புதன், 22 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 78 "இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த க‌விதை மனிதன்" " இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்" பேசாலைதாஸ்


"இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த க‌விதை மனிதன்"  " இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்" பேசாலைதாஸ்
                                                                             இன்று எனது இரசவாதத்தில் இரண்டு பாடல்களை ஒருமித்து இரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இரண்டு  பாடல்களும் வெவ்வேறு திரைப்படத்தில் வெளிவந்த கண்ணதாசனின் பாடல்கள். இரண்டுமே இறைவனைப்பற்றிய பாடல் கள் தான்! ஒரு பாடல் சாந்தி நிலையம் படத்தில் வெளிவந்தது. மற்றது ஏன் என்ற திரைப்படத்தில் வெளிவந்தது.
இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை - அவன் அன்பே நாம் பெறும் கருணை
வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன் சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு  பாசம் என்பது வீடு உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் கண்ணில் வரும் பாதையை காணச் சொன்னான் நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான் கண்கள் அவனைக் காண்க உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க,,,, இவ்வளவு அழகான வரிகள் இந்தபாடலில் தொக்கி நிற்கின்றது 


                                                அத்போலவே இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு, ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று. கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு, காந்தியைப்போலவே காவியங்கள் உண்டு,  முடிவு விளங்காத தொடர் கதை உண்டு. முடிக்கவேண்டும் என்று முடிப்பதும் உண்டு. கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்டிடம் பிறந்தை பெண்னுக்கே கொடுத்தான். மண்ணில் பிறந்ததை மண்ணுக்கே கொடுத்தான். வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான். கடவுளை வென்றது கவிஞனின் படைப்பு. ஒவ்வொரு வரிகளையும் கவனமாக இரசியுங்கள் அன்பர்களே அன்புடன் பேசாலைதாஸ்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 77 வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ? பேசாலைதாஸ்


வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ?  பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞன். அனுபவ வாயிலாக அனைத்தையும் அறி ந்து கொள்ளும் ஒரு ஞானியாக கவிஞர் கண்ணதாசன் ஒருவ னால் மட்டுமே முடியும்.  “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடி       யதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்து  ஒரு பாடல் எழுதினான். வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி –        என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாச னின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். 
                                               கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாட’மது’.  “ஒரு வன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்ப டியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இரு க்கிறது” என்று உரைத்தவன் அவன். இனி பாடலை கேளுங்கள்.

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 76 கேட்டவரெல்லாம் ஆடாலம், என் பாட்டுக்கு தாளம் போடலாம்! பேசாலைதாஸ்


கேட்டவரெல்லாம் ஆடாலம், என் பாட்டுக்கு தாளம் போடலாம்! பேசாலைதாஸ்
இந்ததடவை நான் எடுத்துக்கொண்ட பாடல் இதுதான். தங்கை படத்துக்காக, கண்ண்தாசன் எழுத , விஸ்வனாதனின் இசையில் வளர்ந்த பாடல். இந்த பாடல் பிறந்த கதையே தனி ரகம்!கேட்டவரெல்லாம் பாடலாம் – தங்கை

கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.

திருலோக்  situation சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.

முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.

அப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.

“சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.

அப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.

போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.

“இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.

“ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.

புன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.

அப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 75 உன் கண்ணில் நீர்வழிந்தால்! என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" பேசாலைதாஸ்


" உன் கண்ணில் நீர்வழிந்தால்! என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" பேசாலைதாஸ்
வியட்நாம் வீடு திரைப்படத்தில் வரும் இந்த பாடல், மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்டது. நம்மை நெஞ்சைப்பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளைமட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், 'KVM  பிளஸ் புகழேந்தி சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்தமாதிரிப் பாடல்களைப்  பாடுவதற்கென்றே பிறந்த டி.எம்.எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப்பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட.......

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றிவரும் பஞ்கச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி...

உன்னைக்கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி 
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப்போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக் கொள்ள....

சாலச்சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக்காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மனாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து  தரையில் படுத்திருக்கும் பத்மனாபனைக்காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.....

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக்குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
தேவையை யாரறிவார்... என்...... தேவையை யாரறிவார்
உன்னைப்போல  தெய்வம் ஒன்றேயறியும் 

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில்.... நீர் வழிந்தால்.... என் நெஞ்சில்.....
(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)

பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக்கொள்ளும் ரசிகர் கூட்டம்.

எழுதியவர் இல்லை, இசைவடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவரும் போய்விட்டார்... ஆனாலும் இன்னமும் நெஞ்சுக்குள் உதிரம் கொட்டுகின்றதே இந்த பாடலை மீண்ண்டு மீண்டும் கேட்க,,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 74 அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு,உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை" பேசாலைதாஸ்


"அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு,உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை"      பேசாலைதாஸ்

இருமலர்கள் திரைஅப்படத்தில் வெளிவந்த பாடல் இது! மன்னிக்கவேண் டுகின்றேன், கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மாதவி பொன்மயிலால் பாடல்கள் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நான் உங்களோடு சிலாகிக்கி ன்றேன். 'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.

இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.

'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க.......  எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே

கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி.  எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு. அன்புடன் பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 73 மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது பேசாலைதாஸ்

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது   பேசாலைதாஸ்

ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போதுமற்ற பாடல்கள் பின்தங்கிஅவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படிமற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றதுபாடல்.
பெரிய சிவாஜியின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளிபாடலும், 'நீயும் நானுமா கண்ணாபாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான சிவாஜியின் கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவதுஅவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே'பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூடமெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று'மெழுகுவர்த்தி எரிகின்றதுபாடலுக்கு.
ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும்சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும்ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.
இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர்புதிய பறவைஎங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது,இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடிகருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும்தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும்அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றதுபுதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றதுபுதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது
கவியரசரின் என்ன அழகான வரிகள்மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசைஇவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல்அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம்அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினிஇந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும்பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ்இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....
அன்பு என்னும் கோயில்தன்னிலேபாசம் என்னும் தீபம் தன்னிலேஉள்ளம் ஒன்று மயங்குகின்றதுதன்னை எண்ணி கலங்குகின்றதுதன்னை எண்ணி கலங்குகின்றது
இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்லஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட்,பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர்இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம்இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.
வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோஅதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோஅதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட்,வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.
என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றதுபாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

புதன், 8 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 72 "மெய்யென்று மேனியை யார் சொன்னது? வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்"! பேசாலைதாஸ்


"மெய்யென்று மேனியை யார் சொன்னது? வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்"! 
பேசாலைதாஸ்
                                                                    பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர்கள் சொன்னார்கள், மானிட உடம்பு பொய் என்று, காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர்கள் சொன்னா ர்கள். பொய்யாகி, மாயமாகி, காற்றுடன், நீருடன், மண்னுடன், பஞ்ச பூதங்களுக்குள் மறைந்து, கலந்து போகும், இந்த உடல், பொய்யான தோற்றம் தான்! ஆனாலும் இந்த உடலை மெய்யென்று ஆணித்தரமாக சொன்னவர் இயேசு, அவர் சொன்னது மட்டுமல்ல, அதை நிரூபித்தும் காட்டினார். "மரித்தேன் ஆனாலும் சாதாகாலமும் உயிரோடிருக்க, உயிர்த்து, சதாகாலமும் உடலோடும் உயிரோடும் இருக்கின்றேன்" என்று சத்தியம் சொன்னவர் இயேசு. சினிமா பாடலை இரசிக்கும் போது, வெறும் காதல் நினைவுகளுடன் மட்டும் நின்றுவிடாது, மெய்யியல், இறையியல் தத்துவங்கள் அதற்குள் மறைந்து இருப்பதையும், உணர்ந்து இரசிக்கவேண்டும்!

                                          வாழ்வே மாயம் திரைப்படத்துக்காக வாலி பாடலை எழுத, அதற்கு கங்கை அமரன் இசை அமைக்க, ஜேசுதாஸ் அருமையாக பாடியுள்ளார். வாலியை கண்ணதாசனின் தரத்துக்கு உயர்த்தியது வாலி யின் இந்த பாடல்! வாலி பாலியல் கவர்ச்சியில் மட்டும் தான் தன் திறமை யை காட்டுவார் என நினைத்திருந்தேன், என் சிறுமதி தவ்று என்பதை வாலியின் இந்த பாடல் எனக்கு உணர்த்தியது. ஆடும் வரைக் கூட்டம் வரும்,,ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

                                     தாயாலே வந்தது தீயாலே வெந்தது!,தாயாலே வந்தது தீயாலே வெந்தது! மெய் என்று மேனியை யார் சொன்னது? இந்த வரி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது! ஆடும் வரை ஆட்டம்! ஆயிரத்தில் நாட்டம், கூடுவது கூட்டம், கொள்ளிவரை வருமா?  என்ற கண்ணதாசன் மனக்கண் முன் வருகின்றார். அடுத்த அடியை பாருங்கள், அதுவும் வாழ்வு நிரந்தரமில்லை, இரண்டு உடல், ஒன்றாக கூடியதால், நாலுபேர் இறப்புக்கு தேவையாகின்றது! கருவோடு வந்தது, தெருவோடு போகி றது? இதற்கு மேல் என்னால் தத்துவ பொழிவு சொல்லமுடியாது பாடலை கேளுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,

நோய் கொண்டு போகும் நேரமம்மா!

சனி, 4 ஆகஸ்ட், 2018

பாட்டும் பதமும் 71 மலர் என்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்! மனம் என்ற கறுவண்டு பறக்கட்டும்! பேசாலைதாஸ்


மலர் என்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்! மனம் என்ற கறுவண்டு பறக்கட்டும்!  பேசாலைதாஸ்
                                                            ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று மனித சிந்தனையை மல‌ர்களுக்கு ஒப்பிட்டு பேசினார் சீனாவின் கம்யூனிஸ்ட் புரட்ச்சி தந்தை மாவோ. அதற்கு மேலாக மனிதர்களிடம் உள்ள மாற்று சிந்தனைகளை மலர்களுக்கு ஒப்பிட்டு, மாற்றான் தோட்டத்து மலர்களுக் கும் வாசம் உண்டு என்றார் தமிழ் அறிஞன் அண்ணாதுரை. 

                                                      பெண்களை மலர்களுக்கு ஒப்பிட்டு கவிதைகள் எழுதினார்கள் தமிழ் கவிஞர்கள். பூவிலும் மெல்லிய பூங்கொடி என்றும், மல்லிகை பூவிலும் மெல்லிய மாது என்றும், சினிமா கவிஞர்கள் மங்கை யையும் மலர்களையும் ஒப்பிட்டு கவிதை படைத்தனர். 1964 இல் வெளி வந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் வெளிவந்த பாடல் மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டுமே மனம் என்ற கறுவண்டு பறக்கட்டுமே! 

                                                                         இந்த பாடலைல் கவிஞர் கண்ணதாசன் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை என்றாலும் விஸ்வநாதனின் இசை அமைப்பு நன்றாக உள்ளது Rock and Roll ஆங்கில இசைப்பாடல் போல இந்த பாடல் அமைந்துள்ளது. ஆடிடும் சின்ன உடல், பாடிடும் சின்ன இதழ், அஞ்சிடும் சின்ன இடை, கெஞ்சிடும் வஞ்சி இடை, இப்படி கவிஞ ரின் சொல் பிரவாகம் இந்த பாடலில் தாராளமாக கொட்டும் நீங்களும் இரு முறை பாட்டை கேட்டு இரசித்துப்பாருங்கள் அன்புடன் உங்கள் இரசிகன் பேசாலைதாஸ்

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...