சனி, 23 ஜனவரி, 2021

0027 கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள்

கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள் பேசாலைதாஸ்

 

கையில் வைத்துக் காத்திரு ந்தால் காலடியில் காத்திருக் கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு, இது நோர்வே நாட்டு நாய்கள் என்ன, எல்லா நாட்டு நாய்களுக்கும் பொருந்தும், ஆனால் அந்த நாய்கள் எசமான் கையில் இருக்கும் உணவை உண்டு விட்டு, அவன் காலடியிலே கிடக்கும், ஆனால் மனித நாய்கள் அப்படியல்ல, உண்ட அடுத்த கனமே அடி யோடு மறக்கும் மனம் கொண்டவன், மனிதன் மட்டுமே, அதனால் தான் வள்ளுவன் சொன்னான், உய்வில்லை செய் நன்றி மறந்தவர்களுக்கு என்று. 

சுயநலம் குடிகொண்டவர்கள் கையிலெடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் அன்புதானே? ராஜபாட் ரங்கத்துறையில் ஒரு கட்டம், ஒரு ஜமிந்தாரின் அண்ணன் என்று வேசம் போடும் படி சொந்த அண்ணனையே கேட்கின் றான் தம்பி. ``உங்கள் தம்பி நன்றாக இருக்கவேண்டும் என்று உங்களுக்கு அக்கறை இல்லையா? எனக்காக இந்த சின்ன உதவியைக்கூட செய்யக்கூ டாதா'' என்று அண்ணனிடம் வாதிடுகிறான். எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும், நிஜமான தம்பிக்கு அண்ணனாக நடிக்கும் வேஷத்தை மட்டும்தான் நான் போட்டதில்லை. அதையும் உனக்காக போடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார் அண்ணன்.

இப்படி ஒரு சூழலுக்கு பாடல் எழுதவேண்டும் என்றால்.... கவியரசருக்குக் கசக்குமா என்ன? கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக் கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு  என்று எழுதுகிறார். கையில் நாம் எதை வைத்திருக்கிறோம் என்பது கூடத் தெரியத்தேவையில்லை. ஏதே னும் வைத்திருக்கிறோம் என்று தெரிந்தால் போதும். நம்மையே சுற்றிச் சுற்றி வரும் நாய்கள் போலத்தான் சில மனிதர்களும். ஆனால், ஒன்றுமி ல்லை என்று தெரிந்த அடுத்த கணம், அவர்களே உதறித்தள்ளியும் சென்று விடுவார்கள். 

ராமாயணத்தில் ராமனுக்கு மூன்று தம்பிகள். மகாபாரதத்தில் தருமனுக்கு நான்கு தம்பிகள். அண்ணன் சொல் தட்டாத தங்கக் கம்பிகள். தான் கேள்வி ப்பட்ட இதிகாசத்தில் வரும் தம்பிகள் அத்துணை அன்போடு இருந்தார் களே, நிஜத்தில் அப்படி இல்லையே.... அது நாடகமா? இது நாடகமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அர்த்தம் பொதிந்த கவியரசரின் பாடல் வரிகளும், `இந்த ராஜபார்ட்டு ரங்கதுரை ஏழையல்லவோ' என்று தழுதழுக்கும் டி.எம்.எஸ்.ஸின் குரலும், பாடல் முடியும் தருணத்தில் தாளம் போடப் பயன்படுத்திய டேபிள் டென் னிஸ் மட்டைகளை அருகிலிருந்த இருக்கையில் வைத்த கையோடு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாய் பொத்தியபடி வெளியேறும் சிவாஜிகணேசனின் நடிப்பும், இந்தப்பாடலை வேறு ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றது. இப்போதும் எங்கேயாவது எப்போதாவது நன்றி மறத்தல் என்ற உணர்வை சந்திக்கும்போது கண்களில் தானாக கண்ணீர் துளிர்க்கும். உள்ளுக்குள் இந்தப்பாடல் ஆற்றுப்படுத்துவதாய் ஒலிக்கும்.

மனிதனுக்கு இந்த சுயநலம் என்ற எண்ணம் மட்டும் தோன்றாமலே இருந் தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உண்மையில் சுயநலத்தை துறப்பது பெரிய காரியமே அல்ல. நமது சுயநலத்தின் வட்டத்தை கொஞ்சம் கொஞ்ச மாக விரிவுபடுத்தினால் போதும். நாம், நம் குடும்பம், நம் நண்பர்கள், நம் உறவுகள், நம் ஊர், நம் இனம், நம் நாடு, நம்முடைய உலகம்...சுயநலத்தை தொலைத்துவிட்டால் வெளிஉலகம் மட்டுமல்ல... நம் அக உலகமும் மகிழ்ச்சியால் பூத்துத் திளைக்கும்தானே? அன்பர்களே பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ் 


                         

புதன், 20 ஜனவரி, 2021

0025சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே!

 சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ்

                       

                 செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் என்ற பாடலில் முதன்முதலில் வரும் விருத்தம் தான் இந்த சில்லென்று பூத்த சிறுநெரு ஞ்சிக்காட்டினிலே என்ற விருத்தம். செந்தமிழ் தேன்மொழியாள் " கவிஞர் கண்ணதாசன் " மாலை இட்ட மங்கை" என்ற படத்துக்கு எழுதிய மனதுகினிய காதல் பாட்டு. 1960 வெளிவந்த படம். பாடியவர் TR மகாலிங்கம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. இன்று வரை பல போட்டி மேடைகளிலும் பாடப்பட்டு,பாடுபவர் குரல் வளம் பரிசோதிக்கப் படும் பாடல் இந்தப்பாடல் அமைகின்றது.. ஆனால் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. ஒரு ஒப்பாரி பாட்டையும் ஒரு காதல் பாட்டிற்கு பல்லவியாக மாற்றும் கைவண்ணமும் மெட்டமைப்பும் ஒரு சிலருக்கே வரும். அங்குதான் கவிஞர் /மெல்லிசை மன்னன் அவர்கள் திறமை வெளி வருகிறது. அதைவிட சிறப்பு, டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் ஒரு ஞானியின் வெறுமை எப்போதும் படர்ந்திருக்கும். சில பாடல்களில் உறங்கி எழுந்த குழந்தையின் தலைகோதி செல்லங்கொஞ்சுகிற தாய்மையின் பிரதிபலிப்பு தென்படும். சோகத்தை மறைத்துக்கொண்ட ஒரு உலர் சந்தோஷம் உணரக் கிடைக்கும். ஆயிரமாயிரம் குரல்களுக்கு நடுவில் மகாலிங்கத்தின் குரலை இவையெல்லாம் தனிக்கச் செய்யும். இந்தப் பாடல் அப்படியானதொரு உதாரணம்!

அதைவிட சிறப்பு கவிஞர் கண்ணதாசனின் கவித்திறன், காதல் பொங்கும் இந்த பாடல் அத்தனை அழகு! காதல் ஒன்றி வர்ணிக்கும், இல்லாவிட்டால் துதிபாடும். இது இரண்டுக்கும் பக்கவாட்டில்! காதலின் வழியாக சக உயிரின் அன்பை சரண் அடையச்செய்கிற பாடல் இது. உண்மையான வர்ணனை, கடிதத்தின் இடைவரி போலவோ, சான்றிதழ் வாசகத்தின் அங்கீகாரம் போலவோ ஒருபோதும் தொனிக்காது, மாறாக அது கல்வெட்டின் வாக்கியம் போல தனிக்கும். கலையை, ரசனை விஞ்சுகிற இடம், அது  தன்னை மறத்தல் எனும் புள்ளியில் சாத்தியப்ப டுகிறது.  படர்க்கை விவரணையில் முழு பாடலையும் எழுதினார் கண்ணதாசன். கண்ணதாசன் இன்னொருவருக்கு தந்த பாடல் அல்ல, அது அவருடைய சொந்தப் பாடல். தயாரிப்பாளரே பாடல் ஆசிரியராக அமைந்த பாடல். ஒரு மேதைக்கு மறுவாழ்வு அளித்த பாடல். இப்போது உச்சரித்தாலும் வசீகரிக்க தவறாத பாடல்.  சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டிலே என்ற வரிகள், பிரிவாற்றாமையால் ஒப்பாரியில் விதைவை புலம்பியழும் ஒரு கிராமிய பாடல் வரிகள், இதனை முதலில் கம்பர் கையாண்டார், பின்னர் அதை என் கவி ஆசான் கண்ணதாசன் எடுத்தா ண்டார்.

" சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாளே" என்ற விருத்தத்தை கம்பர் கற்றறிந்ததே ஒரு சுவையான விடயம். ஒரு நாள் காலையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் காலை எழுந்து உலாவச் சென்றார். வழியில், ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. அந்த அழுகையின் ஊடே, ஒப்பாரியாக, "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், அவள் வாயினின்று வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளி வராத வாறு, அவள் வாயை யாரோ பொத்தி, அழுகையை அடக்கி விட்டனர்.

அதை அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், "சில்லென்று பூத்த...' என்ற சொற் றொடர், கவிச்சுவை பொருந்தியதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கும் என்பதை அறிய, ஆவல் கொண்டார். ஆனால், அவரது கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம் பக்கத்து வீட்டார்களை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டார்.

அவர்கள், "அந்த அழுகுரல், சமீபத்தில், தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது. கணவனை இழந்த பெண்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அழுது வருவது வழக்கம். அவ்வாறு அழுவதை நிறுத்துவது, அவர்களது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை...' எனத் தெரிவித்தனர்.

மறுதினமும், அதிகாலையில் அங்கே சென்று, அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார் கம்பர். வழக்கம் போல் அழுகைக் குரல், ஒப்பாரி ஓசையுடன் வெளிக் கிளம்பிற்று. அதிர்ஷ்ட வசமாக, பெண்ணின் வாயைப் பொத்த, ஆட்கள் சற்றுப் பின் தங்கி வர நேரிட்டது. எனவே, அந்த விதவைப் பெண் ஒப்பாரியில், "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறித்து புலம்பி அழுதாள். 

                         காலம் என்கிற ஒன்று இந்த பாடலின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது அதனால் இதை பழைய பாடல் என்று சொல்லுவதை எந்த மனமும் ஏற்க மறுக்கிறது.  இன்றுவரை என் மனதை கேட்கும் பொழுதெல்லாம் நெருடி வருடும் பாடல், அதை நீங்களும் கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்


சனி, 2 ஜனவரி, 2021

0026சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை?

 சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை?  பேசாலைதாஸ்


“Speech is silver, but silence is golden.” என்று ஆங்கிலத்தில் முதுமொழி உண்டு. சொல்லாத சொல்லின் பெறுமதி தெரிந்தவன் என் கவி ஆசான் கண்ணதாசன். இந்த பாடல் சிவ ரஞ்சனி ராகத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தாலும் பெரும்பா லான இடங்களில் அந்த ராகத்திற்கு உரிய ஸ்வரங்கள் மீறப்பட்டு ஒரு இனிய காதல் பாடலாக உள்ளது என இசை விற்பணர்கள் சொல்லவ்வர் கள். ஒரு கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்று, வரிகளில் கவிஞரும், காட்சியில் சிவாஜி மற்றும் சரோஜாதேவியும் இலக்கணம் வகுத்த பாடல். மெல்லிசை மன்னர்கள் எப்போதுமே ராகத்தை பட்டை தீட்டுவதில்லை. பாடலின் உணர்ச்சிகளை பட்டை தீட்ட இராகங்களை வளைத்தும், நெளித்தும் உபயோகிக்கிறார்கள் என்பது என் கருத்து.

                                     இந்த பாடலை பொறுத்தவரை காதல் உணர்ச்சியோடு ஒரு மன நெகிழ்வும் பாடலில் பிரதிபலிக்கும். பாடிய இருவரும் பாடும் பாவத்திலும் ஆமோதித்து கொடுக்கும் அந்த ஹம்மிங்கிலும் உணர்ச் சியை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு பக்க பலமாக குழல், வயலின், சிதார். பாடல் முழுவ தும் குழல் கூடவே பாடுவது போல் தோன்றும். தபலாவின் தாளம் ட்யூனின் ரிதத்தை நிலை நிறுத்தும் முத்தி ரையாக ஒலிக்கும்.

                                   இப்பாடலை குறித்து திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் ஒரு சுவாரசியமான தகவலை தினத்தந்தி மின் இதழில் எழுதியி ருந்தார். அதாவது கவியரசு, கதை – வசனம் – பாடல்கள் எழுதி தொடங்கிய ஒரு படம், படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது.    அந்தக்கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இர  ண்டு வீடுகள். ஒரு கணவன்-மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.

                              பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான். பக்கத்து வீட் டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தன் பெற்றோ ரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை.

திருமணம் நடக்கிறது.

முதலிரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது. உண்மை என்ன வென்றால், அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள். மனைவியை பிரிய நினைக் கிறான். தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகி றாள். “உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்து கொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண் டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன் அன்று அவன் சொல்லி விடுகிறான்.


வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது. அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.

கவிஞர் எழுதிய பாட்டின் பல்லவி இது-

“தாய் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்

தாய் தூங்கத் தாலாட்டு

நீ பாட வேண்டும்

நீ பாடும் தாலாட்டை

தாய் கேட்க வேண்டும்

தன் நிலை மாறி அவள்கூட

மொழி பேச வேண்டும்”


பின்னாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டபோது, முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை மாற்றி, காதல் பாடலாக எழுதி தந்தாராம் கவியரசு.


திருக்குறளிலே 'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க  சொல்லிற் பயனிலாச் சொல் '-  குறள் என்ற குறள் இந்த பாடலில் விரவி நிற்கின்றது


கண்ணதாசன் படிக்காத நூலகளே இல்லை எனலாம் . படித்ததை உள்வாங்கி எளிமை படுத்தி சூழலுக்கு ஏற்ப தந்ததில் அவருக்கு இணை யாரும் இல்லை .

கோவத்தில் சிதறும் வார்த்தைகள், நிரந்தர பிரிவை தந்திடும் . அங்கே சொல்லப்படாத சொற்கள் விலை மதிப்பற்றது  குடும்ப சூழலில் இது மிக அவசியம் . கோவம் வரும்போது சொற்கள் சிந்திவிட்டால், கண்ணீர் சிந்த வேண்டி வரும் .கொட்டிய வார்த்தை, உடைந்த கண்ணாடி ,கொட்டிய தண்ணீர்  மீண்டும் கிடைக்காது . 

ஆறுதலான வார்த்தை, அன்பான வார்த்தை ,புரிதலுக்கு வழி வகுக்கும் . 

மௌனம், அன்பாய் கைபிடித்து எதுவும் சொல்லாத நிலை  இவைகள் கூட  போதும் - பல அற்புதங்கள்  சாதிக்கும் 

சொல், மொழி, பொருள் இப்படி எதுவும் கிடையாது . அவைகள் சொல்லப்படும்  இடம் தான் முக்கியம் . எங்கே பேசக்கூடாதோ அங்கே மௌனம் ஒரு பெரிய மொழி . அதற்கு விலையே கிடையாது .

அதனால் தான் இப்படி எழுதினாரோ ?

'சொல்லென்றும் ,மொழியென்றும், 

பொருளென்றும் இல்லை 

சொல்லாத சொல்லுக்கு 

விலையேதுமில்லை '   என்றும் 

-மௌனமே பார்வையால்   என்றும் 

-பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து  விட்டால் 

அந்தப் பெண்ணின் நிலை ...?

-மௌனம் - என்றும் 

பேச மறந்து இருக்கும் நிலை 

தெய்வத்தின் சன்னதி -  என்றும் 

அற்புதமாய் பல  பாடல்களில் பதிவு செய்திருப்பார் .

ரசிப்போம்   மகிழ்வோம்    ! அன்புடன் பேசாலைதாஸ்


ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...