர்கள் உயிரையே தருவார்கள், ஒருபோதும் மெளன்மாய் விலகமாட்டார்கள்! இந்தபாடலை கேட்கும் போதெல்லாம் அப்படி ஒரு நட்பு கிடைக்காதா என்று மனம் ஏங்கும்
                                                            நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது, நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்கு ஆண் பெண் தெரியாது,   நீயும் நானும் வெகு நேரம், மனம் விட்டு பேசி சிரித் தாலும், பிரியும் பொழுதும் சில நொடிகள், மௌனம் கொள்வது ஏன்,  தோழி?      எவ்வளவு ஆழமான உணர்வுகளை கொட்டும் சினேகனின் வரிகள்! நண்பர்கள் என்றால் மனம்விட்டு மணிக்கணக்காக பேச ஆசை ப்படுவார்கள் அதன் மூலம் அததனை மனச்சுமைகளையும் இறக்கிவை க்கலாம் அது ஒருவரம்! எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை, சிலருக்கு மனவி, கணவன் கூட நட்பாக கிடைத்துவிடும் அவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள் தான்!         அன்புடன் பேசாலைதாஸ்


தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,

உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,

நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,

நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,

பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,

புதன், 10 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 82 என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் பேசாலைதாஸ்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்   பேசாலைதாஸ்

                                                                    வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர்  இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுச் சுழிகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது! வாலியின் வ்யோதிப பருவத்திலும் ஒரு வாலைபனைப்போல தன் உண 
ர்வுகளை கொப்பளித்துவிடுகின்றார். கவிஞர்களுக்கு வயது என்பது வரம்பற்றது என்பதற்கு இது ஓர் சான்று!

                                                                                இளையராஜாவின் ஹிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்! கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்  வாலியின்வரிகள் மிக அழகானவை அன்புடன் பேசாலைதாஸ்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் 
ஆனாலும் அனல் பாயும் 
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் 
ஆனாலும் என்ன தாகம் 
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன 
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன 
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 
ஒன்றி ஒன்றாய் கலந்தாட 
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு 
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்


சனி, 6 அக்டோபர், 2018

பாட்டும் பதமும் 81 “இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” பேசாலைதாஸ்


“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”  பேசாலைதாஸ்
                                            என் கவிதை ஆசான் கண்ணதாசன் சொல்லுக்குள் சுகம் வைக்கும் ஒரு சித்தன், ஒரு சொல்லாலே முழுக்கதை சொல்லும் வல்லமை கொண்டவன். மேலஏ உள்ள இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை, எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், “சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?” # பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...! இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..? “ அது வந்து....
அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில்  அதுவும் ஒன்று.... அது இதுதான்...!
.
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்...
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும்
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் ....
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்...
வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!
.
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
.
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
.
#.. கதையைப் படித்து முடித்த நான் ,
கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
.
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
.
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..!
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் ,
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
.
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
.
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
.
# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் ,
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
.
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
.
# கவியரசர் கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...
பூஜிக்க வேண்டிய கவிஞன்..! மீண்டும் அடுத்த பதிவில் பேசாலைதாஸ்

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...