"நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது" பேசாலைதாஸ்
இந்த பாடல், மற்றும் கண்ணுக்கு மையழகு என்ற அருமையான பாடல்கள் அடங்கிய புதிய முகம் என்ற திரைப்படம் 1993 இல் வெளிவந்தது, படத்தை இயக்கியவர் சுரேஸ் சந்திரமேனன், இவரே படத்தின் கதாநாயகனாக வருகின்றார். இவர் ரேவதி என்பவரின் முன் னாள் கணவன், இந்த படத்தில் ரேவதி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் நேற்று இல்லாத மாற்றம் என்னது என்பது, பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் நம்ம சர்ச்சைக்குரிய வைரமுத்து, பாடலுக்கு இசை அமைத்தவர் இசைப்புயல் ஏ ரஹ்மான், என்னைப்பொறுத்தவரை, ரஹ்மானுக்கு உயர் அந்தஸ்த்து கிடைப்பதற்கு இந்தபாடலும் ஒரு காரனம் என்பதே!
இனி பாடல் வரிகளுக்கு வருவோம், நேற்று இல்லாத மாற்றம் என்னது, காற்று என் காதில் ஏதோ சொன்னது, இதுதான் காதல் என்பதாஇளமை பொங்கி விட்டதா, இதயம் சிந்தி விட்டதா, சொல் மனமே.. பல்லவியாக வரும் இந்த பாடல் வரிகளில் என் இதயம் சிந்தவில்லை கிடந்து துடிக்கின்றது! கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை,,, என்னே அற்புதமான வைரவரிகள்!
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை,,,, உண்மைதான், ஆனால் நான் இன்றுவரை அப்படி ப்பட்ட ஆசைக்காக ஏங்குகின்றேன் வைரமுத்து அவர்களே! காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை,,, அந்த கண்கள் கொடுத்துவைத்தவை! கவிதை வரியின் சுவை, அர்த்தம் புரியும் வரை,,,,, இந்த இந்த ஒற்றை வரியில் தான் வைரமுத்து அவர்களே நீங்கள் எழும்பி நிற்கின்றீர்கள்! கவிதையின் அர்த்தம், புரியாமல் இசைக்காக தலை ஆட்டும் மாந்தர்கள் மத்தியில் கவிதை வரிகள் உயிர்துடிப்பாகின் றது.இந்த பாடல் இசை உருவாகம் பெறும் ஒரு காணொளியையும் உங்களுக்காக இணைத்து வெளியிடுகின்றேன், அனுபவியுங்கள், அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)
கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)
படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து